யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமையில் இடையூறு விளைவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (24) வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினரும் அவருக்கான ஜாமீன் வழங்கியவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



