[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉலக செய்திஇதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி ‘த வாஷிங்டன் போஸ்ட்’ (The Washington Post) செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, போர் தொடங்கியது முதல் இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதில் ஜோர்டான், குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் அமைந்த அமெரிக்க ராணுவ தளங்களைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் மட்டும் 9 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இப்போராட்ட நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இதுவரை 37.5 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ₹3,62,10,00,00,000) செலவிட்டுள்ளதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள், உயிரிழப்புகள் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிதிச் சுமையால் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் இப்போரின் தாக்கம் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மே மாதம் கணக்கிடப்பட்ட நிதி மதிப்பீட்டை விட தற்போது வெளியான தொகை மிகவும் அதிகமாகும். ஒப்பீட்டளவில், கடந்த சில மாதங்களிலேயே இந்தச் செலவினம் சுமார் ரூ. 68,000 கோடி வரை அதிகரித்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கூட்டியுள்ளது, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் தற்காப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளின் தீவிரத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், அமெரிக்கா மேற்கொண்டு வரும் இந்த ராணுவப் பங்களிப்பு அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பாத பட்சத்தில், வரும் மாதங்களில் இந்த ராணுவச் செலவினம் மேலும் பல பில்லியன் டாலர்களைக் கடந்து உயரும் எனப் பொருளாதார மற்றும் ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

spot_img

Latest articles

அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

ஒருகாலத்தில் சிறிகொத்த மற்றும் டாலி வீதியை மையமாகக் கொண்டு நாட்டின் ஆட்சிச் சக்தி இயக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளதுடன், தற்போது...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24...

கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்து...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு மீன் விலை உயர்வு!

-கடலில் மீன் பற்றாக்குறை மழைக்காலம் முடிவடைந்திருந்தாலும், கடலில் மீன் பிடிப்பு குறைந்துள்ளதால், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சாளை,...

More like this

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் – இந்தியா கடும் கண்யா

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இதற்கு இந்திய...

கச்சா எண்ணெய் விலை

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதன் விளைவாக இன்று (20)...

சவுதி விமான நிலையம் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை...