லங்கா ஐஓசி நிறுவனம் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி பெற்றோல் ஒரு லீட்டர் மேலும் 35 ரூபாவினாலும் அனைத்து வகை டீசல் ஒரு லீட்டர் மேலும் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (18) 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
A-W வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 3 மணி நேர இடைவெளியிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற வரம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இன்றைய தினம் கலந்து கொண்ட அனைத்து இன மொழி மத மக்களும் ஒன்றிணைந்து தமிழ் மொழியில் நாட்டின் தேசிய கீதத்தை சத்தமாக பாடிய சம்பவம் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
தமிழ் மொழியிலான தேசிய கீதம் சிங்கள மொழியில் எழுதிக் கொடுக்கப்பட்ட ஆங்கிலத்திலும் எழுதி கொடுக்கப்பட்டு தமிழில் இசைக்கப்பட்டது.
மரியுபோல் நகரில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டோம் என்று ரஷியா அறிவித்துள்ளது. அந்நகரம் உக்ரைன் படையிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் சில வீரர்கள் சரண் அடைய மட்டுமே புறநகர் பகுதியில் உள்ளனர் என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷியா கெடு விதித்துள்ளது. மரியுபோல் நகரில் இன்றும் சண்டையிடும் உக்ரைன் வீரர்கள் சரண் அடைய கெடு விதிக்கப்படுகிறது. அவர்கள் இன்று காலை 6 மணி முதல் (மாஸ்கோ நேரம்) தங்களது ஆயுதங்களை போட்டு விட்டு உயிரை காப்பாற்றி கொள்ள சரண் அடைய வேண்டும் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
10.00: மரியுபோலின் தலைவிதியை போர் அல்லது ராஜதந்திரம் மூலம் தீர்மானிக்க முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மரியுபோலின் நிலைமை மனிதாபிமானமற்றது. ரஷியா அங்குள்ள அனைவரையும் வேண்டுமென்றே அழிக்க முயற்சிக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
06.40: உக்ரைன் போரில் ரஷிய ராணுவ ஜெனரல் விளாடிமிர் ஃப்ரோலோவ் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கல்லறையில் புதைக்கப்பட்டதாகவும் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்துள்ளார்.
03.10: உக்ரைன் தலைநகர் உள்பட பிற நகரங்கள் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்களை தொடங்கி உள்ளது. தனது போர் கப்பலை இழந்து விட்ட நிலையில், உக்ரைன் மேற்கு நகரங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்துமாறு ரஷிய ராணுவ தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உக்ரைன் ராணுவ தளங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ரஷிய படைகள் தெரிவித்துள்ளன.
02.20: ரஷியா இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் உக்ரைனில் தனது அடுத்த கட்ட தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கலாம் என அமெரிக்க ராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து உக்ரைனுக்கு அதிக பீரங்கி மற்றும் வெடிமருந்துகளை அனுப்ப வேண்டும் என்று தோழமை நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
01.29: மரியுபோல் நகரின் அனைத்துப் பகுதிகளையும் உக்ரைன் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போரின்போது ஏப்ரல் 16 ஆம் தேதி வரை, துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரைன் ராணுவம் 4 ஆயிரம் வீரர்களை இழந்து விட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
12.40: போர் நடைபெறும் உக்ரைன் நகரங்களில் இருந்து சனிக்கிழமை மட்டும் 1,449 பொதுமக்கள் மனிதாபிமான பாதைகள் வழியே வெளியேற்றப் பட்டுள்ளதாக உக்ரைன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
16.04.2022
21.30: உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷியா படை எடுப்பிற்கு பின்னர், இதுவரை 50 லட்சம் உக்ரைன் மக்கள் தங்களை வீடுகளை இழந்துள்ளதாகவும் ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.
19.30: லிசிசான்ஸ்க் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ரஷியப் படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். தாக்குதலின் போது சுத்திகரிப்பு ஆலையில் எரிபொருள் இல்லை என்றும் எண்ணெய் கழிவுகள் தீப்பற்றி எரிவதாகவும் அவர் கூறினார்.
18.15: பெலாரசில் இருந்து புறப்பட்ட ரஷிய போர் விமானங்கள் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் பகுதியில் ஏவுகணைகளை வீசியதாகவும், அங்கு உக்ரைன் வான் பாதுகாப்பு படையினரால் நான்கு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.
17.00: தலைநகர் கீவ் மீது ரஷியா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் இன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறினார். தலைநகர் கீவுக்கு வெளியே 900க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
16.00: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன்- ரஷியா இடையேயான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார். இந்நிலையில், ரஷியாவிற்கு எதிராக இங்கிலாந்து அரசு பொருளாதார தடையும் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷியாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
12.00: உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசு தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றினால், "கணிக்க முடியாத விளைவுகள்" ஏற்படும் என அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமான முன்னாள் அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்தது.
ஆசியன் மிரருக்கு கிடைத்துள்ள தகவல் படி புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்கி அமைச்சரவையை நியமிக்க தயாராகி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் அமைச்சுப் பதவிகள் வேண்டாம் என முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அனுபவம் அற்றவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்குவது அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.
20 அமைச்சரவை அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. 10 சிரேஷ்ட அமைச்சர்களும் பத்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, அமைச்சர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் பலர் விண்ணப்பித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 09 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனிடையே, நேற்று (16) காலை ஜனாதிபதி அலுவலகத்தை அண்மித்த வீதியில் பொலிஸ்
ட்ரக் வண்டிகள் பல நிறுத்தப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
சில மணித்தியாலங்களின் பின்னர் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் அவை அங்கிருந்து அகற்றப்பட்டன.
இந்நிலையில், கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலி நகரில் ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில், நேற்றுமுன்தனம் முதல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு நேற்று பகல் சென்ற பொலிஸார், மாலை 04 மணிக்குள் அதனை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாக செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரக போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டதையடுத்து, மற்றுமொரு இடத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு அதற்கு “கோட்டாகோகம” என பெயரிடப்பட்டது.
இதனிடையே, காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனிநபர் ஒருவர், அனுராதபுரம் தொடக்கம் கொழும்பு காலி முகத்திடல் வரை நடைபயணத்தை நேற்று காலை ஆரம்பித்தார்.
கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டாகோகம’ கிராமத்திற்கு நீர்கொழும்பில் இருந்து இசைக் கலைஞர்களுடன் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சென்றனர்.
நீர்கொழும்பில் இருந்து நேற்று காலை 7.10 அளவில் புகையிரதம் மூலமாக 150-இற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் நகர மக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கொழும்பு நோக்கி வருகைதந்தனர்.
கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்ற இவர்கள், கொழும்பு காலி முகத்திடலை 10.15 அளவில் அடைந்தனர்.
நீர்கொழும்பு மக்களும் இசைக்கலைஞர்களும் பாட்டுப்பாடி கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்களுக்கு உற்சாகம் அளித்திருந்தமை விசேட அம்சமாகும்.
சமீபத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் மதம் மாறும் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் ஜெய்,பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா,நடிகர் சிம்புவின் தம்பி உள்ளிட்டோர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்தினை ஏற்று கொண்டனர். இதனிடையே தற்போது பிரபல நடிகர் விஷால் மதம் மாறிவிட்டார் என்ற செய்தி இணையத்தில் உலா வருகிறது. தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் விஷால் பதிவிட்ட பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் விஷால் 2004ஆம் ஆண்டு, வெளிவந்த செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.தற்போது வருடத்திற்கு ஒரு படத்திலாவது விஷால் நடித்து வெற்றி கொடுத்து வருகிறார். சமீபத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது விஷால்,சுனைனா நடிப்பில் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பேன் இந்தியா படமாக உருவாகி கொண்டிருக்கும் லத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் ஆர் வினோத் குமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் இவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் சிம்புவை போலவே 40 வயது கடந்தும் நடிகர் விஷாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில் ரசிகர்கள் விஷாலின் திருமணம் எப்போது என்று கேட்டுக்கொண்டே இருப்பர். ஆனால் அதற்கெல்லாம் செவிசாய்க்காத விஷால், தன்னுடைய திரைப்படங்களை தயாரிப்பதிலும்,நடிப்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இத்தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க ஒரு பதிவை விஷால் பதிவிட்டுள்ளார். ஆனால் அப்பதிவில் ஒரு சர்ச்சையும் கிளம்பி உள்ளது.
அந்தப் பதிவில், இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும், நான் மீண்டும் மாமா ஆகிவிட்டேன், எங்கள் வீட்டின் இளவரசிக்கு தற்போது குட்டி இளவரசி பிறந்துள்ளார். அந்தக் குழந்தையையும் தம்பதியினரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் இன்ஷா அல்லாஹ் என்ற பதிவை விஷால் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள், இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டதை விஷால் மதம் மாறிவிட்டாரா என்று கேள்வியை எழுப்பியுள்ளனர்.
பொதுவாகவே இஸ்லாமியர்கள் இன்ஷா அல்லா என்ற வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவர். ஆனால் ஹிந்து மதத்தில் இருக்கும் விஷால் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்றால் கட்டாயம் இஸ்லாமிய மதத்திற்கு விஷால் மாறியுள்ளார் என்பதுதான் அர்த்தம் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஆனால் விஷால் தரப்பிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்ற எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. இதனிடையே இப்பதிவு இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காலிமுகத்திடலில் சிட்டி விளக்கில் #GoHomeGota விளக்கேற்றி ஜனாதிபதி பதவி விலக கோரி போராட்டம் முன்னெெுக்கப்படுகிறது. இன்று 8வது நாளாக தொடரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.