காய்ச்சல் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இந்த நாட்களில் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு முககவசம் அணியுமாறு சுகாதாரத் துறைகள் பெற்றோருக்கு அறிவுறுத்துகின்றன.
கை, கால் மற்றும் வாய் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் இந்நாட்களில் பதிவாகுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் திபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் முன்னணி பிளாஸ்ரிக் மூலப் பொருள் விநியோகத்தர் மற்றும் வழங்குநரான SDD பொலிமர் (தனியார்) நிறுவனமானது கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் மிகப்பிரம்மாண்ட நிகழ்வொன்றுடன் சமீபத்தில் தனது 20வது வருட பூர்த்தியை கொண்டாடியது.
ஸ்தாபகர்களான திரு. திருமதி.ஜெயசீலன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டமானது, இலங்கையின் பொதியிடல் மற்றும் பொலிமர் துறையின் முன்னிலை கம்பெனியாக நிறுத்துவதற்கு உந்திய இரு தசாப்தகால புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் வலுவான பங்காண்மை என்பவற்றை பதிவு செய்வதற்கு விசேட விருந்தினர், உயர்மட்டத்தினர், தொழில்துறை வித்தகர்கள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பணியாட்தொகுதியினரை ஒருங்கே கொணர்ந்திருந்தது.
2004 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட, SDD பொலிமர் ஆனது பொலிமர் துறையில் சிறியதொரு தொழில்முயற்சியிலிருந்து முன்னணி பங்காளராக வளர்ந்துள்ளது. பெட்ரோகெமிக்கல் உற்பத்திகளில் விசேடத்துவம் வாய்ந்த கம்பெனியானது பிளாஸ்ரிக் கைத்தொழில் துறையின் பல்வேறு துறைகளிற்கும் வசதியளிக்கும் Polypropylene (PP), High-density Polyethylene (HDPE), Low-density Polyethylene (LDPE), Linear Low-density Polyethylene (LLDPE), Polystyrene (PS), Masterbatches, Additives, Fillers, and Compounds என்பன அடங்கலாக பரந்தளவிலான பிளாஸ்ரிக் மூலப் பொருட்களை வழங்குகின்றது.
இந்நிகழ்வானது SDD பொலிமரின் சாதனைகளைக் கொண்டாடியதுடனல்லாமல் கம்பெனியின் பயணத்தில் உந்துதலாக விளங்கிய வழங்குநர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றியையும் தெரிவித்திருந்தது. இலங்கையின் பொதியிடல் துறையின் தனிச்சிறப்பானவரும் Premium Packaging Solutions Pvt Ltd. இன் Chairman / Managing Director திரு.ரொஹான் விஜேசிங்க, மற்றும் Polypack Secco Ltd. இன் Commercial Manager திரு. அலெக்ஸ் சமரரத்ன முதலிய துறைசார் வித்தகர்கள் SDD பொலிமரின் அபரிதமான வளர்ச்சி மற்றும் கைத்தொழில் துறையில் அதன் பங்களிப்பு என்பவற்றை பிரதிபலிக்குமாறு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக்கொண்டனர்.
Supreme Petrochem Ltd, India இன் Sr. Vice President திரு.ரங்கராஜன், Plastiblends India Ltd இன் Vice Chairman / Managing Director திரு.வருண் காப்ரா, மற்றும் SDD பொலிமரின் ஆலோசகர் திரு. ரொமேஷ் மொராயஸ் (Formerly of Finlays Colombo Ltd. இல் முன்னாள் பணியாற்றியவர்) ஆகியோர் அடங்கலாக பங்காளர்களின் உரைகள் கம்பெனியின் புத்தாக்கம், தரம், மற்றும் நிலையான தன்மை என்பவற்றை அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும், ஸ்தாபகர் திரு. ஜெயசீலனின் சகோதரரான திரு. குணசீலன் கடந்த வருடங்களில் SDD பொலிமரின் வெற்றியை முன்னோக்கி கொண்டுசென்ற தொலைநோக்கு மற்றும் பெறுமதிகளை குறிப்பிட்டு, ஸ்தாபகர்களின் நிலைப்பாட்டிலிருந்து உரையொன்றினை வழங்கினார்.
பாராட்டு தெரிவிக்கும் முகமாக, கம்பெனியின் வெற்றிக்கான அயராத பங்களிப்பினை அங்கீகரித்து, பிரதான பங்குதாரர்கள் மற்றும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக SDD பொலிமருடன் நீண்டகால பணியாற்றும் அணி உறுப்பினர்களான திருமதி.சதுரிகா மற்றும் திருமதி.சங்கீதிகா ஆகியோர் அவர்களது விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பிற்காக கௌரவிக்கப்பட்டனர்.
தனது முடிவுறையில், Founder/Managing Director திரு.ஜெயசீலன் கம்பெனியின் பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். “இவ்விருபதாம் வருட மைற்கல்லானது எம்முடைய ஒட்டுமொத்த அணியினதும் எமது நம்பிக்கைமிகு பங்காளர்களினதும் கடின உழைப்பு, போராட்டகுணம் மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றிற்கான சான்றொன்றாகும். நாம் ஒன்றாக சில குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளதுடன், பொலிமர் துறைக்கான எல்லைகளை விஸ்தரிப்பதிலும், புதுமை செய்வதிலும் மற்றும் நிலையான தீர்வுகளை உருவாக்குவதிலும் நாம் தொடரவிருக்கின்ற எதிர்காலம் குறித்து நான் ஆர்வமாகவிருக்கின்றேன்” என்பதனை வெளிப்படுத்தினார்.
தொடரவிருக்கும் சவால் நிறைந்த வருடங்களினை கருத்திற் கொண்டு பயணத்தினைப் பிரதிபலிப்பதற்கு விருந்தினர்களுக்கு வாய்ப்பளித்து, அம்மாலையானது பகலுணவுடன் நிறைவுபெற்றது. SDD பொலிமரானது தனது வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தினை தொடங்கியுள்ள நிலையில் அதிசிறப்பானவற்றை முற்கொண்டுசெல்வதற்கும் பொலிமர் துறையில் முன்னணி வகிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் காணப்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணியுடன் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டு அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது மோசடி காரணமாக அல்ல என்றும் அவர் உண்மையை பேசியதால் தான் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.
திருட்டு, மோசடிகளுக்கு எதிராக தனித்து போராடியவர் ரஞ்சன் ராமநாயக்க எனவும், பொதுத் தேர்தலின் பின்னர் அநீதிக்கு ஆளானவர்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவது தொடர்பில் மூன்று யோசனைகள் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
சமகி ஜனபல கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவது, யானை சின்னத்தில் போட்டியிடுவது என மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சஜபாவுடன் இணைவது தொடர்பாக ருவன் விஜயவர்தன நடத்திய கலந்துரையாடலைத் தொடருமாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நவீன் திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் ஆஷு மாரசிங்க ஆகியோரும் அந்த யோசனைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
சஜபய இரண்டு முறை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருப்பதால், இம்முறையும் தோற்கடிக்கப்படலாம் என வஜிர அபேவர்தன மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட போதிலும், பொதுத் தேர்தலில் அது தொடர்பான தொழிநுட்ப சிக்கல்கள் காணப்படுவதாக செயற்குழு குறிப்பிட்டுள்ளது.
செயற்குழுக் கூட்டம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்று சுமார் 5.30 மணிவரை இடம்பெற்றது.
உகண்டாவிலும் ஏனைய நாடுகளிலும் ராஜபக்ச குடும்பம் பல பில்லியன் டொலர்களை திருடி மறைத்து வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது தனது சமூக வலைத்தளக் கணக்கில் கருத்து வெளியிட்ட அனுர திஸாநாயக்க, பல வருடங்களாக ஜனாதிபதியும் ஏனைய குழுக்களும் தனது குடும்பம் பொதுப் பணத்தை திருடியதாக கூறிவருகின்றனர்.
அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே சங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்தார்.
இதன்போது, புதிய ஆட்சிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த ஜூலி சங், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்றிரவு இடம்பெறவுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக குறைந்துள்ளதால் இன்று எரிபொருள் விலை குறைப்பு நள்ளிரவுடன் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் அதிகளவான மது அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் தெரிவித்துவரும் கருத்துக்கள் பொய்யானவை என கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே குணசிறி கூறுகிறார்.
அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் 172 கலால் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இதன் மூலம் 220 கோடி ரூபா வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாகவும், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்த வேண்டாம் எனவும் அனைத்து மாணவர்களுக்கும் உரிய வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட வேண்டுமெனவும் இது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.