நிலவும் சவால்களை வெற்றிகொள்ள இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் போது தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை தூதுவர் உறுதி செய்தார்.
இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பான இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி மற்றும் தூதுவர்கள் மீளாய்வு செய்ததுடன், சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களின் தவறான தகவல்களைக் கண்டித்தனர்.
நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் சென்று வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க உறுதிபடுத்தியுள்ளார்.
சீனாவில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது அந்நாட்டு அரசு.
சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.
கொரோனா கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 31,444 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தவும் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் செங்சோவின் 8 மாவட்டங்களில் வசிப்பவர்கள் நாளை முதல் 5 நாள்களுக்கு உணவு வாங்கவும், மருத்துவச் சிகிச்சைக்கும் வெளியே வருவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தெற்கில் உள்ள குவாங்சோவின் உற்பத்தி மையத்திலிருந்து வடக்கே பெய்ஜிங் வரையிலான வணிகங்கள் மற்றும் குடியிருப்பு சமூகங்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கில் ஒரு கண்காட்சி மையத்தில் கொரோனாவுக்கான மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
"யார் ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் செயற்பட முடியாது
யார் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், யார் ஆட்சியை நடத்தினாலும்,
மீண்டும் மின் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது" என வெள்ளிக்கிழமை (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை 2022 இல் பெற்ற மழையை 2023 இல் பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
24 மணி நேரமும் மின்சாரம் வழங்க ஒரு யூனிட்க்கு ரூ. 56.90 எங்களுக்கு தேவைப்படுகிறது , இருப்பினும் நாங்கள் இன்னும் ஒரு யூனிட்க்கு 29 ரூபாய்க்கு தான் கொடுக்றோம் இது எங்களுக்கு பாரிய நஷ்டம். எரிபொருள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் தேவை, அவற்றை யாரும் இலவசமாக வழங்குவதில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் 75% உயர்த்தப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
இரத்மலானை புகையிரத தொழிற்சாலையில் பழுதுபார்த்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட ருமானியம் ரயில் பெட்டி இன்று (25) தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தொழிற்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெல்டிங் செய்யும் போது காற்றினால் கேபின் தீப்பிடித்ததாகவும், அந்த சிறிய பற்றவைப்பு காரணமாக கேபின் முழுவதும் தீப்பிடித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள திலினி பிரியமாலியின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க என புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான வலுவான மூன்று ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
திலினியின் தாய் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், இரண்டாவது திருமணத்தில் மேலும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாவது திருமணத்தின் கணவர் தொழிலில் கொத்தனார் என்றும் கூறுகிறார்.
குறித்த நேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நல்ல முறையில் ஒழுங்கமைக்க முடியும் எனவும், அந்தக் காலத்தில் கட்சியை உயர்வாக வைத்திருக்க இது ஒரு சந்தர்ப்பம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இருப்பதால் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியம் என்று நிபுணர் கூறினார்.
நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்ய முடியாவிட்டால், கோல்பேஸ் மைதானத்தில் அடக்கினால், கிராமங்களுக்குச் சென்று போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் செலவின தலைப்புகள் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போது பொன்சேகா இதனைத் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு மிகவும் அஞ்சுவதாகவும், அரசியலற்ற போராட்டத்தின் மூலமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இணைத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு உருது பெர்னாண்டோ யசந்த கோதாகொட தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.