நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சமகி வனிதா பலவேகயவின் ருவன்வெல்ல தொகுதி அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணியாக நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் நடவடிக்கை மாறியுள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரே கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் முழு நாட்டையும் நிர்வகிக்கும் திட்டமொன்று உருவாக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதன் காரணமாக ஜனநாயகம் வீழ்ச்சியடைவதுடன், சட்டத்தின் ஆட்சியும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




