web log free
May 03, 2025
kumar

kumar

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னர் அறிவித்தபடி பதவி விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

 

 இப்பொது நாகசைதன்யா நடித்து வரும் திரைப்படம் ‘Thank you’. இந்த படத்தில் இவருடன் ராஷி கண்ணா, மாளவிகா நாயர், அவிக்க கோர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற ஜூன் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷனுக்காக நாகா சைதன்யா தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் #Thankyou என கூறி தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் தன்னுடைய வளர்ப்பு நாய் ஹாஷ் என 3 புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

 

இதில் அந்த நாயுடன் இருக்கும் போஸ்டர் தான் இப்பொது மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அது நடிகை சமந்தாவின் நாயாகும். அவரின் வளர்ப்பில் தான் இப்பொது விவாகரத்திற்கு பிறகு அந்த நாய் உள்ளது. இதனால் அம்மா, அப்பா அடுத்து தன்னுடைய காதல் மனைவி சமந்தாவிற்கு பதிலாக அவருடைய நாய் புகைப்படம் போட்டு மறைமுகமாக சமந்தாவை தான் அவர் பேசுகிறார் என பலரும் கருத்துக்கள் கூறி வருகிறார்கள்

எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து, எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகள் பல விசேட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து நாடு பூராகவும் லங்கா IOC நிறுவனம் இன்று 100 பவுசர்களில் 1.5 மில்லியன் லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

லங்கா IOCயின் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் இவ் அறிக்கையில் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது .

இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
 
1990 அம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையில் டீசல் வழங்கப்பட்டு வருகின்றது .
 
மட்டக்களப்பு போதானா  வைத்தியசாலை ஆம்புலன்ஸ் உட்பட சில வாகனங்களுக்கு  மட்டக்களப்பு IOC  டீசல் வழங்கி வருவதாக மட்டக்களப்பு IOC உரிமையாளர் முத்துக்குமார் செல்வராஜா தெரிவித்தார். 

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஊகச் செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

"இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை" என்று உயர் ஸ்தானிகராலயம் ட்வீட் செய்தது.

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இன்று தெளிவாகத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஊகச் செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

"இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை" என்று உயர் ஸ்தானிகராலயம் ட்வீட் செய்தது.

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இன்று தெளிவாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் மாற்று பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படுவார் என  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரே மாற்றுப் பிரதமராகும் என்றார்.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைத்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

மேலும், தற்போதைய நெருக்கடியை நாடாளுமன்றத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், நாட்டில் அராஜகம் ஏற்பட்டால், ஆப்கானிஸ்தான் சூடான், துனிசியா போன்று மாறும் என்றும் அவர் கூறினார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும், இவ்வாறான கீழ்த்தரமான குற்றச் செயல்களைச் செய்வதற்கு மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd