ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பதாக ‘ஈஸ்டர் தாக்குதல் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, இந்த சதி தொடர்பாக தீர்மானகரமான சாட்சியங்களை வழங்கியிருந்ததாக தெரிவித்தார்.



