நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, செயற்பாட்டு அரசியல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுண கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அவர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷவின் தலைமையில் குறித்த நிகழ்வை நடத்த தற்போதைக்கு மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவும், ஊடகச் சந்திப்பொன்றை நடத்தவும் அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.




