web log free
April 29, 2025
kumar

kumar

ஜனாதிபதிக்கு ஆதரவாக இன்று அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருபவர்களுக்காக ஆங்காங்கே புல், புண்ணாக்கு மற்றும் தவிடு நீர் போன்றவை பிரதேசவாசிகளால் வைக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ராஜபக்ச அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

நாங்கள் இங்கேயே இருப்போம் அவர்களை துரத்தியடித்த பின்னர்தான் நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம் என முன்னாள் இராணுவவீரரான 35 வயது புஸ்பகுமார தெரிவித்தார். 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் காலிமுகத்திடலில் தங்கியிருந்து போராட தயாராகின்றனர். 

கடனில் சிக்குண்டுள்ள நாட்டின் அதன் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக நேற்று அவரது அலுவலகத்தின் வாயிலை ஆக்கிரமித்தனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குடை ரெயி;ன்கோர்ட்டுடன் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

சிலர் இளம் தலைமைத்துவத்திற்கு வழிவிடுவதற்காக முழு நாடாளுமன்றத்தையும் கலைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நாங்கள் இங்கேயே இருப்போம் அவர்களை துரத்தியடித்த பின்னர்தான் நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம் என முன்னாள் இராணுவவீரரான 35 வயது புஸ்பகுமார தெரிவித்தார்.  ராஜபக்ச குடும்பம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்இன கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான இறுதிபோரில் போரிட்டதாக புஸ்பகுமார தெரிவித்தார்.

இரண்டரை தசாப்தகாலத்தின் பின்னர் இந்த யுத்தத்தில் இலங்கை படையினர் வென்றனர். அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய ராஜபக்சவும் ஜனாதிபதியாகயிருந்த அவரது மூத்த சகோதாரரும்( தற்போதைய பிரதமர்) வெற்றிக்கான பெயரை பெற்றனர்.

நாங்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்புவோம், பொதுமக்களின் பணத்தை மீட்போம், அவர்களை சிறைக்கு அனுப்புவோம் என புஸ்பகுமார தெரிவித்தார்.

நாங்கள் காப்பாற்றிய நாட்டை இவர்கள் அழிக்கின்றனர். இராணுவம் பொலிஸார் அவர்களை பாதுகாப்பது கவலையளிக்கின்றது என புஸ்பகுமார தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவாளர்கள் உணவு தேநீர் ரெயின்கோட் போன்றவற்றை விநியோகம் செய்தனர்.

25 பில்லியன் கடனில் சிக்குண்டுள்ள தென்னாசிய நாடு வங்குரோத்தாகும் நிலையில் உள்ளது. இந்த வருடம் மாத்திரம் 7 பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்புகள் குறைவடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. உணவு எரிபொருளிற்காக அரசாங்கம் சீனா இந்தியாவிடம் அவசர கடனுதவியை நாடியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் சீற்றம் அதிகளவிற்கு இரண்டு தசாப்தங்களாக ஆட்சியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரானதாக காணப்படுகின்றது.

இதேவேளை எந்த வருமானத்தையும் ஈட்டித்தராத கொழும்புதுறைமுக நகரம் போன்றவற்றை உருவாக்குவதற்கான நிதிக்காக ராஜபக்ச குடும்பம் பெருமளவு கடன்களை பெற்றது. சீன கடன் என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

35 வயது வர்த்தகரான எஸ்டி பிரகீத் மதுஸ் இரவு ஆர்ப்பாட்டக்காரர்களுடனேயே தங்கியிருந்தார்.

மக்கள் விலகுங்கள் என தெரிவிக்கும் போது நீங்கள் ஜனநாயக ரீதியில் விலகவேண்டும், மக்கள் தற்போது அவரை ( ஜனாதிபதியை) விரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவருக்கு விலகிச்செல்வதற்கு விருப்பமில்லை – அதிகாரத்தை கைவிட விருப்பமில்லை என மதுஸ் தெரிவித்தார்.

நான் இங்கேயே தங்கியிருக்க போகின்றேன் எங்கள் பிள்ளைகளிற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்றால் நாங்கள கஸ்டப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்த போது  இலங்கை பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்ததாகவும் தாம் பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது டொலர் போதுமான அளவில் இருந்ததாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எங்களது ஆட்சிக் காலத்தில் இது போன்ற நெருக்கடி (பொருளாதார நெருக்கடி) ஒருபோதும் நடக்கவில்லை. எங்களது ஆட்சி நடைபெற்றபோது அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வரிசையில் நிற்கவில்லை என்றும், நிதி சவால்களை கையாள்வதில்  கோட்டாபய ராஜபக்ச அரசின் திறமையின்மையால் தற்போது மக்கள் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை அரசிடம் போதிய வளங்கள் கையிருப்பில் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என்றும் கோட்டாபய அரசாங்கம் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடன் வாங்க முயற்சிப்பதாகவும்  இதனால் இலங்கையை மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் சீனா புதிய முதலீடுகள் எதையும் செய்யவில்லை என்றும்,  இந்தியா, இலங்கைக்கு அதிகபட்ச உதவிகளை செய்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று கூடிய SJB நாடாளுமன்றக் குழு, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அங்கீகாரம் பெறுவதற்கும் குழு தீர்மானித்துள்ளதாக கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

"எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் ஏனைய கட்சிகளின் எம்.பி.க்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறுவார். சில SLPP எம்.பி.க்கள் மற்றும் சுயேச்சையாக மாறத் தீர்மானித்தவர்களின் ஆதரவைத் திரட்ட முயற்சிப்பதால் எண்ணிக்கையில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று கிரியெல்ல கூறினார். 

ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேமதாசவினால் முதலில் வலியுறுத்தப்பட்டது.

தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

தங்கொட்டுவ- நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாள்களாக எரிபொருளுக்காக காத்திருந்த தனியார் பஸ் சாரதியொருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில், நேற்று (9) உயிரிழந்துள்ளார்.

அத்துடன் தங்கொட்டுவ – தம்பரவில எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த 50 வயது நபர் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றப் பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை என்பன தயார் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தேவையான கையொப்பங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு முன்மொழிவுகளுக்கும் பெரும்பான்மை வாக்குகள் போதுமானதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

இரண்டு பிரேரணைகளுக்கும் ஆதரவளிக்க ஆளும் கட்சியின் பல பின்வரிசை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த பிரேரணைகளுக்கு ஆதரவளிப்பது அவர்களின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் விலைகள் மற்றும் வரி விகிதங்கள் அடுத்த ஆறு மாதங்களில் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் உதவி கேட்கத் தயாராக இருப்பதாக அவர் ராய்ட்டர் செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க இலங்கை தயாராகி வருவதாகவும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்திற்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜூலை மாதம் செலுத்த வேண்டிய $1 பில்லியன் கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஐந்து வாரங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.  அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,945 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இதனிடையே, இந்தியாவிலும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கை தங்க சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. 

22 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 166,000 மற்றும் 24 காரட் தங்கம் ரூ. 180,000 ஆக காணப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd