Homeஉள்நாட்டு செய்திகண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

spot_img

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கண்டி கடவத் சதர மற்றும் கங்கவட்ட கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன.

அத்துடன், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவின் நத்தரம்பொத்த கிராம அலுவலர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் வரையிலான அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி எசல பெரஹெராவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று (18) வீதி உலா வருவதிலிருந்து, பெரஹெரா நிறைவடையும் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

இதற்கு இணையாக, கண்டி மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

Latest articles

பழைய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் இடமளிக்கமாட்டார்கள் – ரஞ்சன் ஜயலால்

மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் அரசியல் தரப்பினருக்கு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்து ஆட்சி அமைக்க...

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு...

நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக்...

பொலன்னறுவை கூட்டத்தில் அரசாங்கம் டட்லி சிறிசேன முன்னிலையில் மண்டி!

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தை டட்லி சிறிசேன தனது முன்னிலையில் மண்டியிடச்...

More like this

பழைய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் இடமளிக்கமாட்டார்கள் – ரஞ்சன் ஜயலால்

மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் அரசியல் தரப்பினருக்கு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்து ஆட்சி அமைக்க...

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு...

நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக்...