Homeஉள்நாட்டு செய்திQR முறை தொடரும்

QR முறை தொடரும்

spot_img

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையானது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதா, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடு பரிசோதிக்கப்படுவதாகவும், சில நிலையங்களில் QR குறியீடு பரிசோதிக்கப்படுவதில்லை எனவும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“அவசர நிலைமை அல்லது மிகவும் விசேடமான சூழ்நிலை தவிர, கடந்த ஆறு மாத காலப்பகுதியில் வழங்கப்பட்ட எரிபொருள் அளவு போதுமானதாகவே இருந்துள்ளது.

எனக்கு நினைவிருக்கிறது, எரிபொருள் விலை இதைவிட அதிகமாக இருந்த காலத்திலும் QR குறியீடு நடைமுறையில் இருந்தது. அப்போது எமது எரிபொருள் நுகர்வு 50 சதவீதத்தால் குறையவில்லை.

பெட்ரோல் நுகர்வு 9 சதவீதம் மட்டுமே குறைந்திருந்தது. டீசல் நுகர்வு 18 சதவீதம் குறைந்திருந்தது. அதனால் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொண்டார்கள்.

ஆனால், நாம் இன்னும் ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாட்டை பேண வேண்டிய அவசியம் உள்ளது. நாட்டிலிருந்து வெளியேறும் டொலர் அளவை ஒருவிதத்தில் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இல்லையெனில் டொலரின் விலை 550 அல்லது 600 ரூபாய் வரை செல்ல ஆரம்பித்தால், அது பொருளாதாரத்திற்கு பிரச்சினையாக மாறும். எனவே, அதனை கட்டுப்படுத்த வேண்டும்.

QR முறை இன்னும் நடைமுறையில் உள்ளது. எங்காவது அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தால், அது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும்.

பொதுவாகப் பார்க்கும்போது, முந்தைய காலத்தைவிட தற்போதைய நிலையில் QR குறியீடு அதிகமாக பரிசோதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். அவ்வாறு பரிசோதிக்கப்படுவதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.”

spot_img

Latest articles

பழைய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் இடமளிக்கமாட்டார்கள் – ரஞ்சன் ஜயலால்

மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் அரசியல் தரப்பினருக்கு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்து ஆட்சி அமைக்க...

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு...

நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக்...

பொலன்னறுவை கூட்டத்தில் அரசாங்கம் டட்லி சிறிசேன முன்னிலையில் மண்டி!

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தை டட்லி சிறிசேன தனது முன்னிலையில் மண்டியிடச்...

More like this

பழைய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் இடமளிக்கமாட்டார்கள் – ரஞ்சன் ஜயலால்

மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் அரசியல் தரப்பினருக்கு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்து ஆட்சி அமைக்க...

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு...

நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக்...