முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியான “Read with Ranil” (ரணிலுடன் வாசிப்போம்), ஜூலை 15ஆம் திகதி கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
தேசிய இளைஞர் முன்னணியின் (National Youth Front) ஸ்மார்ட் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) பிரிவு ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்ச்சியின் முதல் கட்டம் “புதிய உலக ஒழுங்கு: புவிசார் அரசியல், பொருளாதார மாற்றங்கள் மற்றும் இலங்கையின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.
உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மற்றும் அவை இலங்கையின் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து இளைஞர்கள் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை இந்த நிகழ்ச்சி வழங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.




