web log free
August 02, 2025
kumar

kumar

தற்போது வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு மூன்று பெயர்களை பரிந்துரைப்பார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சி.டி. விக்கிரமரத்ன இரண்டு சேவை நீடிப்புகளைப் பெற்ற பின்னர் ஐ.ஜி.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அடுத்த பொலிஸ் மா அதிபரின் சிரேஷ்ட நிலைபடி பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, எல்.எஸ்.பதிநாயக்க, தேஷ்பந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய, பி.பி.எஸ்.எம் தர்மரத்ன ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, சிரேஷ்ட நிலைக்கு ஏற்ப மூன்று பெயர்களை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பார். 

அரசாங்கத்தில் பதவி வகிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைச்சர்கள் குழுவொன்று புதிய அரசியல் சக்தியொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பல கேபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

இந்த குழு கடந்த சில மாதங்களில் அவ்வப்போது கூடி புதிய வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர்  அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பேராசிரியர்  அதுல சேனாரத்ன,

“எதிர்காலத்தில் இதுபோன்ற அதிர்ச்சிகள் ஏற்படலாம். ஏற்படும் அதிர்ச்சிகளால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. இலங்கையில் இவ்வாறான அதிர்ச்சிகள் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

திருகோணமலையிலிருந்து உஸ்ஸங்கொடை வரையிலான செயலற்ற நிலத்தடி எல்லை. மற்றும் மத்திய மலைகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் அருகாமையில். சுனாமி போன்ற விபத்து ஏற்பட்டால் சுமத்ராவின் முனையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் நிச்சயம் சுனாமி அலைகளை அனுபவிக்க நேரிடும்.

ஆனால் சமீபகாலமாக அப்படியொரு நிலை ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், சமீபத்தில் அந்த பகுதியில் இதுபோன்ற பல அதிர்ச்சிகள் நடந்தன.

ஒன்றரை கோடி பெறுமதியான தங்கம் சுங்கத்தால் கைப்பற்றப்பட்டதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அழுத்தம் கொடுத்து அபராதம் கூட கொடுக்காமல் விடுவித்ததாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு குறிப்பிடுகின்றார்.

இணைய சேனலொன்றில் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனை வஜிர அபேவர்தன மறுத்தாலும் அழுத்தம் காரணமாக எந்தப் பயனும் இல்லை என எழுத்து மூலம் கூறப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பொருட்களுக்கான 154 மில்லியன் ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக சுங்கப் பணிப்பாளர் குறைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. 

சட்டமூலத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் ஏழாவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) முதல் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2019/2020/2021 ஆண்டுகளில் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட உயர் தர பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.studentloans.mohe.gov.lk எனும்இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை அறிய 070-3555970 அல்லது 070-3555979 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ள முடியும். 

இலங்கையில் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இதனால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் அதிர்ச்சி கொழும்பு, காலி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான 100 கிலோகிராம் கேரள கஞ்சா மன்னார் இலுப்பகடவாய் தடாகத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால்  கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான SLNS புவனேகா மற்றும் SLNS கஜபா ஆகிய கப்பல்களால் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மொத்தம் 92 கிலோகிராம் 250 கிராம் கேரள கஞ்சாவைக் கொண்ட மூன்று மூட்டைகள் அருகிலுள்ள புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 

இதன்படி, போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வற் வரி அதிகரிப்புடன் சிகரெட் ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 4 வகைகளின் கீழ் சிகரெட்டின் விலை ரூ. 5/-, ரூ. 15/-, ரூ. 20/-, மற்றும் ரூ. 25/ ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதம் காலை 09.30 மணிக்கு ஆரம்பமானது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd