web log free
July 31, 2025
kumar

kumar

இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்காக இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக Times Of India செய்தி வௌியிட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை துறைமுகங்களில் கடற்படை கப்பல்கள் மற்றும் உளவுக் கப்பல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் Times Of India தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 2, 3 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆயுதப் படையினரின் திறனை விருத்தி செய்வதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், இதற்கமைய இலங்கைக்கான 150 மில்லியன் டொலர் பாதுகாப்பு கடன் வசதியை இந்தியா நீடித்துள்ளதாகவும் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இந்த மாத தொடக்கத்தில் கொழும்பில் நங்கூரமிடப்பட்ட நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பலான SHI YAN 6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபா. 

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 42 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 417 ரூபா.

இதேவேளை, ஓட்டோ டீசல் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபா.

சுப்பர் டீசல் 1 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 359 ரூபா. 

மண்ணெண்ணெய் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 231 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சிக்கு சவால் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (31) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாட்டில் பொஹோத்வாவுக்கு மக்கள் ஆணை இல்லை எனவும், ஆனால் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்து மக்கள் கருத்தை கட்டியெழுப்ப கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

பொலன்னறுவை பிரதேசத்திலும் இவ்வாறான கூட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் மக்கள் விருப்பத்துடன் பங்கேற்கவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

அம்பலாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (ஆகஸ்ட் 31) நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் பலபிட்டிய, வலகெதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வேனில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் சில தினங்களில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்தத் பரீட்சை, ஜனவரி 23 முதல் பிப்ரவரி 17, 2023 வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும்  பரீட்சைக்கு தோற்றினர்.

ஆசிரியர்களின் தொழில்முறை நடவடிக்கைகளால் உயர்தர விடைத்தாள்களை சரிபார்ப்பதில் அவ்வப்போது தடங்கல் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை பரீட்சை திணைக்களம் ஒத்திவைத்தது.

உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும் பல இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்களின் பெறுபேறுகளை ஆறு மாதங்களுக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் இரு கைதிகளை கொன்ற மூளைக்காய்ச்சல் பாக்டீரியா தொற்றுக்குள்ளான நோயாளி கொழும்பு மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயாளி ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும் ரத்மலானை சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரசபையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர் காய்ச்சல் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி ஜே. எம். குணதிலக்கவிடம் கேட்ட போது அவர் கூறினார்.

இந்த நபர் பணிபுரிந்த இடத்தில் இருந்த சுமார் 30 நண்பர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். 

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை நிறுவுவது பயங்கரவாதம் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாகக் காவி உடை தரித்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் தனி மனித சுதந்திரத்திற்கும், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கும், நிர்வாகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்வாறன சொற்பாடுகள் இடம்பெறுவதை நாட்டின் சட்டம் அங்கீகரிக்கப் போகின்றதா என்றும் அருட்தந்தை மா.சத்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

பௌத்தத்தின் பெயரால் நீதித்துறைக்கும், பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கும் ஏனைய சமய தலைவர்களுக்கு எதிராக செயற்படுவதையும் எந்த சட்டம் அங்கீகரிக்கின்றது.

ஆகவே நாட்டில் மீண்டும் இனவாத மதவாத வன்முறைகள் பலவந்தமாகத் தூண்டப்படுகின்றதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்தவர், மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று உறுதியாக கூறினார்.

ஜெஃப்ரி லாங் ஒரு புற்றுநோயியல் நிபுணரும், நியர்-டெத் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் ஆவார்.டாக்டர் ஜெஃப்ரி லாங் தனது பணியின் போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்று உறுதியாகக் கூறினார்.

டாக்டர் ஜெஃப்ரி லாங் கூறுகையில், அவர் படித்த நோயாளிகள், மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவத்தின் தருணத்தில், ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து அலைந்து திரிந்ததாகக் கூறினார்.

பின்னர் ஆன்மா வேறொரு உலகத்தில் நுழைந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்றது, அதன் முடிவில் சுரங்கப்பாதையில் ஒரு பிரகாசமான ஒளி இருந்தது.

நோயாளிகள் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றதாகவும், அந்த நேரத்தில் அவர்களின் உண்மையான வீடு இருப்பதாக அவர்கள் உணர்ந்ததாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் 3000 தாதியர்களை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (29) அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.

பிரச்சினை இருப்பின் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் 3000 தாதியர்களை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (29) அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.

பிரச்சினை இருப்பின் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd