web log free
May 12, 2025
kumar

kumar

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு குடும்பத் தகராறுகள் 1479 அதிகரித்துள்ளன.

கடந்த வருடம் நாட்டில் ஒரு இலட்சத்து பதின்மூன்றாயிரத்து நூற்று எண்பத்தி எட்டு (113188) குடும்பத் தகராறுகள் பதிவாகியிருந்ததுடன் 2022ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து பதினோராயிரத்து எழுநூற்று ஒன்பது (111709) பதிவாகியிருந்தன.

2023ஆம் ஆண்டுக்கான இலங்கை காவல்துறையால் வெளியிடப்பட்ட செயல்திறன் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளால் ஏற்பட்ட பத்தாயிரத்து நானூற்று எட்டு (10408) குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன, மேலும் 2022 ஆம் ஆண்டில் 9636 குடும்பத் தகராறுகள் பதிவாகும்.

அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் சாதாரண உறவுகளால் ஏற்படும் தகராறுகளின் எண்ணிக்கை 772 அதிகரித்துள்ளது.

கணவன் அல்லது மனைவியிடமிருந்து துன்புறுத்தல், புறக்கணிப்பு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பாக 2023 இல் இருபத்தி இரண்டாயிரத்து ஐந்நூற்று எண்பத்து நான்கு (22584) புகார்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் காலி போதனா வைத்தியசாலையின் மனநோய் நிபுணர் டாக்டர் ரூமி ரூபன் கருத்துத் தெரிவிக்கையில், திருமணமான குடும்பக் கூட்டுத்தாபனத்திற்குப் புறம்பான பல்வேறு காரணங்களால், ஒரு பெண்ணோ ஆணோ திருப்திப்படுத்த முடியாத பாலுறவு ஆசைகளினால், காதல் இல்லாமையால், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக என்றார். 

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கும் இடையில் நேற்று (01) இரவு விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அரசியல் நோக்கத்திற்காக பொய்யான செய்திகளை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் என்பது எனது நம்பிக்கை.

எனவே இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அந்த வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் இன்று (02) முற்பகல் சபாநாயகர் ஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, ஆகஸ்ட் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘மாத்தறை நில்வலா கங்கையை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 7 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது. 

ஆகஸ்ட் 8 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டு மருத்துவ (திருத்தச்) சட்ட மூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் அமைச்சர் ரொனி த மெல் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் அமைச்சர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரையான நேரத்தை ஒதுக்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாதாள குழுவின் தலைவராக கருதப்படும் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸிலிருந்து பெலரசுக்கு செல்லும் பொது எல்லையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை இலங்கைக்கு கொண்டு வர பேச்சு நடத்தப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை க்ளப் வசந்தவின் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் லொக்குபெட்டி எனப்படுபவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரையும் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடுகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்து நாட்டின் இறையாண்மையைப் பறிக்கும் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போகிறார்.

ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. இந்தோ-இலங்கை ஒப்பந்தம், பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுவதை தடுக்க இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்களின் சர்ச்சைகளை ஒதுக்கி வைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச இன்று (31) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் குழுவினருடன் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 92 உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த விஜேதாச ராஜபக்ஷவின் கீழிருந்த நீதித்துறை மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அமைச்சர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக புதிய அமைச்சர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் கீழ் அதே பதவி வழங்கப்பட உள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து தனியான வேட்பாளர் ஒருவரை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

இந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள் 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர்கள் 72 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து தனி வேட்பாளரை முன்வைக்க கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் யோசனை ஒன்றை முன்வைத்தார்.

இந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் 61 உறுப்பினர்கள் ஆதரவும் 11 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எதிர்வரும் ஆகஸ்ட் 5 அல்லது 6ஆம் திகதி அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தன்னுடைய நனோதொழிநுட்ப பயன்பாட்டிற்காக பெரிதும் கொண்டாடப்படும் முன்னணி அவுஸ்திரேலிய முடி சீர்ப்படுத்தல் சிகிச்சை நிலையமான, BKT நனோ புரோவானது, ஆடம்பரமான அறிமுக நிகழ்வுடன் இலங்கைச் சந்தையில் அதனது பிரம்மாண்ட வருகையை மேற்கொண்டுள்ளது. அழகுக்கலைத் துறை மற்றும் ஏனைய முக்கியமான புகழ்பெற்ற ஆளுமைகளது வருகையை ஈர்த்திருந்த ஒன்றுகூடலானது தகவல்களினதும் பொழுதுபோக்கு அம்சங்களினதும் கலவையாக காணப்பட்டது. 

BKT நனோ புரோவானது அதனது பயனாளர் சினேக தன்மையிற்காகவும் அதிகூடிய வினைத்திறனுடனான செயலூக்கமான உள்ளடக்கங்களை வழங்கும், மயிர்கால்களில் ஆழமாக ஊடுருவும் நனோ கூறுகளது உள்ளடக்கத்திற்காகம் தனிச்சிறப்பானதாக விளங்குகின்றது. இப்புத்தாக்கமான தயாரிப்பானது பளபளப்பினை மேம்படுத்தவும் சேதங்களை சரிசெய்தும் நேர்த்தியான தோற்றத்தை அடைவதற்கும் சுருள் தன்மையினைக் குறைக்கவும் பல்வேறு முடி கரிசனங்களை நிவர்த்திக்க வடிவமைக்கப்பட்ட தனித்தன்மையான சூத்திரங்களை வழங்குகின்றது. 

“பிரேசிலியன் கெரடின் டிரீட்மெண்ட், அல்லது BKT, என்பது பிரேசிலிய அழகுக்கலைத் துறையில் நன்கறியப்பட்ட நிபுணர்களால் ஈர்க்கப்பட்ட அவுஸ்திரேலிய முடி சீர்ப்படுத்தல் சிகிச்சை முறையொன்றாகும். முடி மாற்றத்தில் இலகுத்தன்மையும் வினைத்திறனுமான புதியதொரு மட்டத்தினை இலங்கை பெண்களிற்கு வழங்க, BKT நனோ புரோவினை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் உற்சாகமாக காணப்படுகின்றோம். எமது வெளியீட்டில் பங்குபெற்றவர்களின், குறிப்பாக சலூன் தொழில்வாண்மையாளர்களின் நேர்கணிய பின்னூட்டங்கள், வெற்றியின் கட்டியங்கூறும் அறிகுறியாகும்” என்றார் BKT ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர், இஷா குலதுங்க அவர்கள். 

BKT நனோ புரோவானது ஈரத்தன்மை, கடுங்குளிர், அல்லது வெப்பம் போன்ற கடுமையான காலநிலைகளிற்கு எதிராக முடி எதிர்ப்புத்தன்மையை அதன் வினைத்திறன் உருவாக்குவதனால், இலங்கை பெண்களிற்கு விசேடமாக பொருந்தக்கூடியதாகும். உற்பத்தியின் செறிவுகளானவை ஆரோக்கியத்தினையும் பளபளப்புத் தரங்களை ஊக்குவித்து முடிக்கு புத்திளமையையும் புத்துயிர்ப்பையும் வழங்குகின்றது. 

இதன் சூத்திரமானது இயற்கை அமிலங்கள், சுருள்களை சீர்ப்படுத்தி அப்புறப்படுத்தும் அதேவேளை சேதமடைந்த முடிகளை மீட்டெடுக்க இணைந்து தொழிற்புரியும் ஒமேகா 3 மற்றும் பட்டுநூற்பிசின் அடங்கிய போஷாக்குமிகு ஆளிவிதை எண்ணெய் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. இது எட்டு மாதங்கள் வரையில் நீடிக்கக்கூடிய மென்மையானதும் பளபளப்பானதுமான முடிகளை உருவாக்குகின்றது. பாரம்பரிய கெரட்டின் சிகிச்சைகள் போலவன்றி, BKT நனோ புரோவின் வாசனையற்ற சூத்திரமானது போர்மல்டிஹைட், கார்போசிஸ்டெய்ன், குவானிடைன் மற்றும் ஹைட்ரோகசைட் போன்ற தீங்குமிகு இரசாயனங்கள் அற்றவொன்றாகும்.

இஷா குலதுங்க அவர்கள், “முடி சீர்ப்படுத்தல், சுருள் குறைப்போ அல்லது முடி சுருக்கநீக்கமோ எதுவாயினும் வாடிக்கையாளரின் விசேடமான தேவைகளிற்கு வடிவமைக்கப்படக்கூடியதான பன்முகப்பட்ட தயாரிப்பாக சலூன் அனுபவங்களை எளிமைப்படுத்தும் BKT நனோ புரோவானது சலூன் உரிமையாளர்களிற்கு ஒரு வரப்பிரசாதமாகும். 

இதனது முடி சிகிச்சை சூத்திரங்களிற்கு அப்பால், BKT ஆனது சுற்றுச்சூழல் நிலைபேண்தன்மையிலும் அர்ப்பணிப்புமிக்கதாக காணப்படுகின்றது. கழிவுகளை குறைக்கவும் அதனது சுற்றுச்சூழல் தாக்கங்களை இழிவளவாக்கவும் சூழல்நேய பொதியிடல் நடைமுறைகளை இவ்வுற்பத்தியானது கைக்கொண்டுள்ளது. முழுமையான முடி பராமரிப்பிற்கான BKT, இன் அர்ப்பணிப்பானது தனிநபர்களினதும் புவியினதும் நல்வாழ்வினை உள்ளடக்கியுள்ளது. நிலைப்பேண் பொதியிடல் ஊடாக, பசுமை மற்றும் சுற்றுசு;சுழல் நய எதிர்காலத்திற்கும் பங்களிக்க BKT நோக்கம்கொண்டுள்ளது. 

BKT நனோ புரோவானது இதனது நன்மைகளை அனுபவிக்க ஆர்வங்கொண்டுள்ளவர்களது இலகுவான அணுகலை உறுதிப்படுத்தும் முகமாக, இலங்கை முழுவதுமான முன்னணி சலூன்களில் வெகுவிரைவில் கிடைக்கக்கூடியதாகவிருக்கும். ஆர்வமுடைய தனிநபர்கள் ூ61 433 523 283 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd