இந்த ஆண்டு இதுவரை கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திக்குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் இயற்கை எரிவாயுவைக் கண்டறியும் நடவடிக்கைகளையும் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 04ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் (Furnace Oil) மற்றும் நாப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு லீற்றர் நாப்தாவின் விலை 210 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக, 35 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஒரு லீற்றர் எரிபொருள் எண்ணெயின் விலை 248 ரூபாயிலிருந்து 210 ரூபாயாக, 38 ரூபாயால் குறைக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




