web log free
August 02, 2025
kumar

kumar

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்ற தனிஸ் அலி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக துபாய் நோக்கி செல்ல முயன்ற போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொன்னாலை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் ஏற்றி சென்ற அப்பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் பொன்னாலை காட்டு பகுதிக்குள் வயோதிப பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, வன்புணர முற்பட்டுள்ளான்.

அதனை அடுத்து குறித்த பெண் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுவனை கைது செய்து, பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்காலிக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய அவசர நிலை பிரகடனத்திற்கு விவாதத்தின் பின்னர் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
ஜனாதிபதி அறிவித்துள்ள அவசரச் சட்டத்துக்கு 14 நாட்களுக்குள் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் அது ரத்து செய்யப்படும்.

மன்னார் பேசாலை பகுதியில் வைத்து 04 மில்லியன் ரூபா பெறுமதியான 14 கிலோ 980 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் மற்றும் டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேசாலை பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையின் நிமன்னாராம பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கேரள கஞ்சா பொதிகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கேரள கஞ்சா கையிருப்பு இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு கொண்டு வரப்பட்டு இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய பைசாலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபருடன் கேரள கஞ்சா கையிருப்பையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹட்டன் கொட்டகலை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் சேமிப்பு வளாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் எரிபொருளை ஏற்றிச் செல்லும் போவர்களைப் பயன்படுத்தி எரிபொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

கொட்டகலை கனிய எண்ணெய் கூட்டுத்தாபன எண்ணெய் சேமிப்பு வளாகத்தில் இருந்து நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சிபெட்கோ மற்றும் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் எரிபொருளை கொண்டுசெல்லும் போது, ​​சேமிப்பக வளாகத்தின் உயர் அதிகாரி சில காலி போத்தல்களை பவுசரில் ஏற்றி இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக என்று கூறப்படுகிறது.கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் சேமிப்பு வளாகத்திற்கு அருகில் உள்ள ஒரு கடைக்கு விநியோகிக்கப்பட்டது.

அந்த கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது," ​​எண்ணெய் சேமிப்பு வளாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் காரில் இரண்டு எரிபொருள் போத்தல்களை கொடுத்ததாகவும் பின்னர் எண்ணெய் சேமிப்பு வளாகத்தின் உயர் அதிகாரி எரிபொருள் போத்தல்களை எடுத்துச் செல்வதாகவும் "கூறினார்

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் வாரத்திற்கு பெறப்பட்ட எரிபொருளின் அளவு கீழே காட்டப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீற்றர் பெட்ரோல்

முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் பெற்றோல்

வேன்களுக்கு 20 லீற்றர் பெட்ரோல்

கார்களுக்கு 20 லீற்றர் பெட்ரோல்

பிற வாகனங்களுக்கு 15 லீற்றர் பெட்ரோல்

லொறிகளுக்கு 50 லீற்றர் பெட்ரோல்

பேருந்துகளுக்கு 40 லீற்றர் டீசல்

முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் டீசல்

வேன்களுக்கு 20 லீற்றர் டீசல்

கார்களுக்கு 20 லீற்றர் டீசல்

பிற வாகனங்களுக்கு 15 லீற்றர் டீசல்

லொறிகளுக்கு 50 லீற்றர் டீசல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை வரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் பதுங்கியிருக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீதிமன்ற அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. 

ஜனாதிபதி மாளிகையின் ஜன்னல் திரைச்சீலைகள் தொங்குவதற்காக சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க பித்தளை உருண்டைகளை திருடி பழைய பொருட்களாக விற்பனை செய்ய தயாராக இருந்த மூவரை நேற்று (24) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் ராஜகிரிய - ஒபேசேகரபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் 28, 34 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிக்கடை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 9-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்து இந்தத் திருட்டைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd