web log free
December 17, 2025
kumar

kumar

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். 

கைதான சந்தேகநபரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

மீகொட பகுதியில் நேற்று (12) மதியம் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. 

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது காரில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

பாதுக்கை, வட்டரெக பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

காணித் தகராறுகள் தொடர்பாக உயிரிழந்த சாந்த முதுங்கொட்டுவ பொலிஸில் முறைப்பாடுகள் சிலவற்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், 30 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மீகொட பகுதியில் இன்று (12) மதியம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் 47 வயதான சாந்த முதுங்கொடுவ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினரான இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஹோமாகம பிரதேச சபை உறுப்பினராக இருந்தார், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சர்வஜன பலய கட்சியில் போட்டியிட்டார், ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

முன்னாள் உறுப்பினர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளை நிற காரில் வந்த ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றது.

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி  காணாமலான பின்னர், முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர், நீரில் மூழ்கியே உயிரிழந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவு விசேட அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்குச் சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகாமிலிருந்து அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக சிலர் முகாமுக்குள் நுழைந்துள்ளனர்.

இவர்களை விரட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டபோது, தப்பிச்செல்ல முயன்றவர்களில் ஒருவர் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வட  மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட குழு விசாரணைகளை முன்னெடுக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் சிப்பாய் ஒருவரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முகாமுக்குள் நுழைந்து பொருட்களை திருடுவதற்காக  உதவிய சந்தேகத்தில் மேலும் இரண்டு சிப்பாய்களையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான மூவரும் 09.08.2025 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று சந்தேகநபர்களையும்  இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சடலம் தொடர்பாக வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும்  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி நிதியிலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை பெற்ற அரசியல்வாதிகளின் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடமிருந்து பணத்தை உடனடியாக வசூலிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உதவித்தொகை பெற்றவர்களின் பட்டியலை சட்டத் துறை தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகிறது, மேலும் பணத்தை மீட்டெடுப்பது தொடர்பாக சட்ட ஆலோசனையும் பெற்றுள்ளது.

ஜனாதிபதி நிதியிலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை பெறுவது தொடர்புடைய சட்டத்தின் விதிகளின்படி சட்டவிரோதமானது என்று சட்டத் துறை சுட்டிக்காட்டுகிறது.

இந்தத் தகவலை வெளிப்படுத்திய நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் டாக்டர் அனுர கருணாதிலக்க, முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் குழந்தைகள் உட்பட 72 க்கும் மேற்பட்டோருக்கு ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மக்களில் பெரும்பாலோர் முன்னாள் அரசியல்வாதிகளின் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரைத் தொடரும் இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடத்த இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடிதம் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அறிவித்துள்ளனர்.

அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

“ஓகஸ்ட் 09, 2025 அன்று காலை, முத்துஐயன்கட்டுக் குளத்தில் எதிர்மனசிங்கம் கபில்ராஜ் (வயது 32) என்பவரின் உடல் மீட்கப்பட்டமை குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

ஓகஸ்ட் 07, 2025 அன்று, இலங்கை இராணுவத்தின் 63 ஆவது பிரிவு முகாமுக்கு 5 பேர் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் எனவும், அங்குள்ள இராணுவத்தினர் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர் எனவும் தற்போது தெரியவந்துள்ளது. அவர்களில் கபில்ராஜ் என்ற நபர் காணாமல்போனார். பின்னர் அவரது உடல் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். தடையின்றி முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்கும், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுப்பதற்கும் மட்டுமல்லாமல், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் அடக்குமுறை நடத்தை மற்றும் அதிகப்படியான பிரசன்னத்தை முன்னிலைப்படுத்தவும், இந்த விடயத்தை உங்கள் அவசர கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தைத் தாமதமின்றி அகற்ற உடனடி நடவடிக்கைகளை எடுங்கள். இந்த நிகழ்வில் நீதி செயல்முறை குறுக்கீடு இல்லாமல் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இன்று வரை தொடரும் இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை ‘ஹர்த்தால்’ நடத்த அழைப்பு விடுத்துள்ளோம்.”– இப்படி அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கு அரசு எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் நீதிமன்றம் செல்வதற்குத் தீர் மானித்துள்ளனர்.

50 சட்டத்தரணிகளைக் கொண்ட சபையுடன் இவர்கள் ஒன்றிணைந்து பேச்சு நடத்தி ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஆரம்பக்கட்டப் பேச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா, மஹிந்த மற்றும் கோத்தாபய ஆகியோரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஒரு சில நாள்களுக்கு முன் இரண்டாவது சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்ட மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும்கூட அரசால் நினைத்த வாறு இதை நடைமுறைப்படுத்த முடியாது என்று ரணில் விக்கிரமசிங்கவின் சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார். 

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணையாக ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு குற்றப் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் இந்தக் குற்றப் பிரிவுகள் நிறுவப்படும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் செய்யும் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொட வரையிலான குழாய் சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரன்பொகுணகம, பட்டாலிய, அத்தனகல்ல, பஸ்யால மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளுக்கு காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd