சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்த பின்னர், ஐக்கிய அரபு அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக தூதரக மட்டத்தில் தலையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.




