web log free
May 08, 2025
kumar

kumar

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) தம்மைப் பதிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

SLBFE உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அரச ஊழியர்கள் தங்கள் தகவல்களை உள்ளிட முடியும் என்றார்.

அரச உத்தியோகத்தர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்கு மிகவும் அவசியமான அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான விரைவான திட்டம் இது என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு வேலைகளைப் பெற ஆர்வமுள்ள அரச அதிகாரிகள் இன்று இரவு 9:00 மணி முதல் SLBFE உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக தமது விபரங்களை உள்ளிட முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உலக சந்தையின் சாதாரண விலையை விட 35% குறைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் எரிபொருளை வாங்குகின்றன என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எரிபொருளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எரிசக்தி அமைச்சிடம் பேசியுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார, அந்த கோரிக்கைக்கு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்ட சித்தாந்தம் காரணமாக ரஷ்யாவின் கோரிக்கையை இலங்கை புறக்கணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

"டாலர் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இருந்து எரிபொருளை வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது, அதேசமயம் நாங்கள் ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் வாங்கலாம். அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணுவதற்காக ரஷ்யா வழங்கிய நீண்ட கால கடன் வசதியை நாங்கள் புறக்கணித்துவிட்டோம்,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்

LITRO Gas Lanka Ltd நிறுவனம் நாளைய தினம் உள்நாட்டு எரிவாயு விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளது.

புதிய எரிவாயு இறக்குமதி வந்தவுடன் சில நாட்களுக்குப் பிறகு எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கும் என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஜான்ஸ்டன் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு மனு தாக்கல் செய்தார் ,குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடுமையான மருந்து தட்டுப்பாடு வடக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தெருநாய்கள் மற்றும் வீட்டு செல்லப்பிராணிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வடமாகாண பொது சுகாதார அதிகாரிகள் வடமாகாண மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

நாய்கள் மற்றும் பூனைகளின் கடி மற்றும் சுரண்டலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தக்கூடிய ரேபிஸ் தடுப்பூசிகள் உட்பட மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இயன்றவரை தடுப்பூசி போடவும், செல்லப்பிராணிகளால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முன்னெப்போதையும் விட கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவேளை, யாழ்.மாவட்டம் உட்பட வடக்கின் பல ஆதார வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களுக்கான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதால், உரிய மருந்துகளை மருந்தகங்கள் ஊடாக பெற்றுக்கொள்வதில் அதிக செலவு ஏற்பட்டு மக்கள் பல சிரமங்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பலா, ஈரபலா, வற்றாளை கிழங்கு போன்ற உணவுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரவையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பான காடுகளில் உள்ள பலாப்பழங்களை அறுவடை செய்வதற்காக வனப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க அனுமதிக்கும் அமைச்சரவைப் பிரேரணையை விவசாய அமைச்சர் முன்வைத்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கொஸ்கம சாலாவ தோட்டத்தைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர் கொஸ்கம சாலாவ தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.

 கடந்த 5ஆம் திகதி காலை 8 மணியளவில் தான் படிக்கும் பாடசாலையில் சிரமதானம் செய்துவிட்டு வீடு திரும்பவில்லை எனக் கூறி வீட்டை விட்டுச் சென்றதாக சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி மானஷா. இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த மானஷாவின் வீட்டிற்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு நாகப் பாம்பு புகுந்துள்ளது. அதை கண்ட மானஷா, இறந்துபோன தனது கணவர்தான் நாகப்பாம்பாக மறுபிறவி எடுத்து வீட்டுக்கு வந்ததாக நம்பத் தொடங்கினார்.

மேலும் அந்த பாம்பிற்கு தொடர்ந்து பால் ஊற்றியும் வந்துள்ளார். அந்த பாம்பும் 4 நாட்களாக அவரது வீட்டிலேயே தங்கியிருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தவுடன், அவர்கள் அந்த பாம்பை பிடிக்க முயன்றனர்.

ஆனால் மானஷா பாம்பு உருவில் தனது கணவர் இருப்பதாக கூறி, மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியுடன் வசித்து வந்த பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் அந்த பெண்ணிற்கு பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து வசித்து வந்தார். இந்நிலையில் அந்தப் பெண் கருமுட்டை கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கு கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் கொடுக்கும் புரோக்கர் மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது மாலதி உங்களது மகள் மூலமும் கருமுட்டையை கொடுத்து நிறைய சம்பாதிக்கலாம் என்று அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதையும் படியுங்கள்: சங்கரன்கோவிலில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் இதையடுத்து அந்த சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தையான பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கருமுட்டையை ஆஸ்பத்திரிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்து உள்ளார். இதற்காக அந்த சிறுமியின் வயதை அதிகரித்து காட்டுவதற்காக போலி ஆதார் அட்டை தயாரித்து கருமுட்டையை அந்த சிறுமியிடம் இருந்து எடுத்துள்ளனர். போலி ஆவணத்தை ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான் (25) என்பவர் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

ஈரோடு, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் அந்த சிறுமியை அவரது தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை அழைத்துக் கொண்டு 8 முறை கருமுட்டை எடுத்துள்ளனர். ஒவ்வொரு முறை அந்த சிறுமி கருமுட்டை கொடுத்தவுடன் அந்த சிறுமியின் தாய்க்கு ரூ.20 ஆயிரமும், புரோக்கர் மாலதிக்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக ஆஸ்பத்திரி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. இதையும் படியுங்கள்: கட்டளையூர் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்க வேண்டும்- கலெக்டரிடம் கோரிக்கை இந்த பணத்தை கொண்டு சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். தொடர்ந்து கருமுட்டை கொடுத்ததால் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் வளர்ப்புத் தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சிறுமி அவர்களிடமிருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

உறவினர்களிடம் நடந்த விஷயத்தை கூறி கதறி சிறுமி அழுது உள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பிறகே இந்த விவகாரம் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. இதையும் படியுங்கள்: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் சென்னையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் குருநாதன், இணை இயக்குனர் (சட்டம்) விசுவநாதன், ஈரோடு மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கோமதி, மகப்பேறு டாக்டர்கள் மலர்விழி, கதிரவன் உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் ஈரோட்டுக்கு வந்தனர். மருத்துவ குழு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

சுமார் 3 மணி நேரம் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மருத்துவக் குழுவிடம் கண்ணீர் மல்க கூறினார். முதலில் அந்த சிறுமி என்ன கூறினார் என்ற தகவல் வெளிவரவில்லை. தற்போது அந்த சிறுமி மருத்துவக் குழுவிடம் கூறிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தனது தாய் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக தனது வளர்ப்புத் தந்தை உடன் சேர்ந்து தனக்கு பல வகையில் தொல்லை கொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக கருமுட்டை விற்பனைக்காக வளர்ப்பு தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருவனந்தபுரம், திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 8 முறை தன்னிடமிருந்து கருமுட்டை எடுக்கப்பட்டதாகவும், கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் அந்த சிறுமி கூறி அழுதுள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட மருத்துவக்குழு விசாரணையை தீவிரப்படுத்தியது.

பின்னர் மருத்துவ குழு ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கருமுட்டை தானம் எடுக்கும் முன்பு அரசு குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? எந்த சான்றிதழ் அடிப்படையில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டது. அந்த சிறுமிக்கு திருமணம் ஆகி விட்டதை உறுதி செய்தீர்களா? உட்பட பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டனர். மேலும் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2018ஆம் ஆண்டு முதல் எத்தனை பேருக்கு செயற்கை கருவூட்டல் நடந்தது என்பதை கண்டறிய அதன் ஆவணங்களை ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட மருத்துவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்கள் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இணை இயக்குனர் விஸ்வநாதன் கூறியதாவது:-

கருமுட்டை விற்பனை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவடைந்தும் அதன் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமி வாக்குமூலம் படி ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்க செய்த சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோர் 4 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களில் 4 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ குழுவின் முழு விசாரணை முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்து.  

இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார் ரூபிகா வயது 15, சிவலிங்கம் ஸ்ரீதேவி வயது 18 ஆகிய இரண்டு யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

இவர்களின் தாய், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் கொழும்பு உட்பட சகல இடங்களிலும் தேடிய போதிலும், இதுவரை கிடைக்கவில்லை.

அக்கரப்பத்தனை பொலிஸ் ‌‌‌அதிகாரிகள் தொடர்ந்து தேடும் பணியில் ‌‌‌‌ ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த யுவதிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்காத காரணத்தினால் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர்.

அத்தோடு, குறித்த 2 யுவதிகளும் தோட்டத்தில் தொழிலாளியாக தொழில் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd