web log free
May 02, 2024
kumar

kumar

பாகிஸ்தான் சியால்கோட்டில் பிரியந்த குமார என்ற இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 79 சந்தேக நபர்களின் விளக்கமறியலை அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (ATC) திங்களன்று நீட்டித்துள்ளது.

குஜ்ரன்வாலாவில் உள்ள ஏடிசி வளாகத்தைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அவர்களை பிப்ரவரி 14 ஆம் திகதி ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.

சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

மீள் அறிவிப்பு வரை நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜா தொலைப்பேசி மூலம் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்திருக்கிறார். பாரதிராஜா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தொலைப்பேசி வாயிலாக பேசி அவரை உற்சாகப் படுத்தியிருக்கிறார் இளையராஜா. இன்று பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதிராஜாவுக்கு கொரோனா உருதியானதை இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

ஐபிஎல் 2022 தொடரை நடத்த பிசிசிஐ அனைத்து விதமான வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்த வருடம் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் இந்த சீசனுக்கான ஏலம் சிறிய அளவில் அல்லாமல் மெகா அளவில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.

வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்கும் 1214 வீரர்களை தங்கள் அணிகளில் எடுக்க 10 அணிகளும் போட்டி போட உள்ளன.

இந்தியாவில் நடக்குமா : என்னதான் ஐபிஎல் 2022 தொடருக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தாலும் இந்த தொடர் வழக்கம்போல இந்திய மண்ணில் நடைபெறுமா என்ற கேள்வி தொடர்ந்து நிலவி வருகிறது. ஏனெனில் கடந்த வருடம் இந்திய மண்ணில் தொடங்கிய ஐபிஎல் தொடர் கரோனா பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு அதன்பின் பல தடைகளுக்கு பின் துபாயில் ஒரு வழியாக நடைபெற்று முடிந்தது.

அதே போன்றதொரு சூழ்நிலை இப்போதும் இந்தியாவில் நிலவி வருவதால் திட்டமிட்டபடி ஐபிஎல் 2022 தொடர் இந்திய மண்ணில் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஒருவேளை வரும் ஏப்ரல் மாதம் நிலைமை மோசமானால் சென்ற வருடம் போலவே துபாயில் இந்த தொடர் நடைபெறும் என தெரிகிறது.

அதே சமயம் ஐபிஎல் தொடரை நடத்த இலங்கை, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால் வெளிநாடுகளில் ஐபிஎல் தொடரை நடத்தினால் அதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு கட்டணம் மற்றும் வரி உட்பட பல்வேறு செலவுகளை பிசிசிஐ சந்திக்க நேரிடும்.

2 இடங்கள்: எனவே ஐபிஎல் தொடரை இந்திய மண்ணிலேயே நடத்த பிசிசிஐ முழு முயற்சிகளை எடுத்து வருகிறது. வழக்கமாக நடைபெறும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஐபிஎல் தொடரை நடத்தினால் அதற்காக இந்த நகரங்களுக்கு இடையே வீரர்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும்.

அப்படி பயணங்களை மேற்கொள்ளும் போது ஏதோ ஒரு வகையில் பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த வருடம் “ஐபிஎல் தொடரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத்” ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி : அதன்படி மொத்தம் 74 போட்டிகள் அடங்கிய ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முழுவதும் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்த லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வான்கடே மைதானம், ப்ரோபோர்ன் மைதானம், நவிமும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே ஆகிய 4 மைதானங்களில் நடைபெற உள்ளது.

அதன்பின் நடைபெற உள்ள பிளே ஆப் சுற்று மற்றும் பைனல் ஆகிய போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் இம்முறை தற்போதைய நிலைமை இப்படியே தொடரும் பட்சத்தில் 25% ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை நேரடியாக காண மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வெறும் 5000 ரூபாவே கூலியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் பொலிஸாரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரே இவ்வாறு முட்டை வீசி தாக்குதல் நடத்த 5000 ரூபா கொடுத்ததாக சந்தேகநபர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் கம்பஹா மாவட்ட பிரபல அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட போதும் அந்த அமைச்சர் அதனை முற்றாக நிராகரித்துள்ளார்.


மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் மேலும் 16 பேர் வந்ததாக சந்தேகநபர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

அநுர திஸாநாயக்க மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் மண்டபத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார். அமைச்சர் புறக்கோட்டையில் அரிசி மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்தார். இதன் போது அமைச்சர்  வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். சம்பா அரிசி, நாட்டரிசி, பச்சையரிசி ஆகியவற்றை முறையே 100, 105,115 ஆகிய  விலைகளில்  பெற்றுக்  கொள்ள முடியும் என வியாபாரிகள் இதன்போது தெரிவித்தனர். 

விரைவில் இந்த அரிசி தொகையை சதொஸ விற்பனை நிலையங்களுக்கு வழங்கி, நுகர்வோர் ஒருவருக்கு 128 ரூபா என்ற அடிப்படையில், பத்து கிலோவை வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஏனைய அரிசி வகைகளை 130 ரூபாவிற்கும் குறைந்த விலையில்  வழங்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார். 

 

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அற்புதமான அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். திருமணமான தம்பதியினர் ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் புரிந்துகொள்ள முயற்சி செய்வது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நினைத்ததை அடைய கூடிய யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் காரணமாக டென்ஷன் காணப்படும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்திற்கு என நேரத்தைச் செலவிட முடியாததாக இருக்கலாம். பெரியோர்களின் அனுமதி இன்றி நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாளாக தடைபட்டுக் கொண்டிருந்த காரியம் ஒன்று நடக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மௌனம் சாதிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகள் தேவையற்ற பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்பதால் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய உதவும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். மற்றவர்கள் முன்னிலையில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெருக கூடுதல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்தவொரு முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்றம் உண்டாகும் என்பதால் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை எளிதாக சமாளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இழுபறியில் இருந்த வேலைகள் நடக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நாணயத்துடன் நடந்து கொள்வது நல்லது. குறுக்கு வழியில் சிந்தித்தால் ஆபத்தில் முடிய வாய்ப்புகள் உண்டு.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனிப்பட்ட முடிவுகள் சாதக பலன்களை கொடுக்க இருக்கிறது. பலரும் திசை திருப்பி விட நினைத்தாலும் நீங்கள் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே நேரத்தை ஒதுக்க முடியாமல் தவிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் தொகைகள் குறையும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்கும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. வேண்டாம் என்று விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஒற்றுமை தேவை. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகும். புதிய தொழில் ஆரம்பிப்பவர்கள் கைதேர்ந்த நிபுணரின் ஆலோசனை பெற்றுக் கொண்டு முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்பு தேவை.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டில் இருப்பவர்களின் தேவையை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கை காரணமாக, சுமார் 35 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் பாரிய போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்தத் தலையீடு செய்யுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கையில் உள்ள ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதமொன்றை கடந்த 18ஆம் தேதி அனுப்பியிருந்தன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழை நிர்வாக மொழியாக்கவும், ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை அமைக்கவும் 13வது திருத்தம் வழிவகை செய்கிறது.

இப்போது இந்தத் திருத்தத்தை அமலாக்க தமிழ் கட்சிகளுக்குள்ளேயே எதிப்பு கிளம்பியுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லேயின் ஊடாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஏழு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த கடிதத்தை, நரேந்திர மோதிக்கு அனுப்பியிருந்தனர்.

இப்போது எதிர்ப்பு ஏன்?

இந்த நிலையில், 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு கோரி, இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு தற்போது எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை நிராகரிப்பது மற்றும் 13வது திருத்தம் வேண்டாம் ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

13வது திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, மக்களை தெளிவுப்படுத்துவது மற்றும் பேரணியின் ஊடாக மக்களை தெளிவுப்படுத்துதல் போன்ற திட்டங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் பாரிய போராட்ட பேரணி நடத்தப்பட்டு, மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது.

70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தாம் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, அந்த அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை இவர்கள் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தமானது, இனப் பிரச்னைக்கான தீர்வு இல்லை என கூறப்பட்டு இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியவர்கள் சொல்வதென்ன?

13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, வட மாகாண சபையை மீண்டும் கொண்டு வரவே தாம் முயற்சித்து வருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

13வது திருத்தச் சட்டமானது, தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாது என்பதனை தாமும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பில் தற்போதுள்ள சட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே தாம் கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றால், தாம் அந்த சட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து விட்டோம் என்ற வகையிலான மாயையை உருவாக்கும் நோக்கிலேயே இந்த பேரணி முன்னெடுக்கப்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்றால் என்ன?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி இந்த 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த உடன்படிக்கை அப்போது கைச்சாத்திடப்பட்டது.

இதன்படி, நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்றன. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கலந்து காணப்படுகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13வது திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக தமிழுக்கும், ஏனைய மாகாணங்களில் நிர்வாக மொழியாக சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இதேவேளை, இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் ஒன்பது மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.

எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன்படி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்பு சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரிந்து உத்தரவு பிறப்பித்தது.

இலங்கை அரசின் நிலை என்ன?

தமிழர் பிரச்னை தீர்வுக்கு இலங்கை - இந்திய உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டமே, சிறந்த ஆரம்பமாக இருக்கும் என ஆளும் தரப்பிலுள்ள தமிழ் அரசியல்வாதியான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

இந்த சட்டத்தை அமல்படுத்துமாறு, பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் இன்று ஒன்றிணைந்து, நரேந்திர மோதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

13வது திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில், சர்வதேச நாடுகள் நேரடியாக தலையிட வேண்டியதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே, உள்ளக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னைகளை கொண்டு வந்து, அதனூடாக தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கிறார் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன.

தற்போது ஷாருக்கான் நடித்துவரும் கிங் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்

இணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ, அனைவரும் ரசிக்கும்படியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கதை டிஸ்கஷன்,படப்பிடிப்பு என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் காதலித்து கரம் பிடித்த தனது மனைவி பிரியாவுடன் வெளியாடு, உள்நாடு என ஜாலியாக சுற்றி வருகிறார்.

அட்லீ தனது மனைவி பிரியாவின் சிவந்த கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.