Homeசினிமா செய்திமணிரத்னம் - விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

spot_img

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு!

​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வமான மற்றும் சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

​சமீபத்தில் வெளிவந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படைப்பிற்குத் தயாராகிவிட்டார்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நட்சத்திரக் கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

​முன்னதாக, இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில், இப்படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் மிகக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

​விஜய் சேதுபதியின் புதிய தோற்றம்:
​இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதுவரை திரையில் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கவுள்ளார்

குறிப்பாக, தனது வழக்கமான தாடி மற்றும் மீசை இல்லாத (Clean Shave) புதிய கெட்டப்பில் அவர் நடித்துவருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. மணிரத்னத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் இந்தப் புதிய பரிமாணம் நிச்சயம் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

​பிம்பம் டிவி வழங்கும் இது போன்ற உடனுக்குடன் துல்லியமான சினிமா செய்திகளையும் சுவாரசியமான திரைத்துறை தகவல்களையும் உடனுக்குடன் பெற பிம்பம் டிவி பக்கத்தைப் பின்தொடருங்கள்.

எங்களின் இந்த பிரத்யேகப் பதிவிற்கு ‘ஸ்டார்’ (Star) வழங்கி பிம்பம் டிவிக்கு உங்களின் மேலான ஆதரவைத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்களின் ஒவ்வொரு ஆதரவும் எங்களுக்கு மேலும் சிறந்த செய்திகளை வழங்க ஊக்கமளிக்கும்!

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

More like this

இந்திய கிரிக்கெட் அணி உதவி பயிற்சியாளர் பதவி விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த நெதர்லாந்து அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரரான ரயன் டென் டோஷ்கேட் தனது...

ஜெயம் ரவியின் - ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும்...

தமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை

உலகள​வில் சினிமா பொழுது​போக்கு ஊடக​மாக மட்​டுமே சுருங்​கும்​போது, தமிழ்​நாட்​டிலோ அது கலை, பண்​பாடு, அரசி​யலுடன் பிரிக்க முடி​யாத​படி பிணைந்​துள்​ளது....