web log free
July 27, 2024
kumar

kumar

சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இலங்கைக்கு மீண்டும் கடன்களையோ உதவிகளையோ வழங்குவதில்லை என தீர்மானித்துள்ளதாக வார இறுதி சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல்வாதிகள் குழுவுடன் தற்போது இலங்கை வந்துள்ள இராஜதந்திரிகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

கடன்கள் அல்லது உதவிகளை வழங்குவதில்லை என்ற தீர்மானம் இரண்டு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக  சீன இராஜதந்திரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்திற்கான நிர்மாண ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை பிரதான பிரச்சினையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரக் கப்பலைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையும் இதற்குக் காரணம்.

இலங்கை தற்போது 16 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்த வேண்டியுள்ளது. சீனா இலங்கைக்கு வழங்கிய பணத்தில் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் பெற்ற கடனையே திருப்பி செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கை இந்தியாவிடமிருந்து வட்டிக்கு கடன் வாங்க நேரிடும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 

தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.

ரஷிய படைகள் உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டைவிட்டு போலந்துக்கு தப்பி ஓடியதாக வதந்தி பரவியது. இதை மறுத்துள்ளார் அதிபர் ஜெலன்ஸ்கி. இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் செல்வி வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அதில் பேசிய ஜெலன்ஸ்கி, தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் கூறி உள்ளார். ‘நான் கீவ் நகரில்தான் இருக்கிறேன். இங்கிருந்துதான் எனது பணிகளை மேற்கொள்கிறேன்’ என்றும் ஜெலன்ஸ்கி தனது செல்பி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 
 
உக்ரைன் அதிபர் இருக்கும் கீவ் நகரில் இரவு பகலாக ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது

சுமார் 2 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை (RDX) வைத்திருந்த குற்றத்துக்கு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் அவர் மீது மேலும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

2007 மே 28ஆம் திகதி இரத்மலானையில் சிறப்பு அதிரடிப் படையினர் பயணித்த ட்ரக் மீது கிளைமோர் தாக்குதல்.

2009 பெப்ரவரி 7ஆம் திகதியன்று குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் தேர்தல் பேரணியின் போது மேடைக்கு அருகில் வெடிகுண்டு வெடித்து அப்போதைய ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்தது.

2009 மார்ச் 13ஆம் திகதி அக்குரஸ்ஸ, கொடபிட்டியவில் தேவாலய விழா ஒன்றில் தற்கொலை குண்டுதாரி மூலம் அமைச்சர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்பட 46 பேரை படுகொலை செய்யவும், அன்றைய ஜனாதிபதியை வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணைகளில் உள்ளன.

விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததை அடுத்து , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களையும் கொழும்புக்கு வரவழைத்த மைத்திரி

இது கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திச் செயற்பாட்டின் ஒரு பகுதி எனவும், இது முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் சிக்கல்களை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாகவும் திரு.பியதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் இவைகள் கட்சியின் எதிர்கால சீர்திருத்தங்களில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பன குறித்தும் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

உக்ரைன் மீது 10வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி தருகின்றன. தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி உக்ரைன் விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்துள்ளது.

 

 

இன்று கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 8 மணி முதல் ஞாயிறு காலை 10 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு தொடர்பான குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் முறை தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீடுகளில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 150,000 பேர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
  
 

 P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று தெரிவித்திருந்தது.

அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின் வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும் E & F பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணி நேரம் மின்வெட்டும் மற்றும் மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமையன்று (6ம் திகதி) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் A,B,C பகுதிகளுக்கு மட்டும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின் வெட்டு அமுல்ப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சேன் வார்னின் சிறப்பு என நினைப்பது, ஒரு துடுப்பாட்ட வீரர் எந்த மைதானத்தில் விளையாடினாலும், அவர் எவ்வளவு நிதானமாக ஆடினாலும் வார்ன் பந்து வீச வந்தால் ஒவ்வொரு பந்தையும் கணித்து மிகக் கவனத்துடன்தான் ஆட வேண்டியிருக்கும்.

நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் சில விளையாட்டு வீரர்கள் அவதரிப்பார்கள். அவர்களுக்கு முன்னும் அப்பேர்பட்ட ஆட்டக்காரர்களை உலகம் சந்தித்திராது. அவர்களுக்குப் பின்னும் அந்த இடம் நிரப்பப்படாமலேயே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீரர்தான் இதுவரை உலகில் தோன்றிய லெக் ஸ்பின்னர்களிலேயே சிறந்தவரான சேன் வார்ன். அவர் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்து எப்படி கிரிக்கெட் உலகெங்கும் அதிர்வலைகளை கிளப்பியதோ அதைவிட ஆயிரம் மடங்கு அவர் இறந்த செய்தி தற்போது கிரிக்கெட் உலகை அதிர வைத்திருக்கிறது.

90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்குத்தான் சேன் வார்னின் ஜாம்பவான் தன்மை முழுமையாகப் புரியும். எல்லா துடுப்பாட்டக்காரர்களும் அவரை எதிர்கொள்ள பல தூக்கமில்லா இரவுகளைச் சந்தித்தார்கள். அவர் வீசும் ஒவ்வொரு பந்தையும் வர்ணனையாளர்கள் நூறு கண் கொண்டு பார்த்தார்கள். பார்வையாளர்கள் அங்கிங்கு அசையாமல் ஒரு தேர்ந்த நடனத்தை எப்படி பார்ப்பார்களோ அப்படிப் பார்த்தார்கள். அது டெஸ்டோ, ஒருநாள் போட்டியோ வார்ன் பந்து வீசும் போது எதிர் அணியினரிடம் தோன்றும் இறுக்கமும் எதிரணி பார்வையாளர்களிடம் தோன்றும் பதற்றமும் எவற்றாலும் அளவிட முடியாதது.

1991-ம் ஆண்டு இந்திய அணி அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு நெடிய பயணம் மேற்கொண்டது. ஐந்து டெஸ்ட், மேற்கு இந்திய தீவுகளுடன் சேர்ந்து ஒரு ஒருநாள் மும்முனைப் போட்டித் தொடர், அது முடிந்து 1992 ஒரு நாள் உலக கோப்பை. டெஸ்ட் சீரிஸில் முதல் இரண்டு டெஸ்ட்களில் அடி வாங்கி மூன்றாவது டெஸ்ட் விளையாட சிட்னிக்குச் சென்றது இந்தியா. சிட்னி நமது அணி குறைவாக அடி வாங்கும் மைதானம். அந்த டெஸ்டுக்கு முந்தைய நாள் செய்திகளில் ஷேன் வார்னே என்ற லெக் ஸ்பின்னர் அறிமுகமாகப் போவதாகக் காட்டினார்கள். சிலிப் கேட்ச் பிராக்டீஸ் செய்யும் கிளிப்பிங் அது.

ஆஸ்திரேலிய சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே மரணம் - மாரடைப்பு காரணம் எனத் தகவல்!

டெஸ்ட் தொடங்கியது. ரவி சாஸ்திரி இரட்டை சதம் அடிக்க, சச்சின் சதம் அடிக்க மேட்ச் ட்ராவானது. வார்னே 150 ரன்னுக்கு மேல் கொடுத்து சாஸ்திரியின் விக்கெட்டை மட்டும் எடுத்திருந்தார். அடுத்த டெஸ்டில் விக்கெட்டே இல்லை. ஐந்தாவது டெஸ்ட் வேகப்பந்து வீச்சின் சொர்க்கமான பெர்த்தில். அந்த மேட்ச்சுக்கு வார்னேவை கழட்டி விட்டுவிட்டார்கள். இப்படியாக தன் முதல் டெஸ்ட் தொடரில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார் வார்னே.

ஆனால், அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடியிருந்த விதத்தைப் பார்த்து அடுத்தடுத்து இலங்கை, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து தொடர்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர்களிலும் அவர் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. ஆனால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு டெஸ்டில் அப்போது அவர்களின் கேப்டனாக இருந்த ரிச்சி ரிச்சர்ட்சனின் விக்கெட்டை ஒரு ஃப்லிப்பரின் மூலம் வீழ்த்தி இவருக்குள் ஏதோ இருக்கிறது என எல்லோரையும் எண்ண வைத்தார்.

1993-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து மண்ணில் கால் வைத்தது ஆஸ்திரேலியா. அப்போது யாருக்கும் தெரியாது. இந்தத் தொடர் முடியும் போது ஒரு உலக சாம்பியன் உருவாகியிருப்பார் என்று! முதல் டெஸ்டில் வார்னேவின் முதல் டெலிவரி மைக் கேட்டிங்கிற்கு. ஸ்பின்னர்களை நன்கு ஆடக்கூடியவர் அவர். ஆனால் அவரையும் ஏமாற்றி லெக் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து பாம்பு போல சீறி கேட்டிங்கின் கால்காப்பு, பேட்டைத் தாண்டி ஆப் ஸ்டம்ப் பெயில்ஸை வீழ்த்தியது. கேட்டிங்கால் அதை நம்ப முடியவில்லை. அந்தத் தொடரில் உலகின் கவனத்தை ஈர்த்தார் வார்னே. அன்று தொடங்கியது வார்னேவின் ஆட்சி.

எப்படி இந்திய கிரிக்கெட்டுக்கு மும்பையோ அப்படி உலக கிரிக்கெட்டுக்கு இங்கிலாந்து. அவர்களின் செயல்கள் பிரதானமாகப் பேசப்படும். மற்றவர்கள் மட்டம் தட்டப்படுவார்கள். அந்த இங்கிலாந்தில் எந்த சம்பவம் நடந்தாலும் உலக கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும். இந்த ஆஷஸில் வார்னேவின் பந்து வீச்சு எல்லோராலும் புகழப்பட்டது. அதற்கெல்லாம் மணி மகுடமாக கிரிக்கெட்டை அப்போது சரியாகக் கணிப்பவர் என்று பெயர் பெற்றிருந்த இம்ரான் கான், வார்னே 500 விக்கெட்டை எடுப்பார் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் அளித்தார். அப்போது வார்னே 50+ விக்கெட்டுகள்தான் எடுத்திருந்தார். இம்ரான்கானின் அந்த ஸ்டேட்மெண்ட் பலத்த அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது. ஆனால், அதையும் தாண்டி 708 விக்கெட்டுகளை வீழ்த்தி இம்ரான்கானின் நம்பிக்கையை காப்பாற்றினார் வார்னே.

வார்னேவின் சிறப்பு என நினைப்பது, ஒரு பேட்ஸ்மேன் எந்த மைதானத்தில் விளையாடினாலும், அவர் எவ்வளவு செட்டில் ஆகியிருந்தாலும் வார்னே பந்து வீச வந்தால் ஒவ்வொரு பந்தையும் கணித்து மிகக் கவனத்துடன்தான் ஆட வேண்டியிருக்கும். லூஸ் பால் என்பதே பெரும்பாலும் இருக்காது. அப்படிப் போடப்படும் பந்து கூட பேட்ஸ்மெனை ட்ராப்பில் விழ வைப்பதற்கான உத்தியோ என்றே எண்ண வைக்கும். அந்தப் பயத்தை தன் பந்து வீச்சுக்காலம் முழுவதும் பேட்ஸ்மென்களுக்கு கொடுத்து வந்தார் வார்னே.

வார்னேவின் பந்து வீச்சில் நான்கு முக்கிய வெரைட்டிகள்:

முதலில் வழக்கமான லெக்ஸ்பின். மிடில் அண்டு ஆப் ஸ்டம்பில் விழுந்து ஆப் ஸ்டம்பை நான்கு இன்சிற்குள் கிராஸ் செய்யும் டெலிவரி. பெரிய டீவியேசன் இருக்காது. மற்ற லெக் ஸ்பின்னர்களை அடிப்பது போல அசால்டாக ஸ்கொயர் கட் எல்லாம் செய்ய முடியாது. மீறி அடித்தால் விக்கெட் கீப்பர் அல்லது பர்ஸ்ட் சிலிப்பில் போய் உட்காரும். கவனமாகத் தடுத்து ஆடாவிட்டாலும் எட்ஜ் எடுத்துவிடும்.

இரண்டாவது ஃபிலிப்பர். நன்கு செட்டில் ஆன பேட்ஸ்மென்களை கூட மிரட்டிவிடும் டெலிவரி இதுதான். பிட்ச்சான உடன் லோ பவுன்ஸில் நேராகவும் விரைவாகவும் வரும். பெரும்பாலான பேட்ஸ்மென்கள் எல் பி டபிள்யூ அல்லது போல்ட் ஆகிவிடுவார்கள். தென் ஆப்பிரிக்காவின் டேரில் கல்லினனை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அந்த டெலிவரி துரத்தியதாகச் சொல்வார்கள்.

மூன்றாவது கூக்ளி. ஷேன் வார்னேவின் சமகால ஆட்டக்காரரான முஷ்டாக் அகமது, தற்போதைய லெக் ஸ்பின் சென்சேசன் ரஷீத் கான் இவர்கள் எல்லாம் ஜெப்ரி பாய்காட் பாஷையில் சொல்வதானால் கூக்ளி மெர்சண்டுகள். அதுவும் முஷ்டாக்கைப் பற்றி சொல்லும் போது, அவர் கூக்ளி பௌலர், எப்போதாவது லெக் ஸ்பின் போடுவார் என்றே சொல்வார். ஆனால், வார்னே எக்கச்சக்கமாக கூக்ளி போட மாட்டார். அதை பேட்ஸ்மென்னைத் திகைக்க வைக்கும் அஸ்திரமாகத்தான் அரிதாகப் பயன்படுத்தினார்.

நான்காவதுதான் வார்னே ஸ்பெசல். லெக் ஸ்டம்பிற்கு மிக வெளியே ஏழாவது எட்டாவது ஸ்டம்பில் விழுந்து, பேட்ஸ்மெனின் லெக் ஸ்டம்பைத் தகர்க்கும் டெலிவரி. எத்தனை பேட்ஸ்மென்கள் அதில் விழுந்திருக்கிறார்கள், கணக்கே இருக்காது. இயன் ஹீலே கீப்பராக இருந்த காலகட்டத்தில் இதை ஒரு ட்ரிக்காகவே செய்வார்கள்.

டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எண்ணற்ற வெற்றிகள் பெறவும் ஒரு பதினைந்து ஆண்டுகள் யாராலும் வீழ்த்த முடியா அணியாகவும் இருந்ததில் வார்னேவின் பங்கு அளப்பரியது. ஒரு நாள் போட்டிகளிலும் வார்னே அணிக்கு பெரும் சொத்தாக இருந்தார். வார்னேவின் ஓவரில் முக்கிய விக்கெட்டுகள் விழுந்து விடக்கூடாது எனக் கவனமாக ஆடுவார்கள். இதனால் தேவைப்படும் ரன் ரேட் கூடும். மற்ற பௌலர்களை தேவையில்லாமல் அடித்து அவுட் ஆவார்கள். 96 & 99 உலக கோப்பை செமி பைனல்களில் அவரின் பந்து வீச்சு மறக்க முடியாதது. 96 உலக கோப்பை பைனலில் அரவிந்த டி சில்வா & ரணதுங்கா இணை கவனமாக ஆட அந்தப் போட்டியில் ஆஸியால் வெற்றி பெற முடியவில்லை. 99ல் கோப்பையை வென்றனர். 2003 உலக கோப்பையில் ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக டோர்னமெண்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் வார்னே. இல்லையென்றால் இரண்டு உலக கோப்பை வாங்கிய ப்ளேயர்கள் லிஸ்டில் நிச்சயம் இடம் பிடித்திருப்பார்.

20-20 கிரிக்கெட்டிலும் தன் முத்திரையைப் பதித்தார் வார்னே. ஐபிஎல்லின் முதல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாங்கித் தந்தார். இக்கட்டான சூழலில் நன்கு பந்து வீசியும் ஸ்டேட்டர்ஜிக்கலான முடிவுகளை எடுத்தும் சிறப்பாக ஆடினார். முக்கியமாக, பல இந்திய இளைஞர்களை ஐபிஎல் மூலமாக அடையாளம் கண்டு, அவர்களை மேலும் மெருகேற்றினர். தற்போது நிறைய இந்திய கிரிக்கெட்டர்கள் லெக் ஸ்பின்னில் ஜொலிப்பதற்கு முக்கிய இன்ஸ்பிரேஷன் வார்னேதான்!

விஸ்டன் நடத்திய நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்கள் தேர்தலில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த லிஸ்டில் இருந்த ஒரே பௌலர் வார்னேதான். அப்போது ஆக்டிவ்வாக ஆடிக்கொண்டிருந்த வீரரும் அவர்தான். இத்தனை சிறப்புகள் இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை அவர் வகிக்காதது சிறு குறைதான். ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெற்ற உடன் நீண்ட கால நோக்கில் யோசித்து ரிக்கி பாண்டிங்கை அணித்தலைவர் ஆக்கினார்கள். ஆனால், அதன்பின்னர் இரண்டு மூன்று ஆண்டுகள் வார்னே தொடர்ந்து விளையாடத்தான் செய்தார். ஒரு வேளை அவர் மீது இருந்த சில குற்றச்சாட்டுகளால் (ஒரு பெண் விவகாரம், புக்கிகளுக்கு இன்பர்மேசன் கொடுத்தது போன்ற) கேப்டன் ஷிப்பைத் தரவில்லையோ என்னவோ?

என்ன நடந்திருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் கனவு உலக லெவன் அணியைத் தேர்ந்தெடுங்கள் என்று எந்த கிரிக்கெட் பிரபலத்திடம் கேட்டாலும் எப்படி ஒரு போருக்குப் புறப்படும் மன்னன் தன் முக்கிய ஆயுதமாகக் கருதும் ஒன்றை சரிபார்த்து விட்டே அடுத்தடுத்த ஆயுதங்களில் கவனம் செலுத்துவானோ அது போல வார்னேவை ஸ்பின்னர் இடத்தில் எழுதி விட்டுத்தான் அணியை செலக்ட் செய்யவே ஆரம்பிக்கிறார்கள். இது ஒன்றே போதும் வார்னேவின் திறனுக்கு!

தன் உடன் நிலை மீது ஒரு நிலையில்லாத அக்கறை கொண்டவர் வார்னே. அவர் மீது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இடத்தில் புகை பிடித்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது உண்டு. தான் அதிக எடையுடன் இருப்பதால் திடீரென உடற்பயிற்சி ரொட்டீன்களை எடுத்துக் கொள்வார். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கூட அப்படி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
ட்விட்டரில் ஷேன் வார்னேவின் கடைசி ட்வீட், இன்னொரு கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்ததற்கான அஞ்சலி ட்வீட். அதே நாளில் தற்போது வார்னேவும் இறந்துவிட்டார். இப்படியானதொரு நகைமுரணுடன் முடிந்திருக்கிறது இந்தச் சுழல் ஜாம்பவானின் சகாப்தம்!

நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிட்டீர்கள் வார்னே!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார்.

மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.