Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் குழந்தைகளிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

இலங்கையில் குழந்தைகளிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

spot_img

கொழும்பு: இலங்கையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

பிறப்பு முதல் 19 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் வருடாந்தம் சுமார் 900 முதல் 1,000 வரையான புற்றுநோய் நோயாளர்கள் நாட்டில் பதிவாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளிடையே அதிகளவில் கண்டறியப்படும் புற்றுநோய் வகைகளில் இரத்தப் புற்றுநோய் (லுகேமியா), நிணநீர் சுரப்பி புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் தொடர்பான புற்றுநோய்ஆகியவை அடங்குவதாக வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சரியான சிகிச்சையை வழங்குவதன் மூலம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, குழந்தைகளில் ஏற்படும் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், அவற்றை ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் பலி

தெஹிவளை, கௌடான , சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், 10 மற்றும்...

மஹிந்த-மைத்திரி கால நிலக்கரி கொள்முதலில் ரூ.414 கோடி இழப்பு

கொழும்பு: கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஏழு வருட காலப்பகுதியில், இலங்கை நிலக்கரி நிறுவனம் நுரைச்சோலை...

துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! கொழும்பு உயர்...

நிரந்தரமாக சிறைக்கு செல்லும் ஞானசார தேரர்!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என...

More like this

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் பலி

தெஹிவளை, கௌடான , சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், 10 மற்றும்...

மஹிந்த-மைத்திரி கால நிலக்கரி கொள்முதலில் ரூ.414 கோடி இழப்பு

கொழும்பு: கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஏழு வருட காலப்பகுதியில், இலங்கை நிலக்கரி நிறுவனம் நுரைச்சோலை...

துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! கொழும்பு உயர்...