web log free
April 29, 2025
kumar

kumar

புதிய அமைச்சரவை சற்றுமுன் ஜனாதிபதி முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில்  இதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 
 
அதன்படி முதல் கட்டத்தில் 17 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. 
 
விபரங்கள் வருமாறு, 
 
1.தினேஷ் குணவர்தன – அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர்.
2. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்.
3. ரமேஷ் பத்திரண – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்.
4.பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.
5. திலும் அமுனுமக – கைத்தொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர்.
6. கனக ஹேரத் – பெருந்தெருக்கல் அமைச்சர்.
7. விதுர விக்ரமநாயக்க – தொழில் அமைச்சர்.
8. ஜானக வக்கும்பர – விவசாயத்துறை அமைச்சர்.
9. சேயான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சர்.
10. மொஹான் பிரியதர்சன சில்வா – நீர்வழங்கல் அமைச்சர்.
11. விமலவீர திஸாநாயக்க – வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர்.
12. காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்.
13. தேனுக விதானகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.
14. நாலக கொடஹோவா – ஊடகத்துறை அமைச்சர்.
15. சன்ன ஜயசுமன – சுகாதார அமைச்சர்.
16. நஷீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சர்
17. பிரமித பண்டார தென்னகோன் – கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு SJB விடுத்த அழைப்பை சாதகமாக பரிசீலிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 11 கட்சிகளின் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.

இன்றைய தினம் அநேகமாக புதிய அழைமச்சரவை நியமனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது,நாட்டின் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சரவையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார் எனவும் புது முகங்கள் பலர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 15 மற்றும் 16ம் திகதிகளில் ஜனாதிபதி தலைலமையில் ஜனாதிபதி முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 15 முதல் 20 வரையில் பேணுவதற்கும் எஞ்சிய வெற்றிடத்தை ஏனைய கட்சிகளுக்கு வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.

ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் நிதி அமைச்சர் தவிர்ந்த ஏனைய அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் விரும்பினால் காபந்து அரசாங்கத்தின் தலைவராகி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் திறமை தனக்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இளைஞர் சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு இணங்கி அனைவரும் வெளியேற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு காபந்து அரசாங்கத்தை தலைமை தாங்குவதற்கு தயார் என ரணில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றரை வருடங்களுக்குள் தீர்வு காண முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஓசி நிறுவனம் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. 

அதன்படி பெற்றோல் ஒரு லீட்டர் மேலும் 35 ரூபாவினாலும் அனைத்து வகை டீசல் ஒரு லீட்டர் மேலும் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (18) 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

A-W வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 3 மணி நேர இடைவெளியிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற வரம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இன்றைய தினம் கலந்து கொண்ட அனைத்து இன மொழி மத மக்களும் ஒன்றிணைந்து தமிழ் மொழியில் நாட்டின் தேசிய கீதத்தை சத்தமாக பாடிய சம்பவம் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

தமிழ் மொழியிலான தேசிய கீதம் சிங்கள மொழியில் எழுதிக் கொடுக்கப்பட்ட ஆங்கிலத்திலும் எழுதி கொடுக்கப்பட்டு தமிழில் இசைக்கப்பட்டது.

மரியுபோல் நகரில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டோம் என்று ரஷியா அறிவித்துள்ளது. அந்நகரம் உக்ரைன் படையிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் சில வீரர்கள் சரண் அடைய மட்டுமே புறநகர் பகுதியில் உள்ளனர் என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷியா கெடு விதித்துள்ளது. மரியுபோல் நகரில் இன்றும் சண்டையிடும் உக்ரைன் வீரர்கள் சரண் அடைய கெடு விதிக்கப்படுகிறது. அவர்கள் இன்று காலை 6 மணி முதல் (மாஸ்கோ நேரம்) தங்களது ஆயுதங்களை போட்டு விட்டு உயிரை காப்பாற்றி கொள்ள சரண் அடைய வேண்டும் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10.00: மரியுபோலின் தலைவிதியை போர் அல்லது ராஜதந்திரம் மூலம் தீர்மானிக்க முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மரியுபோலின் நிலைமை மனிதாபிமானமற்றது. ரஷியா அங்குள்ள அனைவரையும் வேண்டுமென்றே அழிக்க முயற்சிக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

06.40: உக்ரைன் போரில் ரஷிய ராணுவ ஜெனரல் விளாடிமிர் ஃப்ரோலோவ் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கல்லறையில் புதைக்கப்பட்டதாகவும் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்துள்ளார்.

03.10: உக்ரைன் தலைநகர் உள்பட பிற நகரங்கள் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்களை தொடங்கி உள்ளது. தனது போர் கப்பலை இழந்து விட்ட நிலையில், உக்ரைன் மேற்கு நகரங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்துமாறு ரஷிய ராணுவ தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உக்ரைன் ராணுவ தளங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ரஷிய படைகள் தெரிவித்துள்ளன.

02.20: ரஷியா இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் உக்ரைனில் தனது அடுத்த கட்ட தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கலாம் என அமெரிக்க ராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து உக்ரைனுக்கு அதிக பீரங்கி மற்றும் வெடிமருந்துகளை அனுப்ப வேண்டும் என்று தோழமை நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

01.29: மரியுபோல் நகரின் அனைத்துப் பகுதிகளையும் உக்ரைன் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போரின்போது ஏப்ரல் 16 ஆம் தேதி வரை, துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரைன் ராணுவம் 4 ஆயிரம் வீரர்களை இழந்து விட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.

12.40: போர் நடைபெறும் உக்ரைன் நகரங்களில் இருந்து சனிக்கிழமை மட்டும் 1,449 பொதுமக்கள் மனிதாபிமான பாதைகள் வழியே வெளியேற்றப் பட்டுள்ளதாக உக்ரைன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

16.04.2022

21.30: உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷியா படை எடுப்பிற்கு பின்னர், இதுவரை 50 லட்சம் உக்ரைன் மக்கள் தங்களை வீடுகளை இழந்துள்ளதாகவும் ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.

19.30: லிசிசான்ஸ்க் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ரஷியப் படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். தாக்குதலின் போது சுத்திகரிப்பு ஆலையில் எரிபொருள் இல்லை என்றும் எண்ணெய் கழிவுகள் தீப்பற்றி எரிவதாகவும் அவர் கூறினார்.

18.15: பெலாரசில் இருந்து புறப்பட்ட ரஷிய போர் விமானங்கள் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் பகுதியில் ஏவுகணைகளை வீசியதாகவும், அங்கு உக்ரைன் வான் பாதுகாப்பு படையினரால் நான்கு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

17.00: தலைநகர் கீவ் மீது ரஷியா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் இன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறினார். தலைநகர் கீவுக்கு வெளியே 900க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

16.00: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன்- ரஷியா இடையேயான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார். இந்நிலையில், ரஷியாவிற்கு எதிராக இங்கிலாந்து அரசு பொருளாதார தடையும் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷியாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

12.00: உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசு தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றினால், "கணிக்க முடியாத விளைவுகள்" ஏற்படும் என அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

" மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்" - என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (17) முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது.
 
ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும், பெருந்திரளான மக்களும் குறித்த பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தனர்.
 
'போ' என்றதும், விடைபெற மறுக்கும் திருட்டு - ஊழல் கும்பலை, மக்கள் சக்தியால் விரட்டியடிப்போம் என பாத யாத்திரையில் பங்கேற்றோர் கோஷம் எழுப்பினர்.
 
" தேசிய மக்கள் சக்தியால் பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டாலும், இது மக்களுக்கான போராட்டமாகும். எனவே, அனைவரும் கட்சி பேதமின்றி அணிதிரள வேண்டும்." - என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் தோழர் ரில்வின் சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.
19 ஆம் திகதி பாத யாத்திரை கொழும்பை வந்தடையவுள்ளது.
 
திருகோணமலை- புல்மோட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
புல்மோட்டை – கரையாவெளி ஆற்றிற்கு இறால் பிடிப்பதற்காகச் சென்றபோதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
 
இதில் புல்மோட்டை நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 70 வயதுடையவரும், புல்மோட்டை ஹமாஸ் நகரைச் சேர்ந்த 35 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
 
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd