web log free
September 21, 2024
kumar

kumar

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா ,ரோஹன பண்டார ஆகியோருக்கும் இன்று வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

 அமைச்சுப் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களான A.H.M.பௌஸி, வடிவேல் சுரேஷ் ,அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று வாக்களிக்க பாராளுமன்றத்திற்கு வருகை தரவில்லை.

Reckitt Benckiser நிறுவனத்தின் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் துப்புரவு மற்றும் கிருமிகொல்லி வர்த்தகநாமங்களில் ஒன்றான Lysol, மதிப்புமிக்க SLIM Effie Awards 2023 இல் அனைவராலும் விரும்பத்தக்க தங்க விருதை வென்றுள்ளது. அந்நிகழ்வில் வழங்கப்பட்ட ஐந்து தங்க விருதுகளில் ஒன்றான இந்த பாராட்டானது, Lysol வர்த்தகநாமத்திற்கு ஒரு முக்கியமான தருணத்தை குறிக்கிறது. இது துப்புரவு மற்றும் கிருமிகொல்லி தயாரிப்பு வகைகளில் நிறுவனத்தின் ஒப்பற்ற ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

Lysol Sri Lanka இனது விருது வென்ற பிரசாரத் திட்டமான ‘More than a floor’ (ஒரு தளத்திற்கும் அதிகமாக) ‘Home supplies & Services’ (வீட்டுப் பாவனைப் பொருட்கள் மற்றும் சேவைகள்) பிரிவில் தனித்துவத்தை பெறுகின்றது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை உருவாக்குவதன் மூலம், Lysol குடும்பங்களுக்கு கொண்டு வரும் பெறுமதியை மையமாகக் கொண்ட, அதன் அழுத்தமான கருத்தை விபரிப்பதன் மூலம் பார்வையாளர்களை அது கவர்ந்துள்ளது. இலங்கையின் சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், ‘More than a Floor’ என்பது வெறுமனே ஒரு உற்பத்தி ஊக்குவிப்பு அம்சத்தையும் கடந்து, உணர்வுபூர்வமான மட்டத்தில் பார்வையாளர்களுடன் ஒன்றாக கலந்தது.

Reckitt Benckiser Lanka Ltd நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பொறுப்பான தலைவர் ஷாமிந்த பெரேரா இது பற்றி குறிப்பிடுகையில், சந்தையில் Lysol இன் ஆதிக்கமானது, அதன் தயாரிப்புகளின் தரத்தையும் கடந்து வெளிப்படுகின்றது. நுகர்வோருடன் ஆழமான வகையில் இணையும் வர்த்தகநாமத்தின் திறனானது, அதன் சந்தைப்படுத்தல் தகவல் பரிமாற்ற தொடர்புகளுக்கு உந்துசக்தியாக இருந்து வருகிறது. அத்துடன் இந்த மதிப்புமிக்க விருதானது, இந்த அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. என்றார்.

சந்தைப்படுத்தல் துறையில் மிகவும் உலகளாவிய மதிப்புமிக்க பாராட்டுகளில் ஒன்றாக Effie விருதுகள் விளங்குகின்றன. அளவிடக்கூடிய முடிவுகளை வழங்குகின்ற மற்றும் குறிப்பிட்ட சந்தைப்படுத்தல் நோக்கங்களை அடையும் பிரசாரங்களை அது கௌரவிக்கின்றது. வெற்றிகரமான பிரசாரங்கள் நிரூபிக்கப்பட்ட, அளவிடக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், அப்பிரசாரத்தின் செயற்றிறனை வலியுறுத்துவதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருது நிகழ்வு புகழ் பெற்று விளங்குகின்றது.

உலகெங்கிலும் உள்ள 125 இற்கும் அதிக சந்தைகளில் 55 இற்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம், அனைத்து சந்தைகளிலும் ஒரே மாதிரியான இறுக்கமான அளவுகோல்களை தீர்ப்பு வழங்குவதற்காக Effie விருதுகள் பயன்படுத்துகின்றன. இதனால் Effie விருதை வெல்வதானது, உண்மையான உலகளாவிய சாதனையின் அடையாளமாக கருதப்படுகின்றது.

Reckitt Benckiser Lanka Ltd நிறுவனத்தின் தூய்மை தொடர்பான வர்த்தகநாம முகாமையாளரான, துஷினி ரணசிங்க இது பற்றி தெரிவிக்கையில், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், எமது சந்தைப்படுத்தல் தொடர்பாடல்

பங்காளிகளுக்கும், நாடு முழுவதிலும் உள்ள எமது விசுவாசமான நுகர்வோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். குறிப்பாக சவாலான காலங்களில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. என்றார்.

புகழ்பெற்ற சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பு நிறுவனங்களான Phoenix Ogilvy (Pvt) Ltd, Geometry Global (Pvt) Ltd, Dentsu Grant Group ஆகியவற்றின் மூலம் இந்த விருது பெற்ற More than a Floor பிரசாரம் மேலும் உயிரூட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Lysol பற்றி:

பெருமைக்குரிய Reckitt Benckiser நிறுவனத்தின் தூய்மை தொடர்பான தயாரிப்புகளின் ஒன்றான Lysol, நோயை உண்டாக்கும் கிருமிகளிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மில்லியன் கணக்கான குடும்பங்களை பாதுகாப்பதில் உலகளாவிய தலைவராக இருந்து வருகிறது. இலங்கையில், Lysol ஆனது அதன் தயாரிப்பு பிரிவில் ஒப்பிட முடியாத சந்தைத் தலைமைத்துவத்தைப் பெறுகிறது. Reckitt Benckiser ஆனது, தூய்மை, சுகாதாரம் மற்றும் போசணை ஆகிய பிரிவுகளில் Air Wick, Dettol, Durex, Harpic, Mortein, Strepsils, Vanish, Veet உள்ளிட்ட இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான நுகர்வோர் வர்த்தநாமங்களின் இல்லமாக விளங்குகின்றது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் IMF நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையுடன் இணக்கம் காணப்பட்டுள்ள 48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் நேற்றிரவு(12) நிறைவடைந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் தவணை கொடுப்பனவாக இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி அனுமதி வழங்கியது.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கடன் வசதி வழங்கப்படுகிறது. 

இந்த கடன் வசதியின் முதலாவது தவணை கொடுப்பனவாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது. 

இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதால், மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து, நிவாரண பொருளாதார வலயத்திற்குள் உள்நுழைவதற்கான இயலுமை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது X பதிவில் தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரியை 18% ஆக உயர்த்தியதை ஏற்று கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் (11) இரவு அலரி மாளிகையில் விருந்து நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் நடத்திய விருந்தில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் பெருமளவான அமைச்சர்கள் கலந்துகொண்டதாக அவர் நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சீரழிக்கும் வற் வரி அதிகரிப்பு நிறைவேற்றப்பட்டமை அங்கு கொண்டாடப்பட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வற் அதிகரிக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரும் கூட விருந்தில் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

மொட்டுவிகல் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்து தற்போது சுயேட்சையாக செயற்படும் நிமல் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை கட்சித் தலைவர்கள் எவரும் பங்கேற்பார்களா இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை என நெலும் மாவத்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தற்போதைய அரசியல் நிலவரப்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதற்கான ஆயத்தம் நடந்து வருகிறது. 

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனையவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சுமார் 50 கைதிகள் நேற்று (11) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளனர்.

எரிபொருளுக்கான VAT வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படும் என தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

புதிய வரிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 59 ரூபாவினாலும் அதிகரிக்குமென அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோல் 400 ரூபாவிற்கும் அதிகமாகவும், டீசல் ஒரு லீற்றர் கிட்டத்தட்ட 400 ரூபாவிற்கும் விலை நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலையுடன் நான்கு விதமான வரிகள் சேர்க்கப்படவுள்ளதாகவும், ஒரு லீற்றர் எரிபொருளுக்கான வரிகள் 125 ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக எரிபொருள் கட்டணத்துடன் நீர் மற்றும் மின்சார கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (12) அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவிக்கின்றன.

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அதன் அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி இதனை தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்துக்கான குறைந்தபட்ச கொடுப்பனவான 20,000 ரூபாவை கோரி இந்த தொழில் நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவிக்கின்றது.

மேலும், டிசம்பர் 13ம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரே நாளில் சுகயீன விடுப்பு அறிக்கையை முடித்துக் கொள்ள மாட்டோம் என தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

பெறுமதி சேர் வரி சட்டமூலம், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) மாலை 4.50க்கு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு 57 வாக்குகள் மேலதிகமாக அளிக்கப்பட்டன.

பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் குழு நிலையில் திருத்தங்களுடனான சட்டமூலத்திற்கு ஆதரவாக 100 வாக்குகள் பெறப்பட்டது.  

அதன்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 

ரணில் சஜித் ஒருபோதும் இணைய மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொய்யான செய்திகளை பரப்பும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து ரணில் சஜித் இணையவுள்ளதாக விளம்பரம் செய்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறானதொரு இணைவு ஒருபோதும் ஏற்படாது என பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்துவதாக  தெரிவித்தார்.

இவ்வாறான பிரசார நிறுவனங்களை ஊடக நிறுவனங்கள் என அழைக்க கூட தாம் ஆசைப்படுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.