web log free
May 03, 2025
kumar

kumar

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் கஞ்சா அருந்திக்கொண்டிருந்த செயற்பாட்டாளர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நீச்சல் தடாகத்திற்கு அருகில் மறைந்திருந்து கஞ்சா அருந்திய போதே கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து அபுதாபிக்கு செல்வதாக தான் பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இந்த போராட்டம் இன்னும் சில காலம் நீடித்தால் கோட்டாபய ராஜபக்ச இரண்டு வருடம் இலங்கைக்கு செய்த வீழ்ச்சியை இந்த போராட்டக்காரர்கள் ஒரு வருடத்தில் செய்து விடுவர் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கோட்டாபய ராஜபக்ச இரண்டு வருடம் இலங்கைக்கு செய்த வீழ்ச்சியை இந்த போராட்டக்காரர்கள் ஒரு வருடத்தில் செய்து விடுவர்கள்

இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப்படையினருக்கு, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்த, தனது மக்களையும், பொதுச் சொத்துக்களையும், நாட்டையும் பாதுகாக்கும் வகையில் அதனைப் பராமரிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இராணுவ ஊடகம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் உடனடியாக விலகிக்கொள்ளுமாறும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு குறிப்பிட்டுள்ளது.

மேலும், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகவும் இராணுவம் தங்களது பலத்தை பிரயோகிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கொழும்பு மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு பொல்துவ சந்திக்கு அருகாமையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் அறுபது தோட்டாக்களை போராளிகள் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த மோதலில் ஒரு இராணுவ சிப்பாய் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளனர் மற்றும் அந்த இராணுவ சிப்பாயும் கடுமையாக தாக்கப்பட்டார். 

பார்லிமென்ட் அருகே போலீஸ் சாலைத் தடையை உடைக்க ஆர்வலர்கள் பேக்கோவைப் பயன்படுத்தினர்.

அப்போது அந்த சாலையில் பயணித்த பேக்ஹோ இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக சம்பவத்தை படம் பிடித்த நபர் கூறுகிறார்.

பதில் ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளார்என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வெடித்த மோதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது 75 பேர் காயமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பொல்துவ சந்தியில் இன்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 33 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த மோதலின் போது ஒரு போலீஸ் அதிகாரியும் படுகாயமடைந்தார்.

இதற்கிடையில் பிரதமர் அலுவலகம் அருகே இன்று காலை பதற்றமான சூழ்நிலையில் 42 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவில்லை. 

பிரதமர் பதவி விலகியதும் சபாநாயகரை பதில் ஜனாதிபதியாக நியமித்து எதிர்கால அரசியல் தீர்மானங்களை எடுக்க கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd