web log free
May 12, 2025
kumar

kumar

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக தேவையான திருத்தங்களுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சியை வெற்றியடையச் செய்வதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

"இந்த நாட்டில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி என்பது கண்ணுக்குத் தெரியும் பிரச்சினைகள் மற்றும் அந்த பிரச்சினைகளில் இருந்து பல சொல்லப்படாத பிரச்சினைகள் எழுகின்றன. நாடு அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. "இது அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக கலங்கிய நீரில் மீன்பிடிக்கும் நேரம் அல்ல" என்று பிரதமர் கூறினார்.

இந்த நிலையை சமாளிக்க அரசு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றார். தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"இந்த சூழ்நிலையை சமாளிக்க நிதி நிர்வாகம் மிகவும் முக்கியமானது. எனவே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நிபுணர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக IMF, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். ஆக்கப்பூர்வமான பதில்களைப் பெறுகின்றோம் கூடுதலாக இந்த சூழ்நிலையில் இருந்து வெளியேற நட்பு நாடுகள் எங்களுக்கு உதவுகின்றன.

இந்த பிரச்சினையை வழமைக்கு கொண்டு வருவதற்கு நிதியமைச்சர், நிதியமைச்சு, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இத்தருணத்தில் மக்களின் சிரமங்களைப் போக்க குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதே எமது பொறுப்பாகும். "எனவே எதிர்க்கட்சிகள் போராட்டங்களை மீண்டும் தொடங்குவதை விட இந்த முயற்சிக்கு உதவ வேண்டும்," என்று பிரதமர் கூறினார்.

சரியான நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாததே நீண்ட நேரம் மின்வெட்டுக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு நம்மை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த கால முடிவுகளில் தவறு காண்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் பிரதமர் மேலும் கூறினார். அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். மலையகத்தில் போதிய மழைப்பொழிவு காணப்படுவதாலும், அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதாலும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எல்பிஜி மற்றும் எரிபொருள் பிரச்சினை சில வாரங்களில் தீர்க்கப்படும் என்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், வரிசை கலாச்சாரம் மாற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரம்புக்கன சம்பவம் தொடர்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்க குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை இதனூடாக பாதிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

கலவர பூமியாக மாறிய கேகாலை ரம்புக்கன பொலீஸ் பிரதேசத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கேகாலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

பிரிமா நிறுவனத்தின் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை இன்று முதல் 40 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் விற்பனை முகவர்களுக்கு தேவையான கோதுமை மா தொகையை கொள்வனவு செய்யும் ஒரு கிலோ கிராமுக்கு மேலதிகமாக 40 ரூபாயை வைப்புச் செய்யுமாறு நிறுவனம் விற்பனை முகவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விலை அதிகரிப்புடன் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் சில்லறை விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கும் என விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 450 கிராம் பாண் ஒன்றின் விலை மேலும் 20 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் ஏனைய கோதுமை மா சிற்றுண்டிகள் 10 ரூபாவால் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது 450 கிராம் பாண் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் அதன் விலை 130 ரூபாக அதிகரிக்கும். கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதால், வெதுப்பக உணவு தயாரிப்புகளுக்கான ஏனைய மூலப் பொருட்களின் விலைகளும் 70 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் வெதுப்பக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரம்புக்கன பகுதியில் மக்கள் வீதிக்கு இறங்கி வாகனங்களை மறித்து டயர்களை எரித்து ரயில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் சில படங்கள் வருமாறு, 

எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். 

அவ்வாறு  இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வருமாறு, 

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இலங்கை Caa2 மட்டத்திலிருந்து Ca தரத்திற்கு தாழ்த்தப்பட்டுள்ளது.

வௌிநாட்டு கடனை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு Moody’s நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இன்று(19) மற்றும் நாளைய(20) தினங்களில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

அதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கும் மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் புதிய விலைகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் பின்வருமாறு....

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் - 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் - 329 ரூபாய்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd