web log free
May 19, 2025
kumar

kumar

2020 ஜூன் மாதம் இறக்குமதி தடை விதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 6969 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் 3809 மோட்டார் கார்கள் மற்றும் உதிரி வாகனங்கள், 2971 லொறிகள், பாரவூர்திகள், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், அம்புலன்ஸ் உள்ளிட்ட 189 சிறப்பு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அதாவது 4348 வாகனங்கள் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது இறக்குமதி செய்யப்பட்டன.

அந்த ஆண்டில் 2,409 மோட்டார் கார்கள் மற்றும் பிற வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த வாகனங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டவை என சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்பில் சுங்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சம்பந்தப்பட்ட பொருட்களின் பெறுமதியில் மூன்றில் ஒரு பங்கு தொகை வழங்கப்படும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதியின் காரணமாக 2018 ஆம் ஆண்டில் சுங்கத்துறைக்கு 187 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைத்துள்ளதாகவும், இது அந்த வருடத்தில் சுங்கத்தின் மொத்த வருமானத்தில் 23 வீதமாகும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, இந்த வருடம் சுங்கத்தின் மொத்த வருமானத்தில் 1.5 வீதம் வாகன வரியாக ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காக ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொள்ள பாடுபடுவேன் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில், தான் நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன் எனவும், தன்னை யாராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மதத் தலைவர்கள் மற்றும் செல்வாக்கு குழுக்களின் ஆசீர்வாதம் ஏற்கனவே கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்க கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்கெடுப்பின் பின்னர் நீக்கப்பட்டார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் அரசாங்க அமைச்சர்களுக்கும் அவருக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

அடுத்த வருடத்திற்கான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் விவாதத்தின் போது அல்லது வரவு செலவுத் திட்டத்தின் போது ஏதேனும் அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பொஹொட்டுவையில் உள்ள சில குழுக்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை விமர்சித்து வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம் என கூறி எப்படியாவது அமைச்சர் பட்டம் பெற்றுக்கொள்ள ஜனாதிபதியை அடிப்பணிய வைக்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டார் என அவருக்கு விசுவாசமானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தை இரண்டாம் வாசிப்பில் தோற்கடிக்காமல், வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்துடன் தொடர்புடைய எம்.பி.க்கள் குழுவொன்று வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டால் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் மொட்டு தற்போதுள்ள பெரும்பான்மை பலத்தை இழக்க நேரிடலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இருபதாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளை உடனடியாக தீர்க்கக் கோரி நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகவுள்ளதாக தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 20,000 ரூபா சம்பளத்தை அதிகரிக்கக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த அரச ஊழியர்களும் நாளை மறுநாள் வீதியில் இறங்குவதற்கு தயாராக உள்ளதோடு, தனியார் துறை, அரை அரச துறை ஊழியர்களும் இதேபோன்ற தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 

அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சு மாற்றத்திற்கு எதிராகப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் கருத்துக்களுக்கு புதிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா பதிலளித்த பின்னர், பொஹொட்டுவேயைச் சேர்ந்த பல அமைச்சர்கள் நாமல் ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு லான்சாவின் கருத்துக்கு ஏன் பதிலளிக்கவில்லை என வினவியுள்ளனர். 

லான்சாவின் கூற்றுக்கு ஊடகங்கள் மத்தியில் பெரும் விளம்பரம் கொடுக்கப்பட்டதன் காரணமாக சில அமைச்சர்கள் நாமலின் வீட்டிற்குச் சென்று நாமலைச் சந்தித்து இது குறித்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அவர்கள் அனைவரும் எதிர்பார்க்காத பதிலை நாமல் வழங்கினார்.

“அவ்வளவு யோசிக்க வேண்டாம்..லான்சா கொஞ்ச காலம் எங்கள் குடும்பத்துக்காக இருந்தவர்..தேர்தலில் எங்களுக்கு உதவி செய்தார்..அவருக்கும் ஒரு பிரச்சனை வந்தது. அப்போது மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு சென்று அவர் பக்கம் நின்றார். அதனால் பதில் சொல்லத் தேவையில்லை. நான் அந்த அளவிற்கு போக விரும்பவில்லை" என கூறிய நாமலின் பதிலால் பொஹொட்டுவின் அமைச்சர்கள் வெறுங்கையுடன் வீட்டிற்கு வர வேண்டியதாயிற்று. 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பெறுவதற்கு தேவையான விலைமனு கோரப்படும் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்குத் தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கு விலை மனுக்களை சமர்ப்பிக்கலாம்.

விலை மனு சமர்ப்பிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், அதற்கான பொருத்தமான நிறுவனங்களைத் தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஆர்வலர் தனிஷ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் உள்ள 46 பிராந்திய செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அதில் மூன்று மாவட்டங்களில் உள்ள 13 பிராந்திய செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

27ஆம் திகதி பிற்பகல் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பின் பிரகாரம் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் மற்றும் எல்பிட்டிய, நயாகம, போபே பொத்தல, அம்பலாங்கொட, தவலம, நெலுவ, யக்கலமுல்ல, அக்மீமன ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இரண்டாம் நிலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் இகமடுவ, பத்தே., நாகொட மற்றும் காலி கோட்டை பிராந்திய செயலகப் பிரிவுகளில், முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெலியத்த மற்றும் ஒக்வெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவிப்பும், வலஸ்முல்ல மற்றும் கட்டுவன பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட, கம்புருபிட்டிய, கொட்டபொல, திஹகொட, மாத்தறை கடவத்சதர, அத்துரலிய, பிடபெத்தர, கிரிந்த புஹுல்வெல்ல, முலட்டியன, ஹக்மன, வெலிபிட்டிய, அக்குரஸ்ஸ, மற்றும் மாலிம்படை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்த, கிரியெல்ல, நிவித்திகல, அயகம மற்றும் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் பட்டமே அறிவித்தலும், குருவிட்ட, அஹெலியகொட, இரத்தினபுரி, பலாங்கொட, கொலொன்ன, இம்புல்பே, கொடகவெல, அலபத்த, கலவான, ஒபனாய, கலவான, ஓபனகே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பகுதிகளில் அதிக மழை பெய்யும் பட்சத்தில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெரு வீதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 6 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளதுடன் பல  மண்டபங்களுக்கும் தீ சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd