இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3,25,310 ஆகும்.
அதன்படி, கடந்த 26ஆம் திகதி 1,63,763 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன. அன்றைய தினம் ரூ.6 கோடியே 40 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, 27ஆம் திகதி 1,61,553 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பைப் பயன்படுத்தியுள்ளன.
அன்றைய தினம் கிடைத்த வருமானம் ரூ.6 கோடியே 41 இலட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




