web log free
December 15, 2025
kumar

kumar

எதிர்கால ஜனாதிபதிகள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தமது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதியுயர் பாதுகாப்பு இல்லமாக இருந்த ஜனாதிபதி மாளிகையின் உள்ளே இருந்த இடம் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உலகிற்கு திறந்து விடப்பட்டதன் காரணமாக.

இதன் காரணமாக எதிர்கால ஜனாதிபதிகளும் பாதுகாப்பின்றி அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்படும் என பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசர காலங்களில் ஜனாதிபதி அழைத்துச் செல்லப்படும் நிலக்கீழ் பதுங்கு குழி உட்பட அனைத்து அறைகளின் இருப்பிடம் உலகறிந்த நிலையில், இது பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளதாக பாதுகாப்பு பிரதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இங்கு தங்கியிருப்பது அடுத்த ஜனாதிபதிக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என பாதுகாப்பு தரப்பினர் கருதுகின்றனர்.

இதன் காரணமாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை தங்க வைப்பதற்கு மற்றொரு பாதுகாப்பு இல்லம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் சில பதிவுகளை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியிடப்படுவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் ஊடாக சில நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வாக்கு அல்லது அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிப்பதாகவும், அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் பிரகாரம், சமூக ஊடகங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல்களை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளது

இன்று இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. இதன்படி லீற்றருக்கு புதிய விலை வருமாறு 

பெற்ரோல் 92 ஒக்டேன் - ரூ. 450/- குறைப்பு 20 ரூபா

பெட்ரோல் 95 ஒக்டேன் - ரூ. 540/- குறைப்பு 10 ரூபா 

 டீசல் - ரூ. 440/- குறைப்பு 20 ரூபா 

 சுப்பர் டீசல் - ரூ. 510/-  குறைப்பு 10 ரூபா 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனை மற்றும் மத்திய அரசின் உதவிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதித் தேர்தலில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மக்களுக்கு விரைவான நிவாரணம் வழங்குவதுடன் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் பாரம்பரிய பிளவுகள் இன்றி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த வேலைத்திட்டத்தை தயாரிக்கும் சக்தி வாய்ந்த பாராளுமன்ற பிரதிநிதியாக டலஸ் அழகப்பெரும திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர தனியார் வகுப்புகளில் கலந்து கொண்ட நான்கு மாணவிகளை நிர்வாண புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பில், தனியார் வகுப்புகளை நடத்தும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் ரம்பொடகல்ல மற்றும் மாவத்தகம பிரதேசங்களில் தனியார் வகுப்புகளை நடத்தி வருவதாகவும் சந்தேக நபர் பாடசாலை ஆசிரியர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நான்கு மாணவிகளையும் காரில் ஏற்றிச் சென்று காரை நிறுத்திவிட்டு மேலும் கற்றுக்கொடுக்கப் போவதாகக் கூறி பின்வரும் புகைப்படங்களை எடுத்ததாக நான்கு மாணவிகளும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அந்த நபரின் செல்போனை சோதனையிட்டபோது, ​​அதில் நான்கு மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவாகியிருந்ததாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது தமிழ்க் கட்சிகள் நடுநிலை வகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்கேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 11 கட்சிகள் இவ்வாறு நடுநிலை வகிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

உலக சந்தையில் தங்கத்தின் விலை இரண்டு சதவீதம் குறைந்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,719 அமெரிக்க டாலர்கள் மற்றும் 30 காசுகளாக பதிவானது.

கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1750 டாலராக பதிவானது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் அவரது குடும்பத்தினர் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதியாக போட்டியிட தயாராக உள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd