web log free
September 19, 2024
kumar

kumar

ரணில் வீட்டுக்குப் போக வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றாலும் தனக்கு செல்வதற்கு வீடு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீடற்றவர் வீட்டிற்கு செல்வதற்காக ஊர்வலம் செல்வதில் அர்த்தமில்லை, எனவே தயவு செய்து இவ்வாறான காரியங்களை செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், கண்டி மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆசன அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

"நீங்கள் தயாராக இருந்தால், ஒரு பெரிய கூட்டத்தை வரவழைக்கவும். ஆறு மாதங்களுக்குள் எனது வீட்டைக் கட்டுங்கள். வீட்டைக் கட்டி, நான் அங்கு சென்ற பிறகு, ரணிலை வீட்டிற்கு செல்லுமாறு கூறி ஆர்ப்பாட்டம் செய்ய வாருங்கள், கிராமத்தைக் கட்டுங்கள், அல்லது எனது வீட்டைக் கட்டுங்கள். அதில் ஒன்றைச் செய்யுங்கள்" என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ரத்கம தேவினிகொட பிரதேசத்தில் இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய மீன்பிடி படகு உரிமையாளர் ஆவார்.

ரத்கம தேவினிகொட பிரதேசத்தில் உள்ள படகு உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு வலை கியர் எடுப்பதற்காக வேனில் மற்றுமொரு நபருடன் வந்துள்ளார்.

அப்போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், வலைகளை ஏற்றிக் கொண்டிருந்த அவரை துப்பாக்கியால் சுட்டதாக, பொலீசார் தெரிவித்தனர்.

டி. 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசாங்கம் மிகவும் அவசியம், இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்க ஆதரவு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதம் தொடர்பில் வினவியபோதே அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

"சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்துக்கு தாம் இன்னமும் பதில் அளிக்கவில்லை.

எனினும், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நடத்தவுள்ள மாநாட்டில் தாம் பங்கேற்பதாகவும் தம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

நாட்டினுடைய பிரச்சினை, நாட்டு மக்களுடைய பிரச்சினை தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசாங்கம் மிகவும் அவசியம். இதற்கு எமது பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் எனச் சகல தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு எம்மால் இயன்ற ஒத்துழைப்பை சர்வகட்சி அரசாங்கத்திற்கு வழங்குவோம்.

ஏனெனில் ஒரு பிரச்சினையைத் தீர்த்து மற்றைய பிரச்சினைகளைத் தீர்க்காதுவிட்டால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது. எனவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண ஜனாதிபதிக்கும் அவர் தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திற்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்'' என தெரிவித்துள்ளார்.

கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், அவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவராவார்.

கடந்த மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 22.7% ஆல் குறைந்துள்ளது.

இது 18.5 மில்லியன் கிலோகிராம் தேயிலை என கணிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் தேயிலை உற்பத்தி 17.8% ஆல் குறைந்துள்ளது.

மேலும் மலையக தேயிலை உற்பத்தி 31.6% ஆலும், தாழ்நில தேயிலை உற்பத்தி 16.6% ஆலும் குறைந்துள்ளது.

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பல அறைகளை கழுமோதர போராட்டத்தின் தலைவர்கள் பலர் பலவந்தமாக பயன்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட போராளிகள் போராட்டம் ஆரம்பமானது முதல் அந்த விடுதிகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்திய பின்னர் போராட்டக்காரர்கள் அங்குள்ள இணைய சமிக்ஞைகளை பயன்படுத்தி இணையத்தில் அழைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சேதப்படுத்திய நூற்றுக்கும் மேற்பட்டோரின் கைரேகைகள் எடுக்கப்பட்டு அவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர். மனோ கணேசன் அல்ல, நான் விலகினால்கூட கூட்டணி பலமாகப் பயணிக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து கூட்டணி மட்டத்தில் மனோ கணேசன் கலந்துரையாடவில்லை. சிலவேளை, வயதாகிவிட்டதால் அவர் அந்த முடிவை எடுத்திருக்கக்கூடும்.

யார் விலகினாலும் தமிழ் முற்போக்கு கூட்டணி பலமாக பயணிக்கும். இந்த கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர்"என கூறியுள்ளார்.

கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவகம் அமைந்துள்ள காணியையும் கட்டிடத்தையும் முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு ஊடக அமைச்சிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் தொகுதிக்காக இந்த காணிகளை வழங்குவதற்கான யோசனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
லேக்ஹவுஸ் ஊழியர்களின் சம்பளம் மற்றும் கடனை வழங்குவதில் உள்ள பிரச்சினையையும் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காணி விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் கொழும்பு நகரில் வேறு இடத்தில் லேக்ஹவுஸ் நிறுவகத்தை ஆரம்பிக்க அல்லது நிறுவனங்களை கலைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் 30 அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர் பதவிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கு சமகி ஜனபலவேகயவின் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கவுள்ளதுடன் சிறு கட்சி தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சர்களின் சம்பளத்தை வழங்காமல், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.

QR அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆகஸ்ட் முதல் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன எண்ணின் கடைசி இலக்கத்துடன் தொடர்புடைய தேதியில் எரிபொருளை வழங்கும் முறை அன்றிலிருந்து ரத்து செய்யப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் கூறுகிறது.

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளனர்.