இலங்கையினால் வௌியிடப்பட்ட இறையாண்மை பத்திரத்தில் முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணம் மற்றும் வட்டியை செலுத்துமாறு மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது தங்கள் முதலீடு செய்த 257.5 மில்லியன் டொலர் மற்றும் முதலீட்டுக்கான வட்டியை செலுத்துமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையினால் வழங்கப்பட்ட 1 பில்லியன் டொலர் பெறுமதியான இறையாண்மைப் பத்திரம் அடுத்த மாதம் 25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளது.
இலங்கை இதுவரை இரண்டு இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியுள்ளதாக குறித்த வங்கி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி பொறுப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் சிலர் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தானும் தன் குழுவினரும் கடிதம் ஒன்றைக் கொடுப்பதற்காக அங்கு வந்ததாக ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் ஆசனங்களையும் கூட்டுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இதன் முதல் கூட்டம் வரும் 24ம் திகதி அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக மஹர தேர்தல் தொகுதியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே தொடர்ந்து நடந்துவரும் மோதல்கள் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும்.
அது பற்றி விஜய் அஜித் என இருவருமே அட்வைஸ் கூறினாலும் மோதல்கள் குறைந்தபாடில்லை.
இயக்குனர் வெங்கட் பிரபு தான் விஜய் மற்றும் அஜித் இருவரையும் இணைக்கும் படத்தை திட்டமிட்டு வருவதாக நீண்டகாலமாக கூறி வருகிறார்.
ஆனால் அதற்கான சூழ்நிலை தற்போது வரை அமையாமல் தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது விஜய் - அஜித் இணையும் படத்தின் அறிவிப்பை விரைவில் வெங்கட் பிரபு வெளியிட இருப்பதாக அவரது அப்பா கங்கை அமரன் தெரிவித்து இருக்கிறார்.
இது பான் இந்தியா படமாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்வது அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாளை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் தீர்ப்பு வெளியாகும் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றில் நேற்று அறிவித்திருந்தார்.
வெளிநாட்டு நாணயத்தில் பெறக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு நாணயத்தில் மட்டுமே எரிபொருளை வழங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்கும் வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அதில் கணிசமான அளவு வெளிநாட்டு நாணயங்கள் பெறப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணயங்கள் பல்வேறு நபர்களின் வசம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் அதனை வெளியில் எடுப்பதற்கு இந்த பிரேரணையை பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான காகிதங்கள் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பாடசாலை சீருடைகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவது குறித்து உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சீன அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என தம்மிக்க பெரேரா உறுதியளித்துள்ளார்.
தம்மை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தாம் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அரசாங்க அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா உறுதியளித்துள்ளார்.
நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நான்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வர்த்தகர் தம்மிக்க பெரேரா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இந்த மனுக்கள் இன்று (21) மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA), ஊடகவியலாளர் ரொயல் ரேமண்ட், எழுத்தாளர் காமினி வியங்கொட உள்ளிட்ட நான்கு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அரசியலமைப்பின் 99A பிரிவுக்கு இணங்க, மனுதாரரின் நிலைப்பாடு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட வேட்புமனு அல்லது தேசியப் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, அத்தகைய வெற்றிடத்தை நிரப்ப ஒரு நபர் பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியுடையவர்.
அரசியலமைப்பின் 99 ஏ பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பட்டியலிலும் அல்லது பொதுஜன பெரமுனவிற்காக SLPPயினால் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு தேர்தல் மாவட்டத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு வேட்புமனுவிலும் தம்மிக்க பெரேராவின் பெயர் இல்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.
அரசியலமைப்பின் 91(1)(இ) பிரிவு, அரசு அல்லது பொதுக் கூட்டுத்தாபனத்தின் சார்பாக செய்யப்பட்ட அத்தகைய ஒப்பந்தத்தில் அத்தகைய ஆர்வமுள்ள ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்கிறது என்று மனுதாரர்கள் கூறினர்.
இதன்படி, தம்மிக்க பெரேராவின் நியமனம் சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது, மிகவும் நியாயமற்றது, சட்டத்திற்கு முரணானது மற்றும் சரிபார்க்கப்படாவிட்டால், இலங்கை மக்களுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாரதூரமான மற்றும் சீர்படுத்த முடியாத தீங்கு மற்றும் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இந்த நியமனம் சரத்து 10 (சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்), 12(1) (சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கான உரிமை) ஆகியவற்றின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதும், தொடர்ந்து மீறுவதும் ஆகும் என்று மனுதாரர்கள் மேலும் தெரிவித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, விரான் கொரியா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
தம்மிக்க பெரேரா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இலங்கையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸ் முதல் முறையாக தந்தையானார். இதனை அவரது தந்தை தினேஷ் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
"திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை குசலின் மனைவி நிஷேலுக்கு பெண் குழந்தை பிறந்தது. புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் அவரது தாயார் இருவரும் நலமாக உள்ளனர்," என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 87 ரன்கள் எடுத்த 27 வயதான வலது கை பேட்டர், திங்கள்கிழமை காலை தனது மகளைப் பார்த்தார்.
"போட்டி முடிந்த உடனேயே குசல் மருத்துவமனைக்கு (நைன்வெல்ஸ் மருத்துவமனை) ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தார். அந்த நேரத்தில் பிரசவம் நடக்கவில்லை. இருப்பினும் அவர் இன்று காலை குழந்தையைப் பார்த்துள்ளார்" என்று தந்தை மேலும் கூறினார்.
அந்தப் பெண்ணுக்கு ஹெய்லி என்று பெற்றோர் பெயரிட்டுள்ளனர்.
இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்