web log free
June 26, 2025
kumar

kumar

நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க.தலைமையில் நேற்று (20) கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பில்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஜனாதிபதி செயலணி ஒன்றிணைக்கும் என விஜயதாச ராஜபக் கூறினார்

நாட்டில் நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனைக்கு எதிராக போராடுவதற்கான வேலைத்திட்டத்தையும் இது அறிமுகப்படுத்தவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதுப்பிக்கும் நோக்கில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது இலங்கையர்கள் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா தகவல்படி, கைது செய்யப்பட்டவர்களில் குணா என்கிற சி குணசேகரன் மற்றும் பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்பராஜா ஆகியோர் அடங்குவர்.

அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத சப்ளையர் ஹாஜி சலீமுடன் நெருங்கிய தொடர்பில் பணியாற்றினர் என்று கூட்டாட்சி பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக அவர்கள் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை வியாபாரம் செய்து வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு மூன்று வகையான விசாக்களை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (20) தெரிவித்தார்.

இன்று அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, புதிய வீசா வகைகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்மூலம், முதலீட்டு விசா, வேலைவாய்ப்பு விசா மற்றும் CPC வதிவிட விசாக்கள் ஆகியவற்றை வெளிநாட்டவர்களுக்கு இலங்கை அறிமுகப்படுத்தும் என்றார்.

புதிய வகையான விசாக்கள் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்குத் தேவையான தயாரிப்புகளைச் செய்ய உதவும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறைக்கான ஆற்றல் பானங்கள், மரச்சாமான்களுக்கான MDF பலகைகள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட 10 பொருட்களில் அடங்கும்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (20) முதல் அமுலுக்கு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

 

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தோல்வியுற்ற ஸ்கிரிப்டை அடிப்படையாகக் கொண்ட நாடகம் என முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிடுகின்றார்.

இவர் கொலை செய்யப்பட்டு பொரளை மயானத்திற்கு கொண்டு வந்துள்ளமை சந்தேகத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுபவம் வாய்ந்த குற்றவாளி இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று தெரிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

பிரையன் தாமஸ் சந்தேகப்படும்படி மற்றொரு குழுவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிடத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமரவீர அணி ஆகியன இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படவுள்ளார்.

சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழர் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி, முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் அலகு ஒன்றுக்கு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, முதல் 30 அலகுகளுக்கு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிலையான கட்டணமாக 1,500 ரூபாயும், மற்றும் கட்டணமாக 3,000 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித, ஞாயிற்றுக்கிழமை (18) தெரிவித்தார்.

“மின் கட்டண திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் அலகு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது.

1,500 ரூபாய் நிலையான கட்டணங்களாகும். அதாவது 30 அலகுகளைப் பயன்படுத்துபவர் 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். மின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

இது கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு. மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என்றார்.

நேற்று (18) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது எஹேடுவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இன்று (19) அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதல் ஐந்து வருடங்களுக்கு பயிர் செய்யப்படாத அனைத்து வயல் நிலங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுவரை 100,000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில், 2023 ஆம் ஆண்டு அனைத்து வயல் நிலங்களும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் விவசாயம் செய்யப்படாத அனைத்து நிலங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், தரிசு நிலங்கள் அனைத்தும் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு விவசாய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இதுவரை உழவு செய்யப்படாத தரிசு நிலங்களின் உரிமையாளர்கள் மீண்டும் நடவு செய்தால் பிரச்சினை இல்லை என்றும், விவசாயம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஐந்தாண்டுகளின் பின்னர் அந்தந்த காணிகளில் பயிர் செய்தவர்களுடன் ஒப்பந்தம் செய்து நில உரிமையாளர்கள் தேவையானால் விவசாயம் செய்ய முடியும் எனவும், விவசாயம் செய்யாத பட்சத்தில் காணியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd