web log free
April 27, 2025
kumar

kumar

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். அதோடு அவரது கேப்டன்சியில் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்கிற காரணத்தினால் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து அவர் வெளியேறி உள்ளார்.

இந்நிலையில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடி வந்தாலும் இன்னும் அவரது 71-வது சதத்தை அடிக்காமல் தாமதித்து வருகிறார். இதன் காரணமாக அவரின் பேட்டிங் பார்ம் மீது இன்னும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மேலும் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரிலும் அவரது பேட்டிங் சுமாராகவே இருந்ததனால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர் பின்தங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் விராட் கோலி டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாட போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் கடந்த ஆண்டு வரை கேப்டனாக செயல்பட்ட அவர் பணிச்சுமை காரணமாக அந்த கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி தற்போது முழு நேர பேட்ஸ்மேனாக விளையாட இருக்கிறார்.

பின்னர் இந்த ஐபிஎல் தொடர் முடிந்து இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த தொடரில் இருந்து வெளியேறும் விராட் கோலி டெல்லி அணிக்காக இரண்டாம் பாதி ரஞ்சி டிராபியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகின்றன. இதற்கு பின்னர் பிசிசிஐ தலைவர் கங்குலி கொடுக்கும் அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் ரன் குவிக்க தடுமாறிய வேளையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அவர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடி தங்களை நிரூபித்தால் நிச்சயம் மீண்டும் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் ரஞ்சி போட்டிகளில் விளையாடினர்.

அதே வகையில் தற்போது கோலியின் மீதும் அழுத்தம் அதிகரித்து உள்ளது, இதன் காரணமாகவே தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட யோசித்திருக்கிறார். இதையும் படிங்க : நான் ஸ்கூல் படிக்கும்போதே அப்படித்தான் – கெத்தான பள்ளி வாழ்க்கை கதையை பகிர்ந்த கெளதம் கம்பீர் ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலி மீண்டும் பழைய பார்ம்முடன் திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இருப்பினும் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் தென்னாபிரிக்க தொடருக்கான அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. 'தேர்தல் செல்லாது' என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் எண்ணப்பட்டு வந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகியிருந்தது. அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின. நடிகர் சங்க தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசம் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

விறுவிறுப்பாக நடிந்து வந்த வாக்கு எண்ணும் பணி சில காரணங்களால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. இந்நிலையில் பாண்டவர் அணி சார்ப்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரக்கட்டணத்தை ஐம்பது வீதத்தினால் அதிகரிக்கவேண்டும் என இலங்கை மின்சார சபை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதா தகவல்கள் வெளியாகின்றன.
 
சமீபத்தைய எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதற்காக ஐம்பது வீத அதிகரிப்பினை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
 
இலங்கை மின்சார சபை தற்போது ஒரு யூனிட்டிற்கு 9 ரூபாய் இழப்பினை எதிர்கொள்கின்றது முன்னர் ஒரு யூனிட்டிற்கான உற்பத்தி செலவு 15 ரூபாயாக காணப்பட்டது தற்போது 29 ரூபாயாக அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 
சமீபத்திய எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு முன்னர் இலங்கை மின்சார 35 வீத அதிகரிப்பினை கோரியிருந்தது.தற்போது 50 வீத அதிகரிப்பினை கோருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இழப்புகளை எதிர்கொள்ளாமல் பாதுகாப்பான நிலையில் மின்சாரசபை செயற்படுவதை உறுதி செய்வதற்கு கட்டண அதிகரிப்பு அவசியம் என மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டிணான்டோ தெரிவித்துள்ளார்.
 
ஒரு அலகி;ற்கான உற்பத்தி செலவு 29 ருபாயாக அதிகரித்துள்ள நாங்கள் 15 ரூபாய்க்கே விற்பனை செய்கின்றோம்,எங்களிற்கு ஒரு அலகிற்கு 9 ரூபாய் இழப்பு ஏற்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் இந்த இழப்புகளை தவிர்ப்பதற்காக இலங்கை மின்சார சபை ஒரு அலகின் விலையை 25 அல்லது 26 ஆக அதிகரிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த விலை அதிகரிப்பு இலாபம் உழைப்பதை நோக்கமாக கொண்டதல்ல இழப்பை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கந்தரோடை விகாரைக்கு செல்ல திட்டமிட்டிருந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச அப்பயணத்தை திடீரென ரத்து செய்தார். யாழ்ப்பாணத்திற்கு சென்ற இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, நயினா தீவுப்பகுதியில் உள்ள விகாரைகளில் வழிபாடு நடத்தினார்.

அங்குள்ள நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்ற மகிந்த ராஜபட்ச, வழிபாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து, கந்தரோடை விகாரைக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவர், திடீரென அதனை ரத்து செய்தார்.

கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை விமானத்தில் கடத்தி வரப்பட்ட பழங்கால நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, இரண்டு இலங்கை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர்கள், மிகவும் பழமையான நாணயங்களை மறைத்து வைத்திருந்தனர். அதுபற்றி கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். மிகவும் பழமையான அந்த நாணயங்களின் மீது வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது. அவை விலை மதிப்பில்லாதவை என அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறையினர், அவர்களிடம் இருந்த 12 பழங்கால நாணயங்களை  பறிமுதல் செய்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த நாணயங்களை இவர்களிடம் கொடுத்தது யார், சென்னையில் யாரிடம் கொடுக்க வந்தனர் என அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கடவத்தை எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார், இவர் முச்சக்கர வண்டி சாரதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிலையத்தில் காத்திருந்த அவர், தவறிவிழுந்து மயங்கிமடைந்ததாகவும், உடனடியாக அவர்  ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், இது இரண்டாவது மரணம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 

ஒரு கப் பால் தேநீரின் விலையை 100 ரூபாயாக அதிகரிக்கப்பதாக தெரிவித்துள்ள சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம். இந்த வி​லை அதிகரிக்கு இன்று (20) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

உத்தர பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் ரோஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்ரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்வதி (70). இவரது மகன் ராம் நரேஷ் (35). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று இரவு ராம் நரேஷ் தனது தாயிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ராம்வதி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் ராம்வதியை அடித்து தாக்கியுள்ளார். இதில் ராம்வதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், ராம்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட ராம் நரேஷை கைது செய்தனர்.

மதுபானத்திற்காக தாயையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இதற்கிணங்க, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த பிரிவுகளில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்த பிரிவுகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்த பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd