பல்வேறு முறைகேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரிப்பதற்காக இந்த ஆண்டு 420 அரச நிறுவனங்களின் தலைவர்களை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு (கோப் குழு) அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் நான்கு அரச நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை விமான சேவைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பனவே நான்கு நிறுவனங்களாகும்.
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு என்பன COP குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தன. இந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மீளவும் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் அமைச்சுப் பதவிகளைப் பகிர்தல் போன்ற மானியச் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்தில் இணையத் தயாராகி வருகிறோம் என்ற புதிய செய்தியை அரசாங்க சார்பு குழுக்கள் உருவாக்கி சமூகமயமாக்கியுள்ளன.
இந்தப் போலிச் செய்தியை முற்றாக நிராகரிப்பதுடன், போலிச் செய்தியைப் போலவே அதனை இழிவாகக் கண்டிக்கிறோம்.
படுமோசமான ராஜபக்ச அரசாங்கத்தின் நீட்சியாக இருக்கும் தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தை விடவும் மோசமான பாதாளத்திற்கு எமது நாட்டைத் தள்ளுவதாக ஆரம்பம் முதலே எச்சரிக்கின்றோம், விரைவில் இந்த அரசாங்கத்தின் தோல்வியடைந்த வேலைத்திட்டம் அப்பட்டமாக வெளிப்படும்.
? பொஹொட்டுவவின் நிழல் அரசாங்கமாக மாறிவரும் இந்த அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தி குறித்து போலியான செய்திகளை பரப்பி தனது தோல்வியான நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயன்றது.
முதலாளித்துவ கும்பல்கள் மற்றும் பிற்போக்கு சக்திகளின் ஒரே சவால் எமது ஐக்கிய மக்கள் சக்தியாகும், அந்த கும்பல் ஒன்றுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியை சேதப்படுத்துவதற்கு எந்த விலையையும் கொடுக்க இருமுறை யோசிப்பதில்லை.
? ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு குழு அரசாங்கத்தில் இணையப்போவதாக ஆரம்பத்தில் போலியான செய்திகளை வெளியிட்ட கும்பல், பிரதமர் பதவிக்காக சமகி ஜன பலவேக அரசாங்கத்துடன் இணையும் என்பதை தங்களின் சமீபத்திய உத்தியாகப் பயன்படுத்துகின்றனர்.
இது ஒரு அப்பட்டமான பொய் என்பதுடன் ஆதாரமற்ற பொய்யான செய்திமாகும்.
? அந்த கும்பலுக்கும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தீர்க்கமான பிளவு கோடு என்னவென்றால், நாங்கள் மக்கள் சக்தி மற்றும் வெளிப்படைதன்மையை நம்பும் அதே வேளையில் அவர்கள் டீல் மற்றும் மறைமுக தன்மையை என்பதை நம்புகிறார்கள்.
இந்தத் துரதிர்ஷ்டவசமான விதியிலிருந்து நமது நாட்டை ஒரு தேர்தலால் காப்பாற்ற முடியாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்நாட்டில் இயங்கும் நாகரீக ஊடகங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்வதை வெளிப்படுத்திய ஒரு சில கைக்கூலி ஊடகங்களுக்கு இது வலியுறுத்தப்பட வேண்டும்.
? அவர்களுக்குக் கொடுக்கப்படும் விலைக்காக எந்தவொரு கட்டுக்கதையையும் சமூகமயமாக்குவதற்குப் பதிலாக, அவர்கள் ஊடகங்களை புத்திசாலித்தனமாகவும் நெறிமுறையாகவும் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.
இருப்பினும், அவர்களின் எஜமானரின் கருத்தை பிரபலப்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம்.
மக்களால் உண்மையை மாற்ற முடியாது, ஆனால் உண்மையால் மக்களை மாற்ற முடியும் என்பதை வலியுறுத்துவோம்.
? கடந்த ஒவ்வொரு நொடியும் நம் நாட்டின் அப்பாவி மற்றும் ஆதரவற்ற மக்களின் வாழ்க்கையின் தலைவிதிக்கு தீர்க்கமானது என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம், மேலும் அந்த மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியடையச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக, வெறுப்பும். பேரம் பேசுவதும்,சதிகள் மற்றும் உல்லாசப் பேரரசர்களின் அரசியலை மட்டும் முன்னெடுப்பது தன்னிச்சையானது, இதற்கு எங்கள் கடுமையான அதிருப்தினை நாங்கள் வெளியிடுவ துடன் துரதிஷ்டமான அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பினை தெரிவிக்கவிரும்புகின்றோம்.
பொது மன்னிப்பு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜூட் ஷ்மந்த அந்தோனி ஜயமஹாவின் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றில் பல்வேறு தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மியுரு பாசித லியனகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பொய் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி கொழும்பு வந்தவுடன் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளிக்கப்படும் என பாசித லியனகே விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற பல விபத்துக்களில் 26 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் 32 முதல் 35 கிலோமீற்றர் வரையில் இடம்பெற்ற 06 விபத்துக்களால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களுக்கு இடையே இடைவெளி விட்டு செல்லாமையினால் இந்த விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெலுவ பிரதேசத்தில் நேற்று (15) மாலை காணாமல் போன 3 வயது குழந்தையின் சடலம் அருகில் உள்ள ஓடையில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தனது தந்தையுடன் தனது தந்தையின் ஊருக்கு வந்தபோது குழந்தையை காணவில்லை. கடைசியாக, வீட்டின் முன்புறம் உள்ள சாலையோரத்தில், ஷார்ட்ஸ் அணிந்து, ஒரு பாட்டிலை கையில் வைத்திருக்கும் நிலையில் ஒரு குழு அவரைக் கண்டது.
குழந்தை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கான பகுதிவாசிகளுடன் பொலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர், ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
பின்னர், குழந்தையை யாரோ கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு வரை வீட்டின் அருகே உள்ள ஓடையில் சோதனை செய்தும் எந்த தகவலும் வரவில்லை. எனினும் இன்று அந்த ஓடையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் புதிதாக10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,542 - ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த புதன் கிழமை10,158 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை,11,109 பேர் பாதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 10,753 ஆகவும், சனிக்கிழமை 10,093 ஆகவும் பதிவாகி உள்ளது.
கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் இருந்து சென்னை சென்ற ஒருவருக்கும் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரகிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
100,000 குரங்குகளை வெளிநாடுகளில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது இந்த நாட்களில் (15) மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகளால் எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இலங்கை மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் இல்லை என அவர் கூறுகிறார்.
உயிரியல் ஆராய்ச்சிக்காகவே குரங்குகள் இலங்கைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாகவும், இந்த முடிவை மாற்றிக்கொள்ள எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவிருப்பதாகவும் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 அக்டோபரில் நடத்தப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் பெற்று அதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போதுள்ள அரசியலமைப்புச் சூழ்நிலையின்படி, ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு 4 வருடங்களின் பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான விருப்பத்தை வெளிப்படுத்த முடியும்.
முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா கூறுகையில் தற்போதைய ஜனாதிபதி ஒரு பிரதியீட்டு ஜனாதிபதியாக இருப்பதால், அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வ ஆணை அவருக்கு இல்லை என்று கூறுகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை மொட்டு கட்சி முன்வைப்பதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக உள்ள ஜானக ரத்நாயக்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தும் நடவடிக்கையை மதத் தலைவர்கள் குழுவொன்று ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச தனியார் கடன் வழங்குநர்களின் குழுவொன்று இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது முன்மொழிவை இலங்கை அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளது.
இதன் பெறுமதி 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தகவல்கள் கசிந்துள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு Paris Club-இன் கடன் வழங்குநர்கள் தயாராகும் நிலையில் இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டதன் பின்னர் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட முதலாவது முன்மொழிவு இதுவாகும்.
எனினும், இந்த முன்மொழிவு தொடர்பான எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இதுவரை வௌியாகவில்லை.
அரசாங்க தரப்பும் கடன் வழங்குநர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது.
சுமார் 30 கடனாளர்களின் குழுவில், உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான Amundi Asset Management, BlackRock, HBK Capital Management, T. Rowe Price Group ஆகியவை அடங்குவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான பொதுவான தளமொன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைமைத்துவத்திற்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கட்சியின் தலைமைப் பதவிக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த வேளையில், கட்சியின் இளம் உறுப்பினர்களால் நாமல் ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த தலைவர் தொடர்பில் பொதுஜன பெரமுனவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட இரண்டு பெயர்களுக்கு மேலதிகமாக அமைச்சரவையின் பிரதம அமைச்சர் ஒருவரின் பெயரும் கட்சித் தலைமைக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.