web log free
April 20, 2024

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இலங்கை,இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

புராணக் கதைகளின் படி, திருமால் வராக அவதாரம் (காட்டு பன்றி) எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான (பூமாதேவிக்கு) பிறந்த மகன் பவுமன் என்ற பெயரில் பிறந்தான். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்) பின்பு அவன் இன்றைய அசாம் மாகாணத்தில் உள்ள பிராக்ஜோதிசா என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான். பின்பு தனக்கு யாராளும் மரணம் நேர கூடாதென்று பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படகூடாதென்று வரம் கேட்டான், அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன். பின்பு நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான். பின்பு மனிதன் ஆக இருந்து ஒரு அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு நரகாசுரன் என்று பெயர் ஏற்பட்டது (நர+மனிதன் சூரன்+அசுரன்) என்பதன் சுருக்கமே நரகாசுரன் ஆகும். இவன் கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான். அப்போது கிருஷ்ணர் அவதாரத்திற்க்கு முன்பே திருமால் வராக அவதாரம் எடுத்திருந்தார். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனது மனைவியில் ஒருவரான ச‌‌த்‌தியபாமா‌ (பூமாதேவியின்) அவதாரமாவார். அவருடன் சென்று நரகாசுரனை அழிக்க பல வகையில் முயற்சித்த கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவை நரகாசுரன் முன்பு ஒரு பேரழகியாக அலங்கரித்து ஒரு நாட்டிய நடனம் நடத்தினான். அதில் அழகிய மாறுவேடத்தில் கிருஷ்ணர்-சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஒரு அடிமை நாட்டியம் ஆட வைக்கின்றான். இந்த நடனத்தின் முடிவில், நரகாசுரன் தனது இறப்பு நெருங்கியது கண்டு அச்சமுற்றாலும், நரகாசுரன் ஒரு அம்பை, கிருஷ்ணரை பார்த்து விட்ட போதிலும் அந்த அம்பை தனது கணவன் மீது படாமல் நாட்டியம் ஆடும் அழகியான சத்யபாமா தன் நெஞ்சில் வாங்கி கொள்கிறாள். அந்த அம்பு நெஞ்சில் விழுந்த வலியயை கூட பொருட்படுத்தாமல் தன் நெஞ்சில் இருந்து எடுத்து நரகாசுரனை சத்யபாமா கையால் அழிக்க வைத்தான் கிருஷ்ணர் என்றும் கிருஷ்ணர் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறான் என்று கூறப்படுகின்றது. இந்த நரகாசுரனின் வதத்தை மகாபாரத்தில் சிவந்தமண்களம். அதாவது {சிவந்த+(இரத்தம்)+மண்(பூமி)+களம்(போர்புரியும்இடம்)} என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.

நாட்டின் பல பகுதிகளில் மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்கு மக்கள் இன்றும் (03) நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

இதன்படி ,பல பகுதிகளில் மண்ணெண்ணை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

மின்சார ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளமையினால், மின்சாரம் தடைப்படும் என வெளியான தகவல்களின் பின்னரே, மக்கள் மண்ணெண்ணை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் ,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சாரம் தடைப்படாது எனவும், அவ்வாறு மின் தடை ஏற்பட்டால் அதனை விரைந்து வழமைக்கு கொண்டு வருவதாகவும் மின்சார சபைத் தலைவர் நேற்று உறுதியளித்திருந்தார்.

 

வாழை இலைகளில் சாப்பிடுவதும், பெரும்பாலான விருந்துகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதையும் பார்த்து இருப்போம். அதே போன்ற தையல் இலைகளை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

தற்போதைய நெகிழி போன்ற என்னற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட விதவிதமான தட்டுகளுக்குப் பதிலாக, முன்பெல்லாம் தைக்கப்பட்ட இலையில் (தையல் இலை) தான் உணவுகளை இட்டு உண்ணவும், பொட்டலங்கள் கட்டவும் பயன்படுத்தப்படும்.

ஆல இலை, மந்தாரை இலை, முருக்கை இலை போன்ற இலைகளை மடிப்புகள் இல்லாமல் பக்குவம் செய்து முற்றிலும் உலர்ந்தபின் மெல்லிய ஈர்க்கால் வட்ட வடிவமாகத் தைத்து உபயோகித்து வந்தோம்.

இந்த இலைகள் திருவிழாக்கள் மற்றும் கோயில்களில் பாரம்பரியமாக வழங்கப்படும் உணவினை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் ஒரு குடிசைத் தொழிலாக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலையாகும்.

தற்போது தமிழகத்தில் உள்ள நெகிழி தடையால் பெரும்பாலான வீடுகளில் இந்த தையல் இலைகளை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

வாழை இலை போன்றவற்றை ஓரிரு நாட்கள் மட்டுமே வைத்து உபயோகிக்க கூடிய நிலையில், இந்த தையல் இலைகளை நீண்டகாலம் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

கடைகளில் சட்டினி, பஜ்ஜி, போண்டா, ஊறுகாய் விற்பனைக்கு வந்தபோது அதை சிறு சிறு பொட்டலங்களாக மந்தாரை இலைகளேயே உபயோகித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தையல் இலைகளை சாப்பிட்டு தூக்கி எறிந்தால் கால்நடைகளுக்கு உணவாகவும். இல்லையெனில், சில நாட்களில் மண்ணோடு மக்கி காணாமல் போகும். நெகிழி பல ஆண்டுகள் ஆகியும் மக்காமல் அப்படியே கிடக்கும்.

இன்றைய இணையவழி மூலம் உணவு வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் இதை பின்பற்ற செய்யவேண்டும்.

எனவே இத்தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு தையல் இலைகளை பயன்படுத்துவதன் மூலம் குடிசைத்தொழிலை ஆதரித்து, நெகிழி பயன்பாட்டை தவிர்த்து இயற்கையை ஒத்து, நம் மண்ணின் வளத்தையும் காக்கலாம். தற்சார்பாக நமது வாழ்க்கையை நடத்திட பெரும்பங்காற்றும். 

அனைத்துக்கும் முன்னுரிமை பிள்ளைகள் என்ற தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதனால் சிறுவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் இடம் பெற்றாலும் அது வகுப்பறை கல்வி முறைமைக்கு இணையானதாக அமையாது.  

சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலம் கற்றல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்ய உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

623 பொருட்களின் இறக்குமதி உத்தரவாத விலை நீக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முடிவில் 5% மற்றும் 2022ன் முதல் காலாண்டில் 6.5% பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென ஆறு மாத கால வரையறையை வெளியிட்டார் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்.

அத்தியாவசியமற்ற 623 பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த 100% உத்தரவாத தொகை வைப்பு கட்டுபாடு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தடைவிதித்திருந்த 6 நிதி நிறுவனங்களுக்கு தடை நீக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மற்றும் வாகன பறிமுதல், கடன் கொடுப்பனவுகளில் அதிகம் மக்களை அழுத்தத்திற்குள்ளாக்குதல் என்பவற்றை 6மாதத்திற்கு தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

நாட்டின் பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதிக்கட்டமைப்பின் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்துவதை இலக்காக கொண்ட எதிர் வரும் 6மாத காலத்திற்கான செயற்திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உத்யோகபூர்வமாக வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் வலுப்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக கடந்த காலத்தில் "ஆசியாவின் ஆச்சரியம்" என்றும் "ஆசியாவின் அடுத்த அதிசயம்" என்றும் வர்ணிக்கப்பட்ட எமது நாடு, கடந்த சில வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளபட்டது. ஆனால் இது எமது நாட்டிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல இருப்பினும் தற்போது பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் நேர்மையான துலங்கலை காண்பிக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அதேவளை கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட பங்களிப்புகள் உரியவாறான அங்கீகாரத்தை பெறவில்லை. உண்மையில் அவை பாராட்டப்பட வேண்டியவையாகும்.குறிப்பாக கொவிட் -19 சௌபாக்கிய மீள் நிதி வழங்கள் திட்டத்திற்கென 165.5 பில்லியன் ரூபாவும் அரசாங்கத்திற்கு நிதி ரீதியான உதவிகளை வழங்க 2002 பில்லியன் ரூபாவும் மத்திய வங்கியினால் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

443 வருட கால அந்நியர்களின் ஆட்சி, 30 வருடகால போர், மின்சார மற்றும் வலுசக்தி நெருக்கடி, சுனாமி உள்ளிட்ட பாரிய இயற்கை அனர்த்தங்கள், உலகளாவிய தொற்றும் பரவல் உள்ளடங்கலாக இலங்கையானது காலத்திற்கு காலம் பல்வேறு சவால்களின் போது அரசாங்கமோ மத்திய வங்கியோ மாத்திரம் தனித்து செயற்பட்டு அதனை வெற்றி கொள்ள முடியாது. மாறாக வங்கி கட்டமைப்புகள், வங்கியில்லா கட்டமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அபிவிருத்தி பங்கீட்டாளர்கள் , முதலீட்டாளர்கள், சேவை வழங்குவோர், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுவதனூடாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாம் இப்போது பொருளாதாரம் எதிர்கொண்டிருக்கக்கூடிய பிரச்சினைகளை இனங்கண்டிருக்கின்றோம். எனவே அவற்றை நிவர்த்தி செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை 3 கட்டங்களாக பிரித்துள்ளோம். 1ம் கட்டம் எதிர்வரும் 6மாத காலத்திற்கும் 2ம் கட்டம் ஒரு வருட காலத்திற்கும் 3ம் கட்டம் நடுத்தர நீண்ட காலத்திற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் படி எதிர்வரும் 6 மாத காலத்தில் கடன் சேவை , ஏற்றுமதி சேவை, சுற்றுலா துறை என்பவற்றை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசாங்கத்தின் கடன் கொள்கையை காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் , வங்கி துறையின் செயல்பாடுகள் சாதகமான மட்டத்திலுள்ள போதிலும் சில பிரிவுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இலகுபடுத்தல் என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் நிர்ணயிக்கப்பட்டிருந்த 100% உத்தரவாத தொகை கட்டுபாடுகள் நேற்று முதல் நீக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவாத கட்டுபாடினால் இறக்குமதியாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் அதனை நீக்கியுள்ளோம் என அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், கொவிட் -19 வைரஸ் பரவலின் பின்னாரான புதிய இயல்பு நிலையின் கீழ் வங்கிகளை கண்காணிப்பது என்பது ஒப்பீட்டளவில் கடினமான ஒன்றாகும் எனவே அதற்கென கண்காணிப்பு குழுக்களை அமைப்பதற்கு முடிவேடுத்துள்ளோம். மற்றும் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தல் பணவீக்க நிலையை சீரமைத்து துறைமுக நகரம் மற்றும் கைத்தொழில் வலையத்தின் செயற்பாடுகளூடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் உற்பாய்சல்களை அதிகரித்தல் என்பன தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்படும் எனவும் பண்நாட்டு கொடுக்கல் வாங்கல்களை அறிக்கை படுத்துவதற்கான முறையினை 2022 ஜனவரி 1ம் திகதி முதல் நிறுவப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

"we will be outcome oriented" நாங்கள் விளைவு சார்ந்தவர்களாக இருப்போம் என அவர் தனது உரையில் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

Page 4 of 5