மாடல் அழகி பியுமி ஹன்சமாலியின் சருமத்தை பளபளக்கும் கிரீம்களை விற்பனை செய்த கூரியர் சேவையின் தலைவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கிட்டத்தட்ட 3500 'கிரீம் பார்சல்களை' விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் பியுமி ஹன்சமாலி கூரியர் சேவை மூலம் தலா 35,000 ரூபாய் மதிப்புள்ள 25,000 க்ரீம் பார்சல்களை விற்றதாக பொது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கிரீம் விற்பனை மூலம் 87 கோடி ரூபாய் சம்பாதித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இரண்டு கூரியர் நிறுவனங்கள் மூலம் பியூமி ஹன்சமாலி இந்த கிரீம்களை விற்பனை செய்துள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவரின் உரிமையாளர் உட்பட நான்கு ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய கூரியர் நிறுவனத்தின் உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், தற்போது பியுமி ஹன்சமாலியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், அனைத்து விசாரணைகளின் பின்னர், அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பியுமி ஹன்சமாலி சந்தேகத்திற்கிடமான வழியில் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொழிலதிபர் சி.டி. லெனாவா சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில் தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு எதிர்வரும் 08ஆம் திகதி பெஞ்ச் முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பள அதிகரிப்புக்கு எதிராக அகரபதன தோட்டக் கம்பனி உள்ளிட்ட பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கோரிய மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று(04) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிணை கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதால் அதனை எழுத்துமூலம் தாக்கல் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
இதன்பிரகாரம் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு காலஅவகாசம் வழங்கிய மேல்நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கை மீண்டும் ஜூலை 11ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டார்.
ஆசிரியர் அதிபர் சங்கத்தினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
நடத்தப்பட்ட போராட்டம் பாடசாலை நேரத்தின் பின்னர் பாடசாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட போதிலும் தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படாவிட்டால் பாடசாலை நேரத்திலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நாளை (05) அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், ஊதிய முரண்பாடுகளை நீக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக நேற்று பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த (01) அன்று பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும், தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பிலான மனுவை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ தன்னிடமோ அல்லது சட்டத்தரணிகளிடமோ அது தொடர்பில் ஆலோசிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என்பதும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழு சரியானது என்பதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் பதவியேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சியின் தற்போதைய தலைவர் அமைச்சர் நிமல் சிறிபாலட சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்னொரு அரசியல் கூட்டணிக்கு தயாசிறி ஜயசேகர தலைவராக இருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தயாசிறி ஜயசேகரவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு வடக்கு தொகுதியின் வலய அமைப்பாளராக டொக்டர் ருக்ஷான் பெல்லான நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்தனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதனடிப்படையில் அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு நகரசபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இது இடம்பெற்றது.
இது தொடர்பில் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, கட்சி அரசியல், இனவாதம், நிறவெறி போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு, இந்த நாட்டை வெல்லக்கூடிய நாடாக மாற்ற ஜனாதிபதியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று கூறினார்.