அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவது பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கி, குற்றச் செயல்கள் நிறைந்த அரசாக மாறியிருந்த நாட்டை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கான மக்கள் ஆணையே தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், நிலக்கரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அமைச்சர் குமார ஜயக்கொடி பதவி விலகியதற்கும் இதுவே காரணம் எனவும் மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குமார ஜயக்கொடி 100 சதவீதம் சரியானவர் என தாம் நம்பினாலும், அவர் சட்டத்திற்கு இடமளித்து பதவியில் இருந்து விலகியதாகவும், அரசாங்கத்தில் உள்ள 160 பேருக்கும் எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.




