Homeஉள்நாட்டு செய்தி7,550 வழக்குகளை நிலுவையில் வைக்க அமைச்சர் பணிப்பு

7,550 வழக்குகளை நிலுவையில் வைக்க அமைச்சர் பணிப்பு

spot_img

மலையகத் தமிழ் சமூகத்தினர் கடந்த 200 ஆண்டுகளில் நாட்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகக் கொண்டு வந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

அந்தப் பணத்தின் மூலமே இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குத் தேவையான எரிபொருள், மருந்துகள் மற்றும் உரங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளதாகக் கூறி வழக்குத் தொடருமாறு தமது அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்தக் காணிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாத நிலை இருப்பதால், வழக்குகளைத் தாமதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது இதுபோன்ற 7,550 வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றில் சில வழக்குகள் தொடரப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளைக் கொண்ட நவோதயபுரம் வீடமைப்புத் திட்டத்தை மலையகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்...

இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்

இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம்...

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளது – அமைச்சர் கே.டி. லால் காந்த

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளதாகவும், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரச துறை பலவீனமாக செயற்பட்டு வருவதாகவும் விவசாயம்,...

அதிக மாதச் சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 120ஆவது இடம்

உலகில் அதிக மாதச் சம்பளம் வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச...

More like this

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்...

இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்

இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம்...

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளது – அமைச்சர் கே.டி. லால் காந்த

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளதாகவும், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரச துறை பலவீனமாக செயற்பட்டு வருவதாகவும் விவசாயம்,...