Homeஉள்நாட்டு செய்திஇலங்கை நாடாளுமன்ற உணவு மற்றும் சீருடை செலவு ரூ.894 மில்லியன்!

இலங்கை நாடாளுமன்ற உணவு மற்றும் சீருடை செலவு ரூ.894 மில்லியன்!

spot_img

இலங்கை நாடாளுமன்றத்தினால் சபாநாயகரின் அலுவலகம், நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் உத்தியோகபூர்வ சீருடைகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020–2024) ரூ.894,013,863 செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் மேற்கொண்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதில் அதிகூடிய தொகை நாடாளுமன்ற பணியாளர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. அந்தத் தொகை ரூ.873,703,294 ஆகும்.

இதே காலப்பகுதியில் சபாநாயகரின் அலுவலகத்திற்கான உணவு மற்றும் உத்தியோகபூர்வ சீருடைகளுக்காக ரூ.10,716,979 செலவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் பானங்களுக்காக இந்தக் காலப்பகுதியில் ரூ.9,593,590 செலவிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கான உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.247,049,010.08 செலவிடப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.2,278,758.12 செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் நான்கு உணவகங்கள் இயங்கி வருகின்றன. நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாத சாதாரண நாட்களில் சுமார் 1,200 பேருக்கும், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் சுமார் 1,800 பேருக்கும் சராசரியாக மதிய உணவு தயாரிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்

இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம்...

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளது – அமைச்சர் கே.டி. லால் காந்த

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளதாகவும், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரச துறை பலவீனமாக செயற்பட்டு வருவதாகவும் விவசாயம்,...

அதிக மாதச் சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 120ஆவது இடம்

உலகில் அதிக மாதச் சம்பளம் வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச...

எந்தவொரு அரசாங்கத்திற்கும் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் இனி தவிர்க்க வேண்டும்

– சஜித் பிரேமதாச எந்தவொரு அரசாங்கத்திற்கும் மக்கள் அலையின் அடிப்படையில் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், இனிமேல்...

More like this

இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்

இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம்...

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளது – அமைச்சர் கே.டி. லால் காந்த

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளதாகவும், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரச துறை பலவீனமாக செயற்பட்டு வருவதாகவும் விவசாயம்,...

அதிக மாதச் சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 120ஆவது இடம்

உலகில் அதிக மாதச் சம்பளம் வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச...