காலி தலங்கஹ பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் முன்னாள் பூஸ்ஸ சிறைச்சாலையின் அதிகாரி உயிர்ந்துள்ளார்.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் நேற்று விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3 வயது தொடக்கம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்வாறு விசர் நாய் கடிக்குள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது, குறித்த பகுதி இளைஞர்களினால் நாய் தாக்கப்பட்டு இறந்துள்ளது. நாயின் தலைப் பகுதியை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஏ. சி. எம். பஸால், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் ஆகியோரின் ஆலோசனையில் இன்று அப் பிரதேசத்திலுள்ள கட்டாக் காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அந்நியச் செலாவணி இருப்புகளைப் புரிந்துகொண்டு வாகனங்களை இறக்குமதி செய்ததாகக் கூறிய அவர், அதிகபட்சமாக ஒரு பில்லியன் டாலர்களுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை ஈட்டித் தருவதற்காகவும், சில கட்டுப்பாட்டை உருவாக்குவதற்காகவும் தற்போது வாகனங்கள் மீதான வரிகள் விதிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் திங்கள் கிழமை இரவு 32 வயது பெண் வைத்தியரை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கல்நேவயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவரிடம் இருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், ஏற்கனவே குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவின் மார்க்காமில் உள்ள ஒரு வீட்டில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் ஆல்பிரட் தொரியப்பாவின் பேத்தி ரகுதாஸ் நிலாக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த வீடு கனடாவின் மார்க்காமில் உள்ள காசில்மோர் அவென்யூவில் அமைந்துள்ளது, மேலும் யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் பகுதியில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த இளம் பெண், இரண்டு ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த வீடு இதற்கு முன்பு இரண்டு முறை குறிவைக்கப்பட்டுள்ளது, இந்த முறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். துப்பாக்கிதாரிகள் வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஒரு நாயையும் சுட்டுக் கொன்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நான்கு சந்தேக நபர்களும் நவீன டாக்ஸியில் தப்பிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக கனேடிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை, கனடாவில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவு தொடர்பில் தமிழீழ மாவீரர் பணிமனை உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எமது தேசத் தலைவருக்கு, தலைவரின் வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர், தாயக மற்றும் தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து வீர வணக்கம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் நடாத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஐரோப்பிய நாடொன்றிலும் 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக வீர வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முதலாவது ரயில் இன்றைய தினம் அடங்களாக 14, 16, 21, 23, 28 மற்றும் 31 திகதிகளில் இரவு 7.30 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவுள்ளது.
இரண்டாவது ரயில் குறித்த தினங்களில் மாலை 5.20 இற்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கவுள்ளது.
மூன்றாவது ரயில் நாளை (13) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தினசரி காலை 5.30 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும், நான்காவது ரயில் குறித்த தினங்களில் பிற்பகல் 1.50 இற்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் சேவையினை முன்னெடுக்கவுள்ளது.
இன்று கதிர்காமம் கிரிவெஹர விகாரையின் தலைவர் கோபவக தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து விசாரிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது கிரிவெஹேரவில் சோரத தேரரால் மஹிந்த ராஜபக்ஷவுக்காக நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் வீடு தொடர்பிலான விசாரணைக்கு விஹாராதிபதி தேரர் அழைக்கப்பட்டிருந்தார்.
இதே சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ருஹுனு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர நேற்று (10) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இலங்கையின் மிகப்பெரிய வண்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தியாளரும், Asian Paints Group இன் கீழ் அங்கம்வகிக்கின்ற நிறுவனமுமான Asian Paints Causeway, அண்மையில் கொழும்பு BMICH இல் நடைபெற்ற 'Architect 2025' கண்காட்சியில் ஒரு சிறந்த தாக்கத்தைஏற்படுத்தியிருந்தது. Sri Lanka Institute of Architects (SLIA) ஏற்பாடு செய்த Architect 2025 மூன்று நாள் கண்காட்சியானது, கட்டடக் கலைஞர்கள், உள்ளக வடிவமைப்பாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், தொழில்துறை வல்லுநர்கள், கட்டடக்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட6,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து, மகத்தானவெற்றியைப் பதிவு செய்தது. இக்கண்காட்சியில் Asian Paints Causeway அதன் இரண்டு விரிவான கூடங்களில் தனித்துமாககாட்சியளித்தது. வருகை தந்த பார்வையாளர்களுக்கு தமதுவிரிவான தயாரிப்பு வகைகளை காட்சிப்படுத்தியதோடு, பங்குபற்றலுடனான செயற்பாடுகளையும் நிபுணர்ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்கு அற்புதமானஅனுபவத்தை வழங்கியது.
இந்நிகழ்வு குறித்து Asian Paints International Pvt. Ltd. பிராந்தியத்திற்கான தலைவர் சிரீஷ் ராவ் கருத்துவெளியிடுகையில், “Architect 2025 என்பது உள்ளூர்கட்டுமானத் துறைக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். Asian Paints Causeway இக்கண்காட்சியில் பங்குபற்றியதுசந்தையில் எமது தலைமைத்துவத்தை பிரதிபலித்தது. இந்தகண்காட்சித் தளமானது, தொழில்துறை வல்லுநர்கள், பங்குதாரர்கள் மற்றும் நுகர்வோருடன் நேரடியாகதொடர்புறுவதற்கு எமக்கு உதவியது. இது எமதுவர்த்தகநாமத்தின் தாக்கத்தை அவர்கள் மத்தியில் மேலும்வலுப்படுத்தியது. எமது அர்ப்பணிப்புள்ள குழு மற்றும் எமதுமாறுபட்ட கூடத்தின் அனுபவம் ஆகியன Asian Paints Causeway வர்த்தகநாமத்தை இக்கண்காட்சியில்தனித்துவமாக அடையாளப்படுத்த உதவியது." என்றார்..
Asian Paints Causeway இன் நீர்புகாத அம்சம் கொண்டதயாரிப்புகள் பார்வையாளர்களை ஈர்த்ததோடு, எமதுஆலோசனை நிபுணர்களுக்கும் பார்வையாளர்களுக்கும்இடையே நீண்ட மற்றும் நுண்ணறிவுமிக்ககந்துரையாடல்களுக்கு வழிவகுத்தது. SLIA இனால்அங்கீகரிக்கப்பட்டு SLS மற்றும் Green certification (பசுமைசான்றிதழ்) மூலம் அங்கீகாரம் பெற்ற இத்தயாரிப்புகள், அவைகொண்டுள்ள நிரூபிக்கப்பட்ட செயற்றிறன் மற்றும்தொழில்துறை அங்கீகாரம் ஆகியன நுகர்வோரின்நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தின.
இக்கண்காட்சியில் அதிக கூட்ட நெரிசல் கொண்ட ஒருபகுதியாக Asian Paints Causeway இன் மரத் தோற்ற பூச்சுகள்(wood finishes) அமைந்திருந்தது. இத்தயாரிப்பு வகைகளின்உயர்ந்த ஆயுள், அழகியலின் ஈர்ப்பு மற்றும் பயன்பாட்டுசெயன்முறையை ஆராய்வதில் பார்வையாளர்கள் ஆர்வமாகஇருந்தனர். இதேவேளை, நவீன வீட்டு உரிமையாளர்கள்மற்றும் நிபுணர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பானவண்ணப்பூச்சு சேவையான Safe Painting, அதன் மேலதிகமதிப்பு சேர்க்கப்பட்ட அம்சங்கள் மற்றும் தொந்தரவு அற்றதீர்வுகள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றதால், மிகுந்த ஆர்வத்தை அவை ஏற்படுத்தியிருந்தன.
Asian Paints Causeway இன் நேர்த்தியான உள்ளகவடிவமைப்புகளுக்கான நிறப்பூச்சுகளை வெளிப்படுத்தும்Royale Play ஆனது, கண்காட்சிக் கூடத்தில் ஒருகவர்ச்சிகரமான ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்தனித்துவமான அமைப்புகளையும் தோற்றங்களையும்நேரடியாகத் தொட்டு உணரவும், அது தொடர்பானஅனுபவத்தை பெறுவதிலும் பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டனர். வண்ண மாதிரிகளைக் கொண்ட காட்சிப்படுத்தல்கள்அர்த்தமுள்ள எடுத்துக்காட்டாக இருந்தன. கட்டடக்கலைஞர்கள், மாணவ கட்டடக் கலைஞர்கள் மற்றும்நுகர்வோர், உள்ளக மற்றும் வெளியக சுவர்களுக்கு ஏற்றவண்ணங்களின் சேர்க்கைகளை ஆராய்ந்து தெரிவு செய்யவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
Architect 2025 கண்காட்சியில் நிறுவனத்தின் பங்கேற்பானது, தொழில்துறை வல்லுநர்களிடமிருந்து அதிகளவான பயிற்சிகோரிக்கைகளையும், அதன் தயாரிப்புகளுக்கான அதிககேள்வியையும் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின்கட்டுமானம் மற்றும் வடிவமைப்பாளர்கள் சமூகத்திற்குள்உறவுகளை வலுப்படுத்தவும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்குமான ஒருஅற்புதமான தளமாக இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது.
சந்தையில் முன்னணியில் உள்ள தலைவன் எனும் வகையில், இலங்கையின் கட்டுமானத் துறையில் புத்தாக்கம் மற்றும்விசேடத்துவத்தை மேம்படுத்துவதில் Asian Paints Causeway அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது. நீடித்து உழைக்கும்தன்மை, அழகியல் மற்றும் செயற்பாட்டு ரீதியானமுக்கியத்துவம் ஆகியவற்றை மீள்வரையறை செய்து, உயர்ந்தசெயல்திறன் மிக்க தீர்வுகளை நிறுவனம் தொடர்ச்சியாகவழங்கி வருகிறது.