web log free
May 21, 2024
kumar

kumar

 

அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இதை சமாளிக்க பல்வேறு நாடுகளிடம் கடன் பெற்று வருகிறது. கடந்த மாதம் உணவுப்பொருள் இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசுக்கு ரூ.6700 கோடி கடனுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில் தற்போது இலங்கைக்கு தேவையான எரிபொருட்களை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்போவதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் இல்லாமல் அனல் மின்நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு முழுவதும் முக்கிய நேரங்களில் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சீர் செய்ய, நாட்டின் எரிபொருள் தேவைக்காக பெட்ரோல், டீசலை வழங்குமாறு இலங்கை அரசு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சு வார்த்தையில் இலங்கைக்கு சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை வெளியீடு ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் இந்தியா முழுவதும் பிப்ரவரி 24ம் தேதி வலிமை வெளியாகிறது.

படத்தில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாக அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த நால்வரையும் தலா 2 இலட்சம் ரூபா சரீரப்பிணயில் விடுவிக்குமாறு
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி, நேற்று (02)
உத்தரவிட்டார்.

மேலும், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில்
கையொப்பமிடுமாறும் கட்டளை பிறப்பித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அரசால் தடைசெய்யப்பட்ட
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தையிட்டு விடுதலைப் புலிகளின் தலைவர்
பிரபாகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை பேஸ்புக்கில் தரவேற்றம் செய்த
குற்றச்சாட்டில் நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

கே.ஜெகன், வை. யோகேஸ்வரன், டபிள்யூ. விவேக், கே. சோபானந்தன் ஆகியேர்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின்
ஆலோசனை கிடைக்கும் வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இவர்களின் வழக்கு விசாரணைக்கு
எடுக்கப்பட்டபோது சட்டமா அதிபர் ஆலோசனைக்கமைய பிணையில்
விடுவிக்கப்பட்டனர்.


மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்.ஐ.டி. பவுண்டேஷன், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், டி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பினாய் விஸ்வம் கணவர் மனைவியிடம் சம்மதம் இன்றி கட்டாய உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமா என்ற கோணத்தில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-

இந்த நாட்டில் நடக்கிற ஒவ்வொரு திருமணத்தையும், வன்முறை திருமணம் என்று கண்டிக்க வேண்டியதில்லை. அதே போல இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பவர் என்று கருதுவதும் நல்லதல்ல.

தற்போது இதுகுறித்த வழக்கு ஒன்று நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. அதனால் இதுகுறித்து விரிவாக விவாதிப்பதற்கு மாநிலங்களவை விதி எண்.47 அனுமதிக்காது.

மாநில அரசுகளுடன் இணைந்து பெண்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இலவச உதவி எண்கள் செயல்பட்டு வருகின்றன. அவை 66 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உதவி உள்ளன. தவிரவும், செயல்பட்டு வரும் 703 ‘ஒன் ஸ்டாப்’ மையங்களும் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உதவி பெற்றிருக்கின்றனர்.

நமது நாட்டில் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பது அனைவரின் முன்னுரிமை ஆகும்.

இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.

அதைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி. சுஷில் மோடி,“வலுக்கட்டாயமாக கணவன், மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதை தண்டிக்கத்தக்க கிரிமினல் குற்றமாக அரசு அறிவிக்க ஆதரவாக உள்ளதா? இதன்மூலம் திருமணம் என்ற நிகழ்வே முடிவுக்கு வந்துவிடும்” என மற்றொரு கேள்வியையும் எழுப்பினார்.

இந்த வழக்கு நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளதால் பதில் அளிக்க முடியாது எனவும், 2017-ல் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “திருமண பாலியல் வன்கொடுமை குறித்த எந்த ஒரு சட்டமும் வரையறுக்கபடவில்லை, மேற்கத்திய நாடுகளில் இது குற்றமென குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தியாவும் இதை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டத்தை ஆண்களுக்கு எதிராக உபயோகபடுத்தும் அபாயமுள்ளது” என கூறியிருப்பதை குறிப்பிட்டார்.

 

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோவின் மகன் ஜெஹான் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் சென்று ஆஜரான பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம வைத்தியபீட மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

எத்தனோல் கடத்தல் வழக்கில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரபுக்கள் வருகை பிரிவின் ஊடாக அழைத்து பொலிஸ் நிலையத்தில் பிணை பெற்றுக் கொடுத்த சம்பவத்தில் அருந்திக்க பெனாண்டோ மீது ஜனாதிபதி கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சுதந்திர தினத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் ரஞ்சனின் பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஞ்சன் ராமநாயக்கவும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். 4ம் திகதி காலை 11 மணிக்கு ரஞ்சனை வரவேற்க வெலிக்கடை சிறைக்கு முன் வருமாறு அந்த பதிவில் உள்ளது.

கள்ளச் சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்க பிரஜையுமான பசில்ராஜபக்‌ஷ கூறியிருப்பது தற்போது சர்சையாகியுள்ளது .

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமை,சுயாட்சி போன்றவற்றை மையமாக கொண்டு நடைபெற்றது. விடுதலைப் போராட்டம் என்பது பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம்.

ஆனால் 2005 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாக போராட்டத்தை முன்னெடுத்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். யுத்தத்தை முன்னெடுத்து செல்வதற்காக பல கோடிகளை செலவிட்டு ஆயுதங்களை கொள்வனவு செய்தது. முக்கியமாக சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை வேண்டியதாக கூறுகின்றார்கள்.

வடகொரியாவில் இருந்து பல மில்லியன் டொலர்களுக்கு கடன்களாக இராணுவ தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த இராணுவ தளபாடங்களின் கொள்வனவு மற்றும் கடன் என்பன தற்போது எங்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆனால் பசில் ராஜபக்சவின் இத்தகைய விடயம் அன்றைய பாதுகாப்பு செயலாளராக இருந்தவரும் அமெரிக்க பிரஜையாக இருக்கின்ற இன்றைய இலங்கை அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவுக்கும் (Gotabaya Rajapaksha)தெரியும். அன்றைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் இன்றைய நிதியமைச்சர் ஆகியோர் அமெரிக்க பிரஜைகளாக இருந்தவர்கள்.

அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் இவர்கள் கள்ளச்சந்தை மூலம் டொலர்களை கடத்தி அங்கிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தோம் என ஏற்றுக்கொள்கிறார். நிச்சயமாக அமெரிக்க அரசு பசில் ராஜபக்சவை மாத்திரமன்றி அன்றைய காலகட்டத்தில் இலங்கையை வழிநடத்திய தலைவர்களையும் விசாரிக்க வேண்டும்.

அன்று கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதற்கு உதவியாக இருந்தது. யுத்தத்திற்காக கள்ளச் சந்தை ஊடாக வடகொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் என்பது ஒரு மனித படுகொலைக்கும் ,மனித உரிமை மீறலுக்குமாக இலங்கை அரசாங்கத்தால் அப்போது பாவிக்கப்பட்டது என்பதுதான் முக்கியமான விடயம்.

இத்தகைய விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் நடத்தப்போவது கிடையாது .ஆனால் இவற்றை மேற்கொண்டது அமெரிக்க பிரைஜைகள் என்ற அடிப்படையிலும் இலங்கை நாடு என்பது இவர்களுடன் சம்பந்தபட்டது என்பதாலும் தங்கள் பிரஜைகளான பசில் ராஜபக்சவை விசாரிப்பதும் இலங்கை அரசு இதற்கு ஊக்கமளித்தது சம்பந்தமாகவும் விசாரிப்பது அமெரிக்காவின் கடமையென நாம் கருதுகிறோம்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் இரகசியமாக தாங்கள் நிறைவேற்றியதாகவும் தற்போதும் கூட நாடு வங்குரோத்து நிலையில் டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது ,எதுவும் இறக்குமதி செய்ய முடியாத நிலமை இருக்கிறது நாளாந்தம் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொண்டிருக்கிறது ,அரசாங்கம் எந்தவொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது இருக்கிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் கள்ளச்சந்தையில் டொலர் வாங்கலாம் என்ற சாரப்பட நிதி அமைச்சரின் கூற்று இருக்கிறது.

ஆகவே இது தொடர்பில் முழுமையான விசாரணை தேவை. ஒரு பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டில் அமெரிக்க பிரஜை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை உரிய விசாரணை செய்து அமெரிக்க அரசு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

 

கொரோனா தொற்றினால் இன்றும் 1156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 15,492ஆக உயர்ந்துள்ளது.

முன்னரைப் போன்று நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரிப்பதோடு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டுகிறது.

கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தில் தமது கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அரசாங்கத்தின் செயல் மாத்திரமே என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தெரிந்தே வர்த்தகர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுவே தமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை கொலை செய்யும் முயற்சியின் ஆரம்பம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிஸ்ஸங்கவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

இணைய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 அடுத்த தேர்தலில் 75% ஆணை பெற்று அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...

மிதுன ராசியில் இருக்கும் திருவாதிரை,புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் கடகத்தில் இருக்கும் புனர்பூசம் 4ம் பாதம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்தனுசு ராசியில் செவ்வாய், புதன், சுக்கிரன்,ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது,மகர ராசியில் சூரியன், சனி, கும்ப ராசியில் குரு, சந்திரன்,

மிதுனம், கடகத்தில் இருக்கும் திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்
தனுசு ராசியில் செவ்வாய், புதன், சுக்கிரன்,
ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது,
மகர ராசியில் சூரியன், சனி, கும்ப ராசியில் குரு, சந்திரன்

மேஷம் இன்றைய ராசிபலன் - Aries
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு ஒரு சில நாட்கள் கால தாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண காரியங்கள் கைகூடும்.

சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும்.

குடும்பத்தில் உங்கள் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளின் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் - Taurus
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும் நல்ல நாள் ஆகும் பெண்களுக்கு இனிமையான நாள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி இருக்கும் பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் தங்கள் திருமணங்களைப் பற்றி பெற்றோர்களுடன் பேசுவதற்கு உகந்த நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அவைகளை நல்ல பலன் கிடைக்கும்.

பிரயாணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியூர் பிரயாணங்கள் நல்லபடியாக அமையும் பிரயாணத்தில் வெற்றி உண்டாகும் என்பதால் வெளிநாடு செல்வது தனவரவு அதிகரிக்கும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் - Gemini
அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம் இருப்பினும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.


வேலை வாய்ப்பை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் பற்றாக்குறை இருந்து வரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வயதானவர்களுக்கு கண் மற்றும் கால் தொடர்பான பிரச்சினைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். பொறுமையைக் கைக் கொள்வது மிக முக்கியமானது பேச்சில் நிதானம் தேவை.

கடகம் இன்றைய ராசிபலன் - Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மை உண்டாகும் பொருளாதாரத்தில் பற்றாக்குறை சற்றுக் இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும்.

உணவு தொழில் சுற்றுலா தொழில் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானத்தை கொடுத்துவிடும் பெண்களுக்கு இனிமையான நாளாகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும்.

புதிய தொழில் பற்றிய சிந்தனைகள் மனதில் மேலோங்கி நிற்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் சற்று பணிச்சுமையும் கூடுதலாகத்தான் இருக்கும் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம் இன்றைய ராசிபலன் - Leo
அன்பர்களுக்கு இன்றைய நாட்டு மிகச்சிறந்த நாள் உத்தியோகத்திலிருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் அதற்கான அடித்தளங்கள் இன்று அமையும் பெண்களுக்கு நன்மை தரக்கூடிய நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும்.

பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

வழக்கு மற்றும் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் - Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் உயர்கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு செலவினங்கள் சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு என்றாலும் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கியே செல்லும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

ஒரு சிலருக்கு பிரயாணங்கள் உண்டாகலாம் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் இவைகளால் வெற்றி உண்டாகும் வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும் பெண்களுக்கு இனிமையான நாளாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து வரும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள் இருப்பினும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம் இன்றைய ராசிபலன் - Libra
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன் வந்து நிற்கும் அவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடனும் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான தொல்லைகள் ஏற்படும் என்பதால் உணவுப் பொருட்களில் சற்று கவனம் தேவை வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்துவது தொடர்பான திட்டமிடுதல்களில் ஈடுபடுவீர்கள் இவைகளில் வெற்றி உண்டாகும்.

பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தீர்வு உண்டாகும் உத்தியோகத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வீர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய உகந்தநாளாகும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் - Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை பொருளாதாரத்தில் பற்றாக்குறைகளை விரைவில் சரி செய்து விடுவீர்கள் கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும்.

காதல் தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான பல நிகழ்வுகள் உண்டு திருமணத்தைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளை ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மையாவார்கள் சொந்த தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும் சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த தன வரவு உண்டாகும் தொழில் முன்னேற்றத்திற்காக கடன் கிடைக்கும்.

தனுசு இன்றைய ராசிபலன் - Sagittarius
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்யமாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள்.

சொந்த தொழில் செய்வதற்கு திட்டமிடுவதற்கு சிறப்பான நாளாகும். உங்களுக்கு எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக உங்கள் வேலைகள் முடியும் வடக்கு மற்றும் பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாகும். வாகன வகையில் சுபச்செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு.

அலைச்சல்கள் அதிகமாகும் இருப்பினும் வருமானத்தை கொடுக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு கூடுதலான கவனத்தை தொழிலில் செலுத்த வேண்டி வரும். அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் தவிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருக்கும் இருப்பினும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்.

மகரம் இன்றைய ராசிபலன் - Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் இடத்தில் ஏற்படுவதற்கான நாள் ஆகும். அது தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் வெற்றிகரமாக கல்வியைத் தொடர்வார்கள்.

கல்வி முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் விசா தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டாகும் பொருளாதாரத்தில் முன்னேற்ற பாதையை நோக்கி பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.

கும்பம் இன்றைய ராசிபலன் - Aquarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் சற்று அனுசரித்து செல்ல வேண்டும் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு பற்றாக்குறை இருந்தாலும் எளிதில் சரி செய்து விடுவீர்கள்.

வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

தொழில் கல்வி மருத்துவ கல்வி போன்றவற்றில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கிடைக்கும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மீனம் இன்றைய ராசிபலன் - Pisces
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி உறவு சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் இறுதியில் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளியூர் வேலை வாய்ப்பு போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

சிலர் வீடு கட்டுவது வீட்டை மராமத்து செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவதற்கு திட்டம் இடுவதற்கான நல்ல நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் திறம்பட அவற்றை எதிர்கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள்.