பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, பாடசாலை விடுமுறை காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும்போது அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் வகையில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசேட நடவடிக்கைக்காக 10,000 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.




