Homeஉலக செய்திநேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

நேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

spot_img

படத்தில் நீங்கள் பார்க்கும் அழகான பக்லிங் (Bhakling) கிராமம், திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தின் ‘ரசுவா’ (Rasuwa) மாவட்டத்தில் போட்டே கோஷி ஆற்றுப் படுகையில் அமைந்திருந்த ஒரு சொர்க்க பூமி.

ஒரே நாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அந்த வண்ணமயமான நகரை இடிபாடுகள் நிறைந்த பாறை நிலப்பரப்பாக அடியோடு மாற்றிவிட்டது.

தற்போது வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு, லெண்டே ஆற்றின் (Lhende River) பாதையில் பனி மற்றும் பாறை இடிபாடுகள் விழுந்து அடைபட்டன.

அந்த இயற்கை அணை நீர் அழுத்தம் தாங்காமல் உடைந்ததால் (Glacial / Avalanche Lake Burst) தான் இந்தத் திடீர் பேரழிவு ஏற்பட்டது.

தமிழர்களின் நிலை:
கும்பகோணம் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் கயிலாய யாத்திரை சென்ற 57 தமிழர்களில் (தஞ்சாவூர், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்), 20 பேர் நேபாள எல்லையோர போலீஸ் முகாமில் பாதுகாப்பாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளதாலும் பாதை தடைபட்டுள்ளதாலும் மற்ற பயணிகளைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகளில் நேபாள ராணுவ ஹெலிகாப்டர்களும், இந்தியத் தூதரகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

spot_img

Latest articles

பழைய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் இடமளிக்கமாட்டார்கள் – ரஞ்சன் ஜயலால்

மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் அரசியல் தரப்பினருக்கு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்து ஆட்சி அமைக்க...

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு...

நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக்...

பொலன்னறுவை கூட்டத்தில் அரசாங்கம் டட்லி சிறிசேன முன்னிலையில் மண்டி!

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தை டட்லி சிறிசேன தனது முன்னிலையில் மண்டியிடச்...

More like this

ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் கப்பல் விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய திட்டம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல...