web log free
May 02, 2025
kumar

kumar

நாட்டில் நேற்று இரவு 9 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படுவதாக பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளார். 

 

 

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக தமக்கு தகவல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி ராஜபக்ச இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் தனது குழந்தையுடன் சிங்கப்பூர் வழியாக பிரான்ஸ் சென்றதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் விமான நிலையத்திற்குள் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன இன்று (ஜூலை 08) அறிவித்துள்ளார்.

இதன்படி, நீர்கொழும்பு பொலிஸ் பகுதி, களனி பொலிஸ் பகுதி, நுகேகொட பொலிஸ் பகுதி, கல்கிசை பொலிஸ் பகுதி, கொழும்பு வடக்கு பொலிஸ் பகுதி, கொழும்பு தெற்கு பொலிஸ் பகுதி மற்றும் கொழும்பு மத்திய பொலிஸ் பகுதியில் மறு அறிவிப்பு வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பல இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளையும் நாளை மறுதினமும் கொழும்பில் இடம்பெறும் போராட்டம் காரணமாக அவர் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தற்போது இலங்கையில் இருப்பதாகவும் அவர் வெளிநாடு செல்ல தயாராக இல்லை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகக் கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார வியாழக்கிழமை (7) இரவு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

களுத்துறை அங்குருவாதோட்டையில் சமய நிகழ்வு இடம்பெற்ற வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து எம்பி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமர் பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக தெரிவித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவை  மன்னிப்பு கேட்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக வாரப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்ட அமைச்சரை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டியதாகவும், பிரதமரிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், திங்கட்கிழமைக்குள் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுவரை தொலைபேசி கூட பேசவில்லை அல்லது மன்னிப்பு கேட்கவில்லை என்று அதே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றினார்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு பற்றி எதுவுமே தெரியாத தம்மிக்க பற்றி அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகின்றது.

மேலும் கசினோ வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான வரிவிதிப்புக்கு பிரதமர் கொண்டு வந்த அமைச்சரவை பத்திரமே இந்த மோதலின் ஆரம்பம் என ஏனைய விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார். பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

இவரின் கைவசம் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவர் புடவையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்துக்கொள்வதற்கான வசதிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனமொன்றின் பிரதிநிதிகள் இருவர் இலங்கை வந்துள்ளனர்.

அவர்களை வரவேற்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட பலர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd