web log free
May 03, 2024
kumar

kumar

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கை காரணமாக, சுமார் 35 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் பாரிய போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்தத் தலையீடு செய்யுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கையில் உள்ள ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதமொன்றை கடந்த 18ஆம் தேதி அனுப்பியிருந்தன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழை நிர்வாக மொழியாக்கவும், ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை அமைக்கவும் 13வது திருத்தம் வழிவகை செய்கிறது.

இப்போது இந்தத் திருத்தத்தை அமலாக்க தமிழ் கட்சிகளுக்குள்ளேயே எதிப்பு கிளம்பியுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லேயின் ஊடாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஏழு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த கடிதத்தை, நரேந்திர மோதிக்கு அனுப்பியிருந்தனர்.

இப்போது எதிர்ப்பு ஏன்?

இந்த நிலையில், 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு கோரி, இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு தற்போது எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை நிராகரிப்பது மற்றும் 13வது திருத்தம் வேண்டாம் ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

13வது திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, மக்களை தெளிவுப்படுத்துவது மற்றும் பேரணியின் ஊடாக மக்களை தெளிவுப்படுத்துதல் போன்ற திட்டங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் பாரிய போராட்ட பேரணி நடத்தப்பட்டு, மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது.

70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தாம் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, அந்த அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை இவர்கள் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தமானது, இனப் பிரச்னைக்கான தீர்வு இல்லை என கூறப்பட்டு இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியவர்கள் சொல்வதென்ன?

13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, வட மாகாண சபையை மீண்டும் கொண்டு வரவே தாம் முயற்சித்து வருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

13வது திருத்தச் சட்டமானது, தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாது என்பதனை தாமும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பில் தற்போதுள்ள சட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே தாம் கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றால், தாம் அந்த சட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து விட்டோம் என்ற வகையிலான மாயையை உருவாக்கும் நோக்கிலேயே இந்த பேரணி முன்னெடுக்கப்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்றால் என்ன?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி இந்த 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த உடன்படிக்கை அப்போது கைச்சாத்திடப்பட்டது.

இதன்படி, நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்றன. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கலந்து காணப்படுகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13வது திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக தமிழுக்கும், ஏனைய மாகாணங்களில் நிர்வாக மொழியாக சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இதேவேளை, இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் ஒன்பது மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.

எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன்படி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்பு சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரிந்து உத்தரவு பிறப்பித்தது.

இலங்கை அரசின் நிலை என்ன?

தமிழர் பிரச்னை தீர்வுக்கு இலங்கை - இந்திய உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டமே, சிறந்த ஆரம்பமாக இருக்கும் என ஆளும் தரப்பிலுள்ள தமிழ் அரசியல்வாதியான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

இந்த சட்டத்தை அமல்படுத்துமாறு, பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் இன்று ஒன்றிணைந்து, நரேந்திர மோதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

13வது திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில், சர்வதேச நாடுகள் நேரடியாக தலையிட வேண்டியதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே, உள்ளக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னைகளை கொண்டு வந்து, அதனூடாக தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கிறார் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன.

தற்போது ஷாருக்கான் நடித்துவரும் கிங் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்

இணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ, அனைவரும் ரசிக்கும்படியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கதை டிஸ்கஷன்,படப்பிடிப்பு என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் காதலித்து கரம் பிடித்த தனது மனைவி பிரியாவுடன் வெளியாடு, உள்நாடு என ஜாலியாக சுற்றி வருகிறார்.

அட்லீ தனது மனைவி பிரியாவின் சிவந்த கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழில் சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து திறமையான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா.

பாடகி, நடிகை என பல திறமைகளைக் கொண்ட ஆண்ட்ரியா இப்பொழுது கடற்கரையில் காற்று வாங்கும் க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்க அதனை பார்த்த ரசிகர்கள் அனு அனுவாக ரசித்து வர்ணித்து வருகின்றனர். 

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட பணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் உதித் லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர் அண்மையில் அலரிமாளிகைக்கு வந்து 2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.

பிரதமரின் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 5 கோடி ரூபா காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமரின் நண்பர்களை மகிழ்விப்பதற்காகவே தான் இந்தப் பணத்தைப் பெற்றதாகவும்

அந்தப் பணத்தில் ஒரு பகுதியை வேறு முதலீட்டுக்கு செலவு செய்துள்ளதாகவும் லொகு பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடலூர் அருகே கிஞ்சம் பேட்டை பகுதியில் இலங்கைத் தமிழர்கள் 3 பெண்கள் உள்பட 8 பேர் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். இவர்கள் தங்கி இருந்ததை குறித்து கியூ பிரிவு பொலிசாருக்கும், கடலோர காவல் படை பொலிசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில மாதத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு உறவினர்கள் வீட்டிலும், லாட்ஜிலும் தங்கியுள்ளனர். பின்னர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடலூர் கிஞ்சம் பேட்டையில் தங்கி வந்ததாகவும் கூறினார்கள். பின்னர் அவர்கள் முறைப்படி விசா வைத்துள்ளார்களா? என்பதனை கியூ பிரிவு பொலிசார் சோதனை செய்தனர்.

அப்போது விசா காலம் முடிந்து பல நாட்கள் ஆகியும் கடலூர் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் விசா கிடைப்பதற்காக பதிவு செய்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் க்யூ பிரிவு பொலிசார் மற்றும் கடலோர காவல் படை போலீசாரும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இது சம்பந்தமாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 பேரையும் தீவிரமாக கண்காணிப்பதோடு இவர்களுடன் வேறு யாரேனும் வந்து உள்ளார்களா? அல்லது எதற்காக இவர்கள் இங்கு வந்துள்ளனர்? விசா காலம் முடிந்தும் ஏன் இங்கு தங்கி உள்ளார்கள்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

 

தங்கத்தின் விலை சற்றுக் குறைந்துள்ளது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் தேவை உயரும் என்றும், இந்த ஆண்டு தங்கத்தின் தேவை மீண்டும் அதிகரிக்கும் என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இன்று இலங்கையில் தங்கத்தின் விலை 22 கரட் ரூபா 1,14,300/- ஆகவும் 24 கரட் ரூபா 1,23,500/- ஆகவும் உள்ளது.

கடந்த காலங்களில் உலக மற்றும் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பொங்கல் ரிலீசுக்குத் தயாராக இருந்த நிலையில் கரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘வலிமை’ ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இவ்வாறு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

குடிநீர் போத்தல்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக குடிநீர் போத்தலுக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* பணிபுரியும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும்போது அவளால் வீட்டைக் கையாள முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
*உங்களை கவனித்துக்கொள்ளக்கூடிய மற்றும் உங்கள் வீட்டை முழுமையாக நிர்வகிக்கக்கூடிய ஒரு இல்லத்தரசியை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், அவர் பணம் சம்பாதிக்கவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* கீழ்ப்படிதலுள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தால், அவள் உன்னைச் சார்ந்திருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொண்டு அவளுடைய வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
* வலிமையான பெண்ணுடன் இருக்க முடிவெடுத்தால், அவள் கடினமானவள் என்பதையும், அவளது சொந்தக் கருத்து இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
*அழகான பெண்ணை தேர்வு செய்தால் பெரிய செலவுகளை ஏற்க வேண்டி வரும்.
* நீங்கள் ஒரு வெற்றிகரமான பெண்ணுடன் இருக்க முடிவு செய்தால், அவளுக்கு குணாதிசயங்கள் உள்ளன, அவளுடைய சொந்த இலக்குகள் மற்றும் லட்சியங்கள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சரியான விஷயங்கள் எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் புதிர் உள்ளது, அது நம்மை தனித்துவமாக்குகிறது.
நிறுத்தி யோசியுங்கள் ?