web log free
August 04, 2025
kumar

kumar

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு துறைமுக ஜெட்டியின் பணிகளையும் அதானி நிறுவனம் பூர்த்தி செய்து வருவதாகவும், 580 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஜெட்டி நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பணிகள் நிறைவடைந்த பின்னர், துறைமுகத்திலேயே சுமார் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அது தொடர்பாக சுமார் 15,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியார் துறை மூலம் அதிக அளவில் உருவாக்கப்படும் என்றும் கூறினார். 

குறிப்பாக, துறைமுக அதிகாரசபை கடந்த வருடம் 90 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதிலிருந்து ஊழியர் சம்பளம், அரச வரிகள் மற்றும் செயற்பாடுகள் என சகல செலவுகளையும் தவிர்த்து 23 பில்லியன் ரூபா அல்லது 2300 கோடி நிகர இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் துறையினூடாக தொழில் உருவாக்கம் அடையும் போது பணியாளர்கள் அதிகளவு பயனடைவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல கிரிஉல்ல வீதியில் கிவுல்கஹா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவை எடுத்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல் நாட்டின் ஜனாதிபதியையும் நாட்டையும் நெருக்கடிக்குள் தள்ளி அரச ஊழியர்கள் மக்களை  அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கியுள்ளதாக கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

“இந்த நாட்டில் 17 லட்சம் அரசு அதிகாரிகள் உள்ளனர். ஒரு நாட்டுக்கு இவ்வளவு பெரிய பொது சேவை தேவையா? இந்த அரசாங்க அதிகாரிகளின் சம்பளம், கொடுப்பனவுகள், சலுகைகள் மற்றும் வசதிகளுக்காக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நிறைய வரி செலுத்த வேண்டியுள்ளது. சிலர் அரசுப் பணியில் கண்டிப்பாக வேலை செய்கிறார்கள். உண்மை, ஆனால் அந்த சம்பளம், கொடுப்பனவுகள், சலுகைகள் மற்றும் வசதிகளில் பெரும்பான்மையானவர்கள் எந்த வேலையும் செய்யாமல் உள்ளனர்.

அரசு அதிகாரிகளுக்கு பொறுப்பு உள்ளது. ஆனால் அந்த பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்களா? உதாரணமாக, வாழ்க்கை செலவை கட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை அமைச்சரவை, வைத்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு மிகவும் தூரநோக்குடன் கூடிய தீர்மானத்தை எடுத்தது. ஆனால் அந்த முடிவை அமல்படுத்தாமல் அரசு அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.

உண்மையில் அரசு அதிகாரிகளின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை நாட்டுக்கும் மக்களுக்கும் முன்பாக அம்பலப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் ஜனாதிபதி, அமைச்சரவையின் முடிவை எடுக்கும்போது, அரசாங்க அதிகாரிகள் அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு மேல் அல்லது அந்த முடிவைப் பொருட்படுத்தாமல் செயல்படலாம். இந்த நிலை அரசு அதிகாரிகளின் பயங்கரவாதத்தை காட்டுகிறது” என்றார். 

தமது பெயரில் பதிவு செய்யாமல் வாகனங்களை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு மோட்டார் வாகன திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவற்றை விரைவில் தங்கள் பெயரில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

தற்போது சிசிடிவி கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் கடிதம் அனுப்பும் திட்டத்தை காவல்துறை செயல்படுத்தி வருகிறது.

அதன் காரணமாக, வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்திருப்பது முக்கியம்.

இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் வாகனத்தின் புதிய உரிமையாளர் மற்றும் பழைய உரிமையாளர் இருவரும் சிரமத்தைத் தவிர்க்கலாம்.

இதன்படி, வாகனத்தை விரைவில் தமது பெயரில் பதிவு செய்து கொள்ளுமாறும், வாகனத்தை வாங்கிய 14 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ளுமாறும் மோட்டார் வாகனத் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.

விவசாய திணைக்களம், விவசாய சேவைகள் திணைக்களம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு இணைந்து வீட்டு தோட்ட  விவசாய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.

இராஜாங்க கால்நடை மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி. பி.ஹேரத் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு மற்றும் பயிர்களின் நஷ்டத்திற்கு தீர்வாக இது முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நாட்களில் விதை பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறினார். 

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஏற்ற மரக்கறிகள் பயிரிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே ஈர வலயத்தில் விவசாயம் செய்யப்படாத வயல் நிலங்களில் மற்ற பயிர்களை பயிரிட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாய சேவைகள் திணைக்களம் எதிர்காலத்தில் மக்களுக்கு அறிவிக்கவுள்ளது.

எதிர்காலத்தில் அதற்கான முன் அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி தெரிவித்தார்.

நாட்டில் 84,000 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படாத நெல் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. 

ஈர வலயத்திலுள்ள பல நெற்களஞ்சியங்கள் நீடிக்க முடியாத நிலையில் காணப்படுவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

அரசியலமைப்பின் 70 (1) ஏற்பாட்டுக்கு அமைய, இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்காக அறிவிப்பொன்றின் ஊடாக பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமையால், அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு, பாராளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான குழு உள்ளிட்ட விசேட குழுக்களின் பதவிக் காலமும் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்படுவர். 

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் வாக்குறுதி அரசியலே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள சுங்கத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அதற்கிணங்க, குறிப்பாக தேர்தலுக்கு தயாராகும் போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக்கொண்டார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கந்தானை மொரவத்த பகுதியில் இடம்பெற்ற இந்த கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சரின் சாரதியான பிரபாத் எரங்க ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பாக சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாகன சாரதியான பிரபாத் எரங்க பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“முடிந்த அளவு தாமதமின்றி கொழும்பு வருவதற்கு நினைத்தோம். அதற்குள் அமைச்சர் தூங்கிவிட்டார். நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் சென்ற காரை முந்திச் சென்றேன்.

நான் ஜீப்பை மீண்டும் வலதுபுறம் உள்ள பாதையில் கொண்டு செல்ல முயன்றபோது, முன்னால் இருந்த கண்டெய்னர் மீது மோதியது. பின்னர் ஜீப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேலியில் மோதி நின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையில் விபத்தின் போது ஜீப் மணிக்கு 160 கிலோ மீற்றருக்கு மேல் வேகத்தில் செலுத்தப்பட்டதாகவும், ஜீப் பலத்த சேதமடைந்ததுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்தின் பின்னர் ஜீப்பில் சிக்கியிருந்த இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரியை மீட்க பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடியுள்ளனர்.

எப்படியிருப்பினும் காயமடைந்தவர்களை ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி | Sanath Nishantha Accident High Speed

 

நேற்று முன்தினம் மாலை நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்றிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குருநாகல் மற்றும் சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டு திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்.

 

அவர் தனது மூத்த சகோதரரை சந்தித்து நள்ளிரவில் கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், 50க்கும் மேற்பட்ட செயற்குழுக்கள் நீக்கப்படும்.

பாராளுமன்ற அமர்வுகளை நிறைவுறுத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று இரவு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்.

எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இசைக்கச்சேரி நடத்துவதற்காக இலங்கை வந்துள்ள இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நிலை காரணமாக இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் இளையராஜா அவர்களின் மகள் பவதாரணி இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இலங்கையில் சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே சிகிச்சை பலனின்றி அவர் இறைவனடி சேர்ந்துள்ளதால் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அல்லாது ஒட்டுமொத்த உலக தமிழ் பேசும் மக்களும் இளையராஜாவின் அனைத்து ரசிகர்களும் மிக வேதனையுடன் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd