web log free
May 06, 2025
kumar

kumar

தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் லோகி தோட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த 200 வருட பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது வீட்டிலிருந்து தலவாக்கலை நகருக்கு சென்றுக்கொண்டிருந்தபோது தலவாக்கலை லோகி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் வெட்டிக் கொண்டிருந்த ஆலமரத்தின் கிளையொன்று உடைந்து பிரதான வீதியின் நடுவில் விழுந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றபோது காயமடைந்த நபரை முச்சக்கரவண்டியில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் போது வீதியில் சென்ற முச்சக்கர வண்டியொன்றும் சேதமடைந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் அனைத்து எதிர்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கொழும்பில் உள்ள சினமன் லேக் ஹோட்டலில் பூட்டப்பட்டியிருந்த அறையொன்றில் சந்தித்தனர்.

இந்தக் கலந்துரையாடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த சந்திப்பின் இரண்டாவது கட்டமும் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இரண்டாவது விவாதம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையை நிர்வகிப்பது குறித்து கவனம் செலுத்தியது.

நான்கு முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்கும் கூட்டறிக்கையில் கையெழுத்திடுவதற்கும் அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அந்த விவாதத்தில் ஒரு சிறப்புக் குறைபாடு இருந்தது.

முதலாவது கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது கலந்துரையாடலை புறக்கணித்தார்.

இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்த சுமந்திரனிடம் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை தொடர்பில் வினவிய போது விசேட காரணத்தினால் கலந்துரையாடலில் பங்குபற்றவில்லை என தெரிவித்திருந்தார். என்ன காரணம் என்று கூறவில்லை.

தற்போதைய ராஜபக்ச ஆட்சியை பாதுகாக்க ஐ.தே.க தலைவர் செயற்படுவதாக பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க.வை சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் டீல் அரசியலில் ஈடுபடுவதாக அரசியல் களத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

முதல் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

சஜித் பிரேமதாசவும் ரணில் விக்கிரமசிங்கவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாராளுமன்றத்திற்கு வெளியே சந்தித்தனர்.

அதுமட்டுமின்றி ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

அதேபோன்று தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யவும் அரசு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி உள்ளது.

மேலும் இலங்கை- தமிழக மீனவர்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாக செந்தில் தொண்டமான் கூறியுள்ளார். 

முஸ்லிம் ஆண்களின் பல திருமணத்தை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கும் கொள்கை முடிவு எடுப்பது உள்ளிட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைச் சேர்க்க நீதி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரையின் பேரில், நீதி அமைச்சு மார்ச் 8, 2021 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம் ஆண்களின் பலதார மணத்தைத் தடை செய்யவும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், காதி நீதிமன்றங்களை ஒழிக்கவும் முடிவு செய்தது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்திற்கு முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் சமூகம் பலதார மணத்துக்கான சட்டங்களை மாவட்ட நீதிமன்றங்களில் சமர்ப்பித்துள்ளமையும் சட்ட தாமதத்திற்கு மற்றொரு காரணமாக இருப்பதால் காதி நீதிமன்றங்களில் சட்டத்தை அமுல்படுத்துவதே பொருத்தமானது என நீதி அமைச்சு கருதுகிறது.

தீர்க்க முடியாத பிரச்சினைகளை மாத்திரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு நபர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று (20) ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தோட்டக்கனத்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார்.

சந்தேகநபர் ஹம்புருகலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குச் சென்று கடனை வழங்கவில்லை என்பதற்காக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்தித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில் தொண்டைமானும் முதல்வரை சந்தித்தார்.

இலங்கை தமிழர் நலன், மீனவர் பிரச்சனை குறித்து முதலமைச்சருடன் இலங்கை தமிழர்கள் விவாதித்தனர்.

மன்னாரிலுள்ள புனித பூமியொன்றை அண்மித்த பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

2010ம் ஆண்டு 14ம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் பிரகாரம், தேவையற்ற விதத்தில் ட்ரோன் கமராக்களை பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இலங்கைக்குள் ட்ரோன் கமராவை பயன்படுத்த சிவில் விமான சேவை அதிகார சபையில் அனுமதி எடுக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

 

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் சட்டமா அதிபர் சுதந்திரமாக செயல்பட வேண்டும், அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அரசு உறுதியளித்த திருத்தங்கள் இடம்பெறவில்லை என்ற விடயங் கள் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 17 பக்க அறிக்கையில் இலங்கைமீது மேலதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த அறிக்கை குறித்து மார்ச் 3ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை, அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் எழுப்பப்பட்ட பல பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் அவதானிப்புகள் மற்றும் விளக்கங்களுடன் இந்த அறிக்கை ஜெனிவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தவறியுள்ளமை குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட திருத்தங்கள் குறித்து அதிருப்தியையும் ஆணையாளர் முன்வைத்துள்ளார்.

இந்தச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் பலமுறை உறுதியளித்த திருத்தங்கள் அதில் உறுதி செய்யப்படவில்லை இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பாதிக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக திரும்பப் பெற வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை கூட்டு ஆணைக்குழு கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி பிரஸல்ஸில் கூடிய போது இதற்கான குறிப்பு வெளிப்பட்டது. இதுதவிர, 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முயற்சியின் விளைவாக இந்த விவகாரம் உள்ளடக்கப்பட் டுள்ளது. இந்த விசாரணைகளில் சட்டமா அதிபர் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதான குற்றச்சாட் டுக்களை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களை விடுத்தமை சட் டமா அதிபர்மீதான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. அவர்கள்மீது 855 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் பதிவு செய்தார். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

 

இன்றைய தினம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 போதிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதே இதற்கு காரணம்.

 இதன்படி, தென் மாகாணத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 ஏனைய மாகாணங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை பிரதேச அடிப்படையில் ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும்.

 இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பில் நடைபெறுகிறது. 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd